த.ஜார்ஜ்
30-06-2009, 01:06 PM
யப்பா! பதினாறு வருடங்கள்.
இந்த அழுக்கடைந்த அடுக்களையே உலகமாகி, அதன் துர்நாற்றமே சுவாசமாகி, அதன் இருட்டே வாழ்க்கையாகி.... அந்த கொடிய நரகம் இன்றோடு முடிந்து விடப் போகிறதா?
சே! என்ன கேவலமான அடிமை வாழ்க்கை.
இந்த ஊர் எப்படி இருக்கும்.அதன் தெருக்கள்.மனிதர்கள்,அவர்கள் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும் என்று எதுவுமே தெரியாத சிறை மாதிரி.....
பார்க்க வேண்டியவைகள பார்க்கக் கூடாமலும்,பேசத்தெரிந்தும் யாருடன் பேசுவது என்று தெரியாமல் மௌனத்தை சேமித்து..... இதெல்லாம் முடிந்து விடப் போகிறதா.
அப்பப்பா.... இன்று ஒரு நாளையும் சகித்துக் கொள்ள வேண்டும். பிறகு.....
இவள் மூன்று வயதிலேயெ இந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து விட்டவள். வீட்டுக்காரம்மா கதைகதையாய் சொல்வதிலிருந்து தெரிந்து கொண்டதுதான் இது.புருசனால் கைவிடப் பட்ட இவளது தாய்- அதாவது இந்த வீட்டின் பழைய வேலைக்காரி – இவளை அனாதையாய் இங்கே விட்டுவிட்டு ஓடிவிட.....
“அந்த கழிசடை போனதுபோல இந்த எழவும் எவன் கூடயாவது ஓடிப்போயிடக் கூடாதே”-என்று பக்கத்து வீட்டுக்காரியிடம் பெசிப் பேசியாவது அந்த எஜமானி இவளை பராமரித்து வந்திருக்கிறாள்.அவளுக்கு சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைத்துவிட்ட ஆதாயம்.
இந்த வீட்டுக்கார அம்மாவின் குணமே அலாதியானது.
“ஏண்டி நாயே.வென்னீர் போடச் சொன்னா அங்க எவனை பார்த்து இளிச்சிட்டு நிக்கிற...” என்று சொல்கிறவள் பிறகு ரகசியமாய் கூப்பிட்டு, “ அந்த பயலுக ஒரு மாதிரிடி.. . நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்க.” என்று தாய்க்குரிய பரிவுடன் சொல்லி வைத்திருக்கிறாள்தான்.
ஆனால் கேட்கிறபோதே மனசொடிந்து போகிற மாதிரியான அவளது பேச்சு சட்டென்று வெறுப்பைதான் தருகிறது.
“உங்கிட்ட எத்தனை தரம்டி சொல்றது அடுக்களையை விட்டு வெளியே வராதேன்னு... மயக்கிடாதேடிம்மா.... என் பிள்ளைகளை....”
இவளுக்கு இதயத்தை தேடி எடுத்து நெருஞ்சியால் குத்திய மாதிரி இருக்கும்.
அன்றோரு நாள்.கோவில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி போட்ட போது, “மைதிலி வீட்டை பத்திரமா பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அனைவரும் போய்விட .... இவளுக்கும் ஆசை வருகிறது. அதென்ன டான்ஸ்..நாமளும் பார்த்தாதான் என்ன.... வீட்டைப் பூட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்னாலேயே சென்று....
ஆட்டம் பார்க்க பார்க்க சந்தோசமாயிருக்க அதிலேயே ஒன்றிப்போனாள். எல்லாம் முடிந்து மனமில்லாமலே வீடு வந்த போது வாசல் நடையில் எல்லோரும் விழித்துக் கொண்டு காத்திருக்க.... பகீரென்றாகிப் போனது. பழுக்கக் காய்ச்சிய கம்பி அன்று ஏற்படுத்திய தழும்பு தொடையில் இன்னும் இருக்கிறது
இப்படி இவள் வாழ்வின் இருண்ட பகுதியையே பார்த்து பழக்கப்பட்டவள்.எங்கு போனாலும் கண்ணைக் கட்டி கடிவாளம் மாட்டப்பட்ட பிராணி மாதிரியான பிரமை....
சமீபகாலமாகத்தான் விடியற்காலையில் வரும் பால்காரனின் சைக்கிள் மனியோசையில் ஒரு நம்பிக்கை பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது
பால் வாங்குகிற நிமிட நேரத்திலேயே இவளுக்காக அவன் நிரம்ப கவலைப்பட்டான்.” நீ எப்படிம்மா இந்த நரகத்துக்குள்ள வாழற.....” என்று வியந்திருக்கிறான்.
