rambal
05-04-2003, 03:58 PM
அறுவை மெகா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்
என் அறுவை மெகா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு....
நொந்து போன குடும்பத்தலைவன் எழுதிக்கொள்வது,
நலமா?
ம்ம்ம் நீங்கள் நலமாக இருப்பீர்கள்...
நான் தான் நலமாக இல்லை...
உங்கள் சீரியலால் பாதிக்கப்பட்டுள்ளேன்...
எப்படி தெரியுமா?
இப்பெல்லாம்
கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு வந்தாலே,
எவளுடன் சுத்திட்டு வற்றீங்க என்று மனைவி
கேட்கிறாள்...
என் பையன்
அம்மான்னு கூப்பிட மாட்டேங்கிறான்...
உங்க சீரியலைப் பாத்துட்டு
சித்தின்னு கூப்பிடுறான்...
இல்லைன்னா
என் அப்பாவின் மனைவிங்கிறான்...
எல்லாம் உங்களின் சீரியல் பண்ணிய விளைவு..
எந்த ஆண்மகனையும் உத்தமனாக காண்பிக்கவில்லை...
சரி,
இப்படியெல்லாம் பெண்களா?
என எண்ணுமளவிற்கு
வில்லிகள்....
மாமியார் கொடுமைக்காரி
அல்லது
மருமகள் கொடுமைக்காரி
ஒன்னுவிட்ட சகோதரன், சகோதரி...
இப்படி எல்லாத்தையும் கெட்டவனா
காண்பிச்சிட்டீங்க...
அதுல ஒரே ஒரு குடும்பமோ அல்லது
ஒரு பெண்ணோ அப்பாவி...
இந்தக் கொடுமைக் காரங்களால்
அவ பாதிக்கப்பட்டு பின் அவள்
அவங்களை பழி வாங்ற மாதிரி கதைங்க...
அதெப்படி சலிக்காமல்
உங்களால் மட்டும் அழுகைகளை
தினம் தினம் காண்பிக்கமுடியுது...
அதிகபட்சமான அழுகைகளா
குடும்பத்துல குழப்பம்...
இப்பெல்லாம்
என் மனைவி டீவியில வற்ற
கதாபாத்திரங்களுக்காக அழுகுறா...
வீடான வீட்ல இப்படி அழுதா
நல்லாவா இருக்கு...
சும்மாவே ஆபீசில
பிரிச்னைன்னு வீட்டுக்கு வந்தா
வீட்டுலையும் அழுகை...
இப்படி இருந்தா எப்படி?
சரி,
இது ஒரு பக்கம் இருக்கட்டும்...
உங்களால
நான் ராத்திரி பட்டினி,
பகல்லையும் பட்டினி...
ரொம்ப நொந்துட்டேன்...
இந்தக்கூத்து ஒருபக்கம்...
பக்தி சீரியல்ங்ற பேர்ல...
அதை சொல்லனும்னா
அதுக்கு முழுசா இன்னொரு கடிதமே எழுதனும்....
அதென்ன தலைப்பு....
எல்லாம் பெண்களோட பெயர்லயே..இல்லைன்னா
உறவு முறைகளை தலைப்பா வைச்சிடுறீங்க...
அதுல இன்னும் பாக்கி
ஒன்னுவிட்ட சித்தப்பாவும்,
என்னோட கொள்ளுப்பாட்டியும்தான்....
வேற தலைப்பே கிடையாதா?
சரி,
இந்த சீரியலை எல்லாம்
உங்கள் வீட்டுல பாக்கிறது கிடையாதா?
இல்லை உங்க வீட்ல டீவியே கிடையாதா?
காலையிலே 10 மணிக்கு ஆரம்பிச்சு
ராத்திரி 10 மணி வரைக்கும் சீரியல்...
வாழ்க்கையே சீரில்லாம போயிடுச்சு...
சட்டத்தில தண்டனைங்கள திருத்தி எழுதப்போறாங்களாம்...
கொலைக்குற்றவாளிக்கு சாகும் வரை சீரியல் மட்டும் பாக்கனும்னு...
அந்த தண்டனைய உங்களுக்குக் கொடுத்தா எப்படி இருக்கும்னு
யோசிச்சிட்டிருக்கேன்...
உங்க ஸ்டீரியோ டைப் சீரியலை மாத்திக்குங்க....
இல்லைன்னா சீரியலே எடுக்காதீங்க...
மற்றவை அடுத்த கடிதத்தில்...
சரி வர்ட்டா...
இப்படிக்கு,
நொந்து போன குடும்பத்தலைவன்...
