PDA

View Full Version : கண்ணீரின் மழை...!



ப்ரியன்
17-07-2009, 01:33 PM
கண்ணீரின் மழை… (http://priyanonline.com/?p=430)


மண் நான்
மழை நீ
வா,
பொழிந்துவிட்டுப் போ!
*
நீ
என் கண்ணீரின்
மழை!
*
நீ
கண்ணீரின்
கனமானவள்;
மழையின்
அழகானவள்!
*
நீ
நனைய நனைய
குடையாகிறது
மழை!
*
நனைந்திருந்து திரும்பும்
உன்னில்
திட்டு திட்டாய்
வானம்!
*
மார்போடு சேர்த்தணைத்த
அந்நாளில்
உலகெல்லாம்
ஒரே மழையாக இருந்தது!
*
வானம்
உன் மேல் எழுதும்
கவிதைக்கு
மையாகிறது மழை!
*
நீ சாய்ந்துக் கொள்ள
சிலிர்ப்பில்
துளி துளியாய்
வானம் உதிர்கிறது
மழை நனைந்த மரம்!
*
வா,
நனைவோம்
கரைவோம்
மீண்டு
மழையோடு மழையாக
பொழிவோம்!
*
நீ
நனைய
மழை குளிக்கிறது
உன்னழகில்!
*
நீ
எவ்வளவு நனைந்தாலும்
கரையா
சர்க்கரைக்கட்டி!
*
நீ நனைய
என்னில்
காமக் காய்ச்சல்!
*
நனைந்தாலும்
உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது
உடல் தீக்குச்சிகள்!
*
- ப்ரியன்.

சிவா.ஜி
20-07-2009, 01:28 PM
சின்னச் சின்ன துளிகளால் தூவப்பட்ட காதல் மழை. நனைய நனைய ஆனந்தம்.

“வானம்
உன் மேல் எழுதும்
கவிதைக்கு
மையாகிறது மழை!”

அழகு கொஞ்சும் வரிகள். மழைமையால் எழுதப்பட்ட கவிதைக்கு, கவிதை எழுதி மழைச்சாரலில் நனையவிட்ட ப்ரியனுக்கு வாழ்த்துகள்.

ஆதி
21-07-2009, 12:41 PM
பெய்யும் மழையில்
என்னுளிருந்தும் தெறிக்கிறது ஒரு துளி
சிறு நடையிட்டு
உன்னோடு நனைந்த நினைவாய்..

*

மூட்டமிட்டு வானை
மூடும் முகில்களில்
மறையும் சூரியன்
உவமையாகிறது
மையல் போதுகளில்
மயங்கும் உன் விழிகளுக்கு..

*

என் முறைகெட்ட வார்த்தைகளால்
நீ ரணமாகி அழுத தருணத்தில்
உணர்ந்தேன்
கோடை காலத்தில் பெய்து
புழுக்கைத்தை கிளப்பிவிடும் மழையை..


__________

//மார்போடு சேர்த்தணைத்த
அந்நாளில்
உலகெல்லாம்
ஒரே மழையாக இருந்தது!

வானம்
உன் மேல் எழுதும்
கவிதைக்கு
மையாகிறது மழை!

நனைந்தாலும்
உரசலில் பற்றிக் கொள்ளவே செய்கிறது
உடல் தீக்குச்சிகள்!//

என்னை மிக ஆட்கொண்ட வரிகள் இவை..

வாழ்த்துக்கள் ப்ரியன்..

நேசம்
22-07-2009, 04:50 AM
அழகான வரிகல் கொண்ட காதல் மழையில் நனைந்தோம்.பாரட்டுக்கள் ப்ரியன்

ஆதவா
22-07-2009, 04:58 PM
எப்போதும் போல......

சசிதரன்
29-07-2009, 04:56 PM
மிக அழகான வரிகள் பிரியன்...:)

இளசு
29-07-2009, 08:51 PM
அழகு வரிகள்... பாராட்டுகள் ப்ரியன்..

வான் கவிஞன்
அவள் மேனியே ஏடு
மழையே மசி..

ரசித்தேன்..

கா.ரமேஷ்
30-07-2009, 06:33 AM
அழகொடு இயைந்த மழை...
அதனோடு இணைந்த காதல்...

அற்புதம்..வாழ்த்துக்கள்..!