“ நீ இருக்கிற அழகுக்கும் திறமைக்கும்,இங்க கிடந்து அவதிபட வேண்டிய அவசியமில்லை.” என்று உருகியிருக்கிறான்
“உன்னை எப்படி நடத்துறதுன்னே இவங்களுக்கு தெரியலை.”
என்றெல்லாம் சொல்லியவன் கடைசியில் கேட்டே விட்டான் அவள் எதிர்பார்த்ததை.
“ நீ என்கூட வந்திடறயா..... எங்காவது போய் பிழைச்சுக்கலாம்”
இவளுக்கு ஜிவ்வென்று எங்கோ பறப்பது மாதிரி உணர்வு.
“ நான் ஒண்ணும் வசதி படச்சவனில்லை ஏதோ கிடைக்கிறதை வச்சு சாப்பிடலாம்....இப்படி நீ தனியா கிடந்து தவிக்க வேண்டியதில்லை. என்ன சொல்ற....” என்ற போது இயந்திரத்தனமாய் இவள் தலையாட்டிவைக்க.....
அவர்கள் ஓடிப்போக இன்றைய இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இவளுக்கும் இந்த துக்கங்களையெல்லாம் சகித்துக்கொண்டு,வெளி உலகே மறந்து போய்,மற்ற மனிதர்களோடு தானும் சிரிக்க முடியாமல், அதட்டலும் அதிகாரமுமே வார்த்தையாக.....
வேண்டாம்.... இந்த சிறைவாழ்க்கை வேண்டாம். இதையெல்லாம் உதறிவிட்டு எங்காவது ஓடி விடுதலே உத்தமம் என்கிற மனநிலை வந்திருந்தது.
“ சுவத்தில என்னடி சினிமாவா காட்டுறாங்க.வாய பிளந்து பாத்திட்டிருக்க.... ஸ்கூல்ல இருந்து குழந்தைக வர நேரமாச்சே.ஏதாச்சும் சாப்பிட செய்தியா முண்டமே....”
வீட்டுக்காரம்மா இப்படி சொல்லிவிட்டு சும்மா இருக்கமட்டாள்.
வழக்கம் போல தலையில் ‘ நறுக்’கென்று குட்டுவாள்.அல்லது பின் புஜத்தில் அழுத்தமாய் கிள்ளுவாள்.அதன் வலி மூளைக்குத் தாவி குபுக்கென்று கண்ணீர் திரளும்..
இன்று அந்த அழுகை வரவில்லை.
நான்தான் இன்று இரவு போய்விடப் போகிறேனே.அப்புறம் உங்களால் பேச முடியாதே.என் ராஜகுமாரனோடு சுதந்திரமாக உலவப் போகிறேனே என்ற மகிழ்ச்சி..
இரவு ‘தடக் தடக்’ என்று அடித்துக் கொள்ளும் மனசோடு அடுக்களையின் ஈரமில்லாத ஒரு ஓரத்தில் படுத்துக் கிடந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே ‘விசில்’ சத்தம் கேட்டது. அவன்தான்.....அந்த பால்காரன் தான்.
ஏற்கெனவே சுருட்டி வைத்திருந்த துணிமூட்டையை எடுத்துக் கொண்டு பின்புற இருளில் கலந்தாள்.சிறிது தூரம் நடந்ததும் அவன் நிற்கிற இடத்துக்கு வர முடிந்தது.
“யாரும் பார்க்கலியே” அவன் அவசரமாக கேட்க, தலையசைத்தாள்.பதினாறு வருட கொடுமை இப்போதே முடிந்து விட்ட சந்தோசம் இவளுக்கு....
சற்று தூரத்தில் ஆட்டோ ஒன்று காத்திருக்க உள்ளே அமர்ந்தார்கள்.
அது ஏதோ ஒரு தொலைதூரத்திற்கு புறப்பட.....
அவள் குலுங்கி குலுங்கி அழுதாள். அவளுக்கே காரணம் புரிய வில்லை....துக்கமா..... சந்தோசமா.....
“ என்னம்மா ஆச்சி.ஏன் அழுவுற.....” என்றவன் ,” இந்தா இந்த மாத்திரையை போட்டுக்க. உடம்புக்கு தெம்பா இருக்கும்.” என்று நீட்டினான்.
சாப்பிட்ட நாலாவது நிமிடத்தில் அந்தரத்தில் பறப்பது போல இருந்தது. அடுத்த இருபதாவது நிமிடத்தில் நினைவுகள் அற்று போயின.
அடுத்த நாள் காலையில் ஒதுக்கு புறமாயிருந்த பஸ் நிலையத்தில் கிடந்தவளை பார்த்து ‘இந்த பிச்சைக்காரி ஏன் இத்தனை அலன்கோலமாக கிடக்கிறாள் ‘ என்றுபடி ஒதுங்கி போனவர்கள் பலர். வேடிக்கை பார்த்தனர் மற்றும் சிலர்.
இந்த அழுக்கடைந்த அடுக்களையே உலகமாகி, அதன் துர்நாற்றமே சுவாசமாகி, அதன் இருட்டே வாழ்க்கையாகி.... அந்த கொடிய நரகம் இன்றோடு முடிந்து விடப் போகிறதா?
சே! என்ன கேவலமான அடிமை வாழ்க்கை.
இந்த ஊர் எப்படி இருக்கும்.அதன் தெருக்கள்.மனிதர்கள்,அவர்கள் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும் என்று எதுவுமே தெரியாத சிறை மாதிரி.....
பார்க்க வேண்டியவைகள பார்க்கக் கூடாமலும்,பேசத்தெரிந்தும் யாருடன் பேசுவது என்று தெரியாமல் மௌனத்தை சேமித்து..... இதெல்லாம் முடிந்து விடப் போகிறதா.
அப்பப்பா.... இன்று ஒரு நாளையும் சகித்துக் கொள்ள வேண்டும். பிறகு.....
இவள் மூன்று வயதிலேயெ இந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து விட்டவள். வீட்டுக்காரம்மா கதைகதையாய் சொல்வதிலிருந்து தெரிந்து கொண்டதுதான் இது.புருசனால் கைவிடப் பட்ட இவளது தாய்- அதாவது இந்த வீட்டின் பழைய வேலைக்காரி – இவளை அனாதையாய் இங்கே விட்டுவிட்டு ஓடிவிட.....
“அந்த கழிசடை போனதுபோல இந்த எழவும் எவன் கூடயாவது ஓடிப்போயிடக் கூடாதே”-என்று பக்கத்து வீட்டுக்காரியிடம் பெசிப் பேசியாவது அந்த எஜமானி இவளை பராமரித்து வந்திருக்கிறாள்.அவளுக்கு சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைத்துவிட்ட ஆதாயம்.
இந்த வீட்டுக்கார அம்மாவின் குணமே அலாதியானது.
“ஏண்டி நாயே.வென்னீர் போடச் சொன்னா அங்க எவனை பார்த்து இளிச்சிட்டு நிக்கிற...” என்று சொல்கிறவள் பிறகு ரகசியமாய் கூப்பிட்டு, “ அந்த பயலுக ஒரு மாதிரிடி.. . நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்க.” என்று தாய்க்குரிய பரிவுடன் சொல்லி வைத்திருக்கிறாள்தான்.
ஆனால் கேட்கிறபோதே மனசொடிந்து போகிற மாதிரியான அவளது பேச்சு சட்டென்று வெறுப்பைதான் தருகிறது.
“உங்கிட்ட எத்தனை தரம்டி சொல்றது அடுக்களையை விட்டு வெளியே வராதேன்னு... மயக்கிடாதேடிம்மா.... என் பிள்ளைகளை....”
இவளுக்கு இதயத்தை தேடி எடுத்து நெருஞ்சியால் குத்திய மாதிரி இருக்கும்.
அன்றோரு நாள்.கோவில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி போட்ட போது, “மைதிலி வீட்டை பத்திரமா பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அனைவரும் போய்விட .... இவளுக்கும் ஆசை வருகிறது. அதென்ன டான்ஸ்..நாமளும் பார்த்தாதான் என்ன.... வீட்டைப் பூட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்னாலேயே சென்று....
ஆட்டம் பார்க்க பார்க்க சந்தோசமாயிருக்க அதிலேயே ஒன்றிப்போனாள். எல்லாம் முடிந்து மனமில்லாமலே வீடு வந்த போது வாசல் நடையில் எல்லோரும் விழித்துக் கொண்டு காத்திருக்க.... பகீரென்றாகிப் போனது. பழுக்கக் காய்ச்சிய கம்பி அன்று ஏற்படுத்திய தழும்பு தொடையில் இன்னும் இருக்கிறது
இப்படி இவள் வாழ்வின் இருண்ட பகுதியையே பார்த்து பழக்கப்பட்டவள்.எங்கு போனாலும் கண்ணைக் கட்டி கடிவாளம் மாட்டப்பட்ட பிராணி மாதிரியான பிரமை....
சமீபகாலமாகத்தான் விடியற்காலையில் வரும் பால்காரனின் சைக்கிள் மனியோசையில் ஒரு நம்பிக்கை பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது
பால் வாங்குகிற நிமிட நேரத்திலேயே இவளுக்காக அவன் நிரம்ப கவலைப்பட்டான்.” நீ எப்படிம்மா இந்த நரகத்துக்குள்ள வாழற.....” என்று வியந்திருக்கிறான்.
