PDA

View Full Version : என் சுவாசமாய் நீ.....



இன்பக்கவி
08-06-2009, 03:25 PM
உன்னையே எண்ணினேன்
என்னையே மறந்தேன்.....

இலை மூடும் பனிப்போல்
என் பாசத்தை
எனக்குள் மூடினேன்...

சொல்ல வார்த்தைகள் இருந்தும்
சொல்ல இயலாமல் நான்....

பாறையில் பூக்கும் பூவாய்
என்னுள் ஒரு ஆனந்தம்......
தனிமையில் சிரிக்கிறேன்.....
உன்னையே தேடி அலையும்
என் நெஞ்சம்.....

மௌனம் என்னை விட்டு
வெளியேறாமல் தவிக்கிறது.....

என்னை சுற்றி நிகழும்
நிஜங்கள் கூட நிழலாய்
என் முன் வலம் வருகிறது....

காற்றில் இருந்து
என் சுவாசத்தை
தனியே பிரித்து
கொடு....
என் சுவாசமாய் நீ.....

நீ!! காற்றோடு கலப்பதை
தாங்கும் இதயம்
எனக்கு இல்லை........

ஜாக்
08-06-2009, 04:19 PM
மிக இதமான கவிதை இதயத்தை வருடி சென்றது

அமரன்
08-06-2009, 05:36 PM
தன்னைக் காதலிப்பவனிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் மருகும் ஒரு மனதின் உருகலாக் கவிதை தென்படுகிறது. எனது புரிதல் சரியா தவறா என்று சொன்னீர்களேயானால் ஆழமாகச் சென்று கவிதையை விமர்சிக்கலாம்.

ஆழமான விமர்சனங்கள் ஆளுமையை விசாலிக்கும். இடைவெளி இல்லாத தோழமையை உருவாக்கும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

நேசம்
09-06-2009, 05:37 AM
காதலனின் எனண் ஒட்டங்களை அழகாக உணர்த்துகிறது இக்கவிதை.வாழ்த்துகள்

இன்பக்கவி
09-06-2009, 10:37 AM
தன்னைக் காதலிப்பவனிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் மருகும் ஒரு மனதின் உருகலாக் கவிதை தென்படுகிறது. எனது புரிதல் சரியா தவறா என்று சொன்னீர்களேயானால் ஆழமாகச் சென்று கவிதையை விமர்சிக்கலாம்.

ஆழமான விமர்சனங்கள் ஆளுமையை விசாலிக்கும். இடைவெளி இல்லாத தோழமையை உருவாக்கும். உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

ஆமாம்...உங்கள் புரிதல் சரிதான்.....
எண்ணங்களை மனதில் பூட்டி வைத்து இருப்பவரின் ஏக்கம் தான் இக்கவிதை.......
அது நான் இல்லப்பா.....:lachen001::icon_rollout::lachen001: