ambulimama
09-07-2009, 02:18 PM
என்னுள் இந்த கவிதை தோன்ற காரணமாக இருந்த என் தாய்க்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்.
(அன்று)
உன்னுடன் கைக்கோர்த்து நடந்த நாட்கள்,
என் பின்னால் நீ ஓடித்திரிந்த பொழுதுகள்,
நான் உறங்குவதற்காக நீ விழித்த இரவுகள்,
எனக்கு முன் கண் விழித்த பகல்கள்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாது
கண்கள் வியர்க்கிறேன் !
விழுப்புண் வலி நான் அறிவதற்குள்
உனது கைகள் என்னை அணைக்கும்,
உனது முந்தானை என் கண்ணை துடைக்கும்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாது
வியப்பில் மூழ்கிறேன் !
(இன்று)
அலுப்பின்றி நீ சமைத்த உணவை
குற்றம் சொல்லி அலுத்தது ஒரு காலம்,
அலுப்போடு நான் சமைக்கும் உணவை
அலுப்பின்றி உண்ண வேண்டிய கட்டாயம்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
யாரும் பார்த்துவிடாது
எனக்குள் சிரிக்கிறேன் !
(என்றும்)
இறந்த பின் மண்ணில்
போவது சுகமில்லை,
இருக்கும் பொழுது
உன் மடியில் கிடப்பதே
பெறும் சுகம்
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
இறைவனிடம் வேண்டி நிற்கிறேன் !
(அன்று)
உன்னுடன் கைக்கோர்த்து நடந்த நாட்கள்,
என் பின்னால் நீ ஓடித்திரிந்த பொழுதுகள்,
நான் உறங்குவதற்காக நீ விழித்த இரவுகள்,
எனக்கு முன் கண் விழித்த பகல்கள்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாது
கண்கள் வியர்க்கிறேன் !
விழுப்புண் வலி நான் அறிவதற்குள்
உனது கைகள் என்னை அணைக்கும்,
உனது முந்தானை என் கண்ணை துடைக்கும்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாது
வியப்பில் மூழ்கிறேன் !
(இன்று)
அலுப்பின்றி நீ சமைத்த உணவை
குற்றம் சொல்லி அலுத்தது ஒரு காலம்,
அலுப்போடு நான் சமைக்கும் உணவை
அலுப்பின்றி உண்ண வேண்டிய கட்டாயம்,
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
யாரும் பார்த்துவிடாது
எனக்குள் சிரிக்கிறேன் !
(என்றும்)
இறந்த பின் மண்ணில்
போவது சுகமில்லை,
இருக்கும் பொழுது
உன் மடியில் கிடப்பதே
பெறும் சுகம்
தாயே
நினைத்துப் பார்க்கிறேன்
இறைவனிடம் வேண்டி நிற்கிறேன் !