“ நீ இருக்கிற அழகுக்கும் திறமைக்கும்,இங்க கிடந்து அவதிபட வேண்டிய அவசியமில்லை.” என்று உருகியிருக்கிறான்
“உன்னை எப்படி நடத்துறதுன்னே இவங்களுக்கு தெரியலை.”
என்றெல்லாம் சொல்லியவன் கடைசியில் கேட்டே விட்டான் அவள் எதிர்பார்த்ததை.
“ நீ என்கூட வந்திடறயா..... எங்காவது போய் பிழைச்சுக்கலாம்”
இவளுக்கு ஜிவ்வென்று எங்கோ பறப்பது மாதிரி உணர்வு.
“ நான் ஒண்ணும் வசதி படச்சவனில்லை ஏதோ கிடைக்கிறதை வச்சு சாப்பிடலாம்....இப்படி நீ தனியா கிடந்து தவிக்க வேண்டியதில்லை. என்ன சொல்ற....” என்ற போது இயந்திரத்தனமாய் இவள் தலையாட்டிவைக்க.....
அவர்கள் ஓடிப்போக இன்றைய இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இவளுக்கும் இந்த துக்கங்களையெல்லாம் சகித்துக்கொண்டு,வெளி உலகே மறந்து போய்,மற்ற மனிதர்களோடு தானும் சிரிக்க முடியாமல், அதட்டலும் அதிகாரமுமே வார்த்தையாக.....
வேண்டாம்.... இந்த சிறைவாழ்க்கை வேண்டாம். இதையெல்லாம் உதறிவிட்டு எங்காவது ஓடி விடுதலே உத்தமம் என்கிற மனநிலை வந்திருந்தது.
“ சுவத்தில என்னடி சினிமாவா காட்டுறாங்க.வாய பிளந்து பாத்திட்டிருக்க.... ஸ்கூல்ல இருந்து குழந்தைக வர நேரமாச்சே.ஏதாச்சும் சாப்பிட செய்தியா முண்டமே....”
வீட்டுக்காரம்மா இப்படி சொல்லிவிட்டு சும்மா இருக்கமட்டாள்.
வழக்கம் போல தலையில் ‘ நறுக்’கென்று குட்டுவாள்.அல்லது பின் புஜத்தில் அழுத்தமாய் கிள்ளுவாள்.அதன் வலி மூளைக்குத் தாவி குபுக்கென்று கண்ணீர் திரளும்..
இன்று அந்த அழுகை வரவில்லை.
நான்தான் இன்று இரவு போய்விடப் போகிறேனே.அப்புறம் உங்களால் பேச முடியாதே.என் ராஜகுமாரனோடு சுதந்திரமாக உலவப் போகிறேனே என்ற மகிழ்ச்சி..
இரவு ‘தடக் தடக்’ என்று அடித்துக் கொள்ளும் மனசோடு அடுக்களையின் ஈரமில்லாத ஒரு ஓரத்தில் படுத்துக் கிடந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே ‘விசில்’ சத்தம் கேட்டது. அவன்தான்.....அந்த பால்காரன் தான்.
ஏற்கெனவே சுருட்டி வைத்திருந்த துணிமூட்டையை எடுத்துக் கொண்டு பின்புற இருளில் கலந்தாள்.சிறிது தூரம் நடந்ததும் அவன் நிற்கிற இடத்துக்கு வர முடிந்தது.
“யாரும் பார்க்கலியே” அவன் அவசரமாக கேட்க, தலையசைத்தாள்.பதினாறு வருட கொடுமை இப்போதே முடிந்து விட்ட சந்தோசம் இவளுக்கு....
சற்று தூரத்தில் ஆட்டோ ஒன்று காத்திருக்க உள்ளே அமர்ந்தார்கள்.
அது ஏதோ ஒரு தொலைதூரத்திற்கு புறப்பட.....
அவள் குலுங்கி குலுங்கி அழுதாள். அவளுக்கே காரணம் புரிய வில்லை....துக்கமா..... சந்தோசமா.....
“ என்னம்மா ஆச்சி.ஏன் அழுவுற.....” என்றவன் ,” இந்தா இந்த மாத்திரையை போட்டுக்க. உடம்புக்கு தெம்பா இருக்கும்.” என்று நீட்டினான்.
சாப்பிட்ட நாலாவது நிமிடத்தில் அந்தரத்தில் பறப்பது போல இருந்தது. அடுத்த இருபதாவது நிமிடத்தில் நினைவுகள் அற்று போயின.
அடுத்த நாள் காலையில் ஒதுக்கு புறமாயிருந்த பஸ் நிலையத்தில் கிடந்தவளை பார்த்து ‘இந்த பிச்சைக்காரி ஏன் இத்தனை அலன்கோலமாக கிடக்கிறாள் ‘ என்றுபடி ஒதுங்கி போனவர்கள் பலர். வேடிக்கை பார்த்தனர் மற்றும் சிலர்.