நாகரா
11-07-2009, 03:04 PM
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
சுதந்திர ஈழம் அடைந்து விட்டோமென்று (ஆடுவோமே..)
எங்கும் சமரசம் என்பதே பேச்சு
யாவரும் மனிதரே என்றுறுதியாச்சு (ஆடுவோமே..)
எங்கும் சமாதானம் என்பதே பேச்சு
இருதய நேசமே இனியெம் உயிர் மூச்சு (ஆடுவோமே..)
சிங்கமும் புலியும் அன்பில் பசுவாச்சு
நெஞ்சிலே பொங்குதே அருளமிழ்த ஊற்று (ஆடுவோமே..)
கற்பகத் தருவாய் ஈழம் உயிர்த்தாச்சு
வீழ்ந்த மெய்களும் அதற்கெருவாச்சு (ஆடுவோமே..)
பாழும் இனவாதம் ஓடியே போச்சு
நேசப் பிரபாகரம் ஊட்டுதே மூச்சு (ஆடுவோமே..)
இழியுந் தமிழமுதம் ஈழமென்றாச்சு
விழுங்கி எழுந்தயாம் தேவரென்றாச்சு (ஆடுவோமே..)
சுதந்திர ஈழம் அடைந்து விட்டோமென்று (ஆடுவோமே..)
எங்கும் சமரசம் என்பதே பேச்சு
யாவரும் மனிதரே என்றுறுதியாச்சு (ஆடுவோமே..)
எங்கும் சமாதானம் என்பதே பேச்சு
இருதய நேசமே இனியெம் உயிர் மூச்சு (ஆடுவோமே..)
சிங்கமும் புலியும் அன்பில் பசுவாச்சு
நெஞ்சிலே பொங்குதே அருளமிழ்த ஊற்று (ஆடுவோமே..)
கற்பகத் தருவாய் ஈழம் உயிர்த்தாச்சு
வீழ்ந்த மெய்களும் அதற்கெருவாச்சு (ஆடுவோமே..)
பாழும் இனவாதம் ஓடியே போச்சு
நேசப் பிரபாகரம் ஊட்டுதே மூச்சு (ஆடுவோமே..)
இழியுந் தமிழமுதம் ஈழமென்றாச்சு
விழுங்கி எழுந்தயாம் தேவரென்றாச்சு (ஆடுவோமே..)