என் அறுவை மெகா சீரியல் தயாரிப்பாளர்களுக்கு....
நொந்து போன குடும்பத்தலைவன் எழுதிக்கொள்வது,
நலமா?
ம்ம்ம் நீங்கள் நலமாக இருப்பீர்கள்...
நான் தான் நலமாக இல்லை...
உங்கள் சீரியலால் பாதிக்கப்பட்டுள்ளேன்...
எப்படி தெரியுமா?
இப்பெல்லாம்
கொஞ்சம் லேட்டா வீட்டுக்கு வந்தாலே,
எவளுடன் சுத்திட்டு வற்றீங்க என்று மனைவி
கேட்கிறாள்...
என் பையன்
அம்மான்னு கூப்பிட மாட்டேங்கிறான்...
உங்க சீரியலைப் பாத்துட்டு
சித்தின்னு கூப்பிடுறான்...
இல்லைன்னா
என் அப்பாவின் மனைவிங்கிறான்...
எல்லாம் உங்களின் சீரியல் பண்ணிய விளைவு..
எந்த ஆண்மகனையும் உத்தமனாக காண்பிக்கவில்லை...
சரி,
இப்படியெல்லாம் பெண்களா?
என எண்ணுமளவிற்கு
வில்லிகள்....
மாமியார் கொடுமைக்காரி
அல்லது
மருமகள் கொடுமைக்காரி
ஒன்னுவிட்ட சகோதரன், சகோதரி...
இப்படி எல்லாத்தையும் கெட்டவனா
காண்பிச்சிட்டீங்க...
அதுல ஒரே ஒரு குடும்பமோ அல்லது
ஒரு பெண்ணோ அப்பாவி...
இந்தக் கொடுமைக் காரங்களால்
அவ பாதிக்கப்பட்டு பின் அவள்
அவங்களை பழி வாங்ற மாதிரி கதைங்க...
அதெப்படி சலிக்காமல்
உங்களால் மட்டும் அழுகைகளை
தினம் தினம் காண்பிக்கமுடியுது...
அதிகபட்சமான அழுகைகளா
குடும்பத்துல குழப்பம்...
இப்பெல்லாம்
என் மனைவி டீவியில வற்ற
கதாபாத்திரங்களுக்காக அழுகுறா...
வீடான வீட்ல இப்படி அழுதா
நல்லாவா இருக்கு...
சும்மாவே ஆபீசில
பிரிச்னைன்னு வீட்டுக்கு வந்தா
வீட்டுலையும் அழுகை...
இப்படி இருந்தா எப்படி?
சரி,
இது ஒரு பக்கம் இருக்கட்டும்...
உங்களால
நான் ராத்திரி பட்டினி,
பகல்லையும் பட்டினி...
ரொம்ப நொந்துட்டேன்...
இந்தக்கூத்து ஒருபக்கம்...
பக்தி சீரியல்ங்ற பேர்ல...
அதை சொல்லனும்னா
அதுக்கு முழுசா இன்னொரு கடிதமே எழுதனும்....
அதென்ன தலைப்பு....
எல்லாம் பெண்களோட பெயர்லயே..இல்லைன்னா
உறவு முறைகளை தலைப்பா வைச்சிடுறீங்க...
அதுல இன்னும் பாக்கி
ஒன்னுவிட்ட சித்தப்பாவும்,
என்னோட கொள்ளுப்பாட்டியும்தான்....
வேற தலைப்பே கிடையாதா?
சரி,
இந்த சீரியலை எல்லாம்
உங்கள் வீட்டுல பாக்கிறது கிடையாதா?
இல்லை உங்க வீட்ல டீவியே கிடையாதா?
காலையிலே 10 மணிக்கு ஆரம்பிச்சு
ராத்திரி 10 மணி வரைக்கும் சீரியல்...
வாழ்க்கையே சீரில்லாம போயிடுச்சு...
சட்டத்தில தண்டனைங்கள திருத்தி எழுதப்போறாங்களாம்...
கொலைக்குற்றவாளிக்கு சாகும் வரை சீரியல் மட்டும் பாக்கனும்னு...
அந்த தண்டனைய உங்களுக்குக் கொடுத்தா எப்படி இருக்கும்னு
யோசிச்சிட்டிருக்கேன்...
உங்க ஸ்டீரியோ டைப் சீரியலை மாத்திக்குங்க....
இல்லைன்னா சீரியலே எடுக்காதீங்க...
மற்றவை அடுத்த கடிதத்தில்...
சரி வர்ட்டா...
இப்படிக்கு,
நொந்து போன குடும்பத்தலைவன்...