Honeytamil
14-07-2009, 06:28 AM
சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன். போத்தலயவும் துள்ளினார். அவரது காலை உடைத்துப் போட்டேன். தற்போது எனது தேர்தல் தொகுதியில் எங்களது ஒருவனே எனக்கு விளையாட்டுக் காட்டுகின்றார். அவரது ஊருக்கே வந்து, இன்று நான் இதனைக் கூறுகின்றேன், அவருக்கு நான் இன்னமும் ஐந்து நாட்கள் மாத்திரம் கொடுக்கின்றேன். களனி பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லையென்றால், நான் கெட்டவன் என்று கூறவேண்டாம். அதன்பின்னர் என்னை யாரும் குறைகூறக் கூடாது. எனது வார்த்தை மீறிச் சென்றால், அவரையும் லசந்தவை அனுப்பிய இடத்திற்கு அனுப்பிவிடுவேன்' என அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும் வரையில் தாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை எனவும், எந்தவொரு சக்திக்கும் அடிபணியப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா கெக்கரித்துள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும் வரையில் தாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை எனவும், எந்தவொரு சக்திக்கும் அடிபணியப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா கெக்கரித்துள்ளார்.