rambal
05-04-2003, 03:44 PM
வாழாவெட்டி..
(இது என் நெருங்கிய தோழியின் கதை.. விவாகரத்திற்கு அவர் சொன்ன காரணங்கள்..)
நேற்றோடு
முடிந்தன சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்ட நம் பந்தங்கள்..
இனி நீ யாரோ..
நான் யாரோ..
மூன்று முடிச்சு
என்பது
வெறும் கயிறுதான் எனக்கு..
அதையும் உனக்கு
பத்திரமாக
தபாலில் அனுப்பி வைக்கிறேன்...
விடுதலை கிடைத்த
சந்தோசத்தில்
ஆனந்தமாயிருக்கிறேன்...
இனி என் வாழ்வு
எனக்கே
எனக்கு மட்டும்..
இதில் பங்கு
போட யாருக்கும்
உரிமை கிடையாது..
மாரியம்மன் கோவில்
திருவிழாவில் வெட்டப்படும்
ஆடாகத்தான் அழைத்து
வரப்பட்டு வெட்டப் பட்டேன்...
இளமையிலேயே
முதுமை அடைந்த
கிழவன் நீ...
முதலிரவிலேயே
தெரிந்து கொண்டேன்..
சந்தேகத்தில்
ராமனுக்கு
தம்பி நீ..
என் நண்பன் வந்து போனதும்
புரிந்து கொண்டேன்..
நீ சுட்டது
என் கனவுகளை
மட்டுமல்ல..
என் உடலையும்தான்..
என் வேலைக்கு
தடை உத்தரவு..
வீட்டோடு காவல்..
போதும் இந்தக் கொடுமைகள்
என்று விவாகரத்திற்கு
விண்ணப்பம் கொடுத்த பொழுதும்
நடத்தை கெட்டவள்
பட்டம் கொடுத்துதான்
எனக்கு சுதந்திரம் கொடுத்தாய்...
இனி,
இந்தக் குயில் கூவும்..
கூண்டிலிருந்தல்ல..
அடர்ந்த பச்சை மரங்களில் இருந்து..
(இது என் நெருங்கிய தோழியின் கதை.. விவாகரத்திற்கு அவர் சொன்ன காரணங்கள்..)
நேற்றோடு
முடிந்தன சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்ட நம் பந்தங்கள்..
இனி நீ யாரோ..
நான் யாரோ..
மூன்று முடிச்சு
என்பது
வெறும் கயிறுதான் எனக்கு..
அதையும் உனக்கு
பத்திரமாக
தபாலில் அனுப்பி வைக்கிறேன்...
விடுதலை கிடைத்த
சந்தோசத்தில்
ஆனந்தமாயிருக்கிறேன்...
இனி என் வாழ்வு
எனக்கே
எனக்கு மட்டும்..
இதில் பங்கு
போட யாருக்கும்
உரிமை கிடையாது..
மாரியம்மன் கோவில்
திருவிழாவில் வெட்டப்படும்
ஆடாகத்தான் அழைத்து
வரப்பட்டு வெட்டப் பட்டேன்...
இளமையிலேயே
முதுமை அடைந்த
கிழவன் நீ...
முதலிரவிலேயே
தெரிந்து கொண்டேன்..
சந்தேகத்தில்
ராமனுக்கு
தம்பி நீ..
என் நண்பன் வந்து போனதும்
புரிந்து கொண்டேன்..
நீ சுட்டது
என் கனவுகளை
மட்டுமல்ல..
என் உடலையும்தான்..
என் வேலைக்கு
தடை உத்தரவு..
வீட்டோடு காவல்..
போதும் இந்தக் கொடுமைகள்
என்று விவாகரத்திற்கு
விண்ணப்பம் கொடுத்த பொழுதும்
நடத்தை கெட்டவள்
பட்டம் கொடுத்துதான்
எனக்கு சுதந்திரம் கொடுத்தாய்...
இனி,
இந்தக் குயில் கூவும்..
கூண்டிலிருந்தல்ல..
அடர்ந்த பச்சை மரங்களில் இருந்து..