எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-06-2009, 03:38 PM
இதமாய் வருடும் சுகந்தங்களிலும்
கூரை கீற்று வழி வந்து விழும்
புழுதி வடியும் வெளிச்சத்திலும்
நிரம்பி வழிகின்றன பொய்கள்
கதறிக் கொட்டியழும் மேகங்களையும்
மலரிறைக்கும் நந்தவனங்களையும் கூட
மிச்சமிட்டு வைக்கவில்லை அவைகள்
ஒவ்வொரு வீட்டு முகவாய்களிலும்
அதில் தறிக்கும் மாந்தர் மனங்களிலும்
மண்டிக்கிடக்கின்றன கபடங்களாய்
சுவடிட்டுச் செல்லும் காலணிகளாய்
பொய்யிட்டுச் செல்கிறான் மனிதன்
தன் வழி நெடுக
கழிந்த நேற்றையப் பொழுதுக் கதையை
மெய் பட பொய்யுரைக்கிறார்
எதிர்ப்பட்டவரிடம் ஒருவர்
இடை இடையே
சர்க்கரைப் பொங்கலாய் சத்தியங்களும்
விட்ட உடன் தைக்குமொரு பொய்யை
யோசித்த படி விரைகிறான்
நேரம் கழிந்து செல்லும் காதலனொருவன்
காக்காசு பெறாததிற்கெல்லாம்
கத்தியின்றி இரத்தமின்றி
பாட்டியைக் கொல்கிறான் மாணவன்
அழும் குழந்தை தேற்றும்
அன்னையின் வார்த்தைகளில் கூட
அணுவளவும் உண்மையில்லை
காயமே பொய்யடா
அனைவர் வாயுமே பொய்யடா.
கூரை கீற்று வழி வந்து விழும்
புழுதி வடியும் வெளிச்சத்திலும்
நிரம்பி வழிகின்றன பொய்கள்
கதறிக் கொட்டியழும் மேகங்களையும்
மலரிறைக்கும் நந்தவனங்களையும் கூட
மிச்சமிட்டு வைக்கவில்லை அவைகள்
ஒவ்வொரு வீட்டு முகவாய்களிலும்
அதில் தறிக்கும் மாந்தர் மனங்களிலும்
மண்டிக்கிடக்கின்றன கபடங்களாய்
சுவடிட்டுச் செல்லும் காலணிகளாய்
பொய்யிட்டுச் செல்கிறான் மனிதன்
தன் வழி நெடுக
கழிந்த நேற்றையப் பொழுதுக் கதையை
மெய் பட பொய்யுரைக்கிறார்
எதிர்ப்பட்டவரிடம் ஒருவர்
இடை இடையே
சர்க்கரைப் பொங்கலாய் சத்தியங்களும்
விட்ட உடன் தைக்குமொரு பொய்யை
யோசித்த படி விரைகிறான்
நேரம் கழிந்து செல்லும் காதலனொருவன்
காக்காசு பெறாததிற்கெல்லாம்
கத்தியின்றி இரத்தமின்றி
பாட்டியைக் கொல்கிறான் மாணவன்
அழும் குழந்தை தேற்றும்
அன்னையின் வார்த்தைகளில் கூட
அணுவளவும் உண்மையில்லை
காயமே பொய்யடா
அனைவர் வாயுமே பொய்யடா.