இன்பக்கவி
19-06-2009, 03:44 AM
தோழியே!
கூடி மகிழ்ந்து இருந்த
காலம் மறக்கவில்லை....
மறுக்கவும் இல்லை.....
தேடி அலைந்த காலம்
எல்லாம் இன்னும்
என் கண்முன்னே....
அன்றும்...இன்றும்...
என்னைத் தேடி அலைய
வைத்துவிட்டாயே......
சிறுபெண் தான் என்றாலும்
கண்ணீர் விட்டேன்
உனக்காக....
என் கண்ணீர் எல்லாம்
என் கண்ணை மட்டுமே
கரைத்தன...
ஏனோ! உன் நெஞ்சை அல்ல....
நெருக்கம் விட்டுப் போனதால்
என் மனத்தில் இறுக்கம்
தொற்றிக் கொண்டது.....
கண்டும் காணாமல் இருப்பதை
நானும் பழகிக் கொண்டேன்
உன்னிடம் இருந்து......
தாளாத துயரம்
நெஞ்சில் என்றாலும்
என் சிரிப்புக்கு பஞ்சம்
இல்லை....
சிரிப்பை கொண்டு தான் இதுவரை
என் துக்கத்தை
கழுவிக் கொண்டு இருக்கிறேன்...
ஏனோ அது என்னை விட்டு
போக மறுக்கிறது....
கண்ணீரால் கழுவ சொல்லி
கேட்கிறது......
கண்ணீருக்கா பஞ்சம்....
எப்போதும் என்னோடு
மாறாமல்..மறையாமல்
பிரியாமல் இருப்பது
என் கண்ணீரும், துயரமும் தான்......
இதுவும் இல்லை எனில்
நான் பிணம் தான்........:traurig001:
கூடி மகிழ்ந்து இருந்த
காலம் மறக்கவில்லை....
மறுக்கவும் இல்லை.....
தேடி அலைந்த காலம்
எல்லாம் இன்னும்
என் கண்முன்னே....
அன்றும்...இன்றும்...
என்னைத் தேடி அலைய
வைத்துவிட்டாயே......
சிறுபெண் தான் என்றாலும்
கண்ணீர் விட்டேன்
உனக்காக....
என் கண்ணீர் எல்லாம்
என் கண்ணை மட்டுமே
கரைத்தன...
ஏனோ! உன் நெஞ்சை அல்ல....
நெருக்கம் விட்டுப் போனதால்
என் மனத்தில் இறுக்கம்
தொற்றிக் கொண்டது.....
கண்டும் காணாமல் இருப்பதை
நானும் பழகிக் கொண்டேன்
உன்னிடம் இருந்து......
தாளாத துயரம்
நெஞ்சில் என்றாலும்
என் சிரிப்புக்கு பஞ்சம்
இல்லை....
சிரிப்பை கொண்டு தான் இதுவரை
என் துக்கத்தை
கழுவிக் கொண்டு இருக்கிறேன்...
ஏனோ அது என்னை விட்டு
போக மறுக்கிறது....
கண்ணீரால் கழுவ சொல்லி
கேட்கிறது......
கண்ணீருக்கா பஞ்சம்....
எப்போதும் என்னோடு
மாறாமல்..மறையாமல்
பிரியாமல் இருப்பது
என் கண்ணீரும், துயரமும் தான்......
இதுவும் இல்லை எனில்
நான் பிணம் தான்........:traurig001: