PDA

View Full Version : நீ யார்... இதைக்கூற...?



பாரதி
06-06-2009, 05:49 AM
இந்தியா குறித்தும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குறித்தும் ஜெயசூரியா என்ற நபர் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்.


(http://www.defence.lk/new.asp?fname=20090601_07)http://www.defence.lk/new.asp?fname=20090601_07 (http://www.defence.lk/new.asp?fname=20090601_07)

இனியும் ஏதாவது சொல்ல வேண்டி இருக்கிறதா...?

praveen
06-06-2009, 06:01 AM
அண்ணே, தமிழ்படுத்தி போடுங்களேன். அப்படியே இந்த மாதிரி பிறதள விவகாரம் பிடித்த தள லிங்க் கொடுக்கும் போது code விண்டோவில் கொடுங்கள், அப்போ தான் இந்த லிங்கை கிளிக் செய்து சென்று நம் தளம் அந்த செய்திக்கு ரெபரெர் என்று செல்வதை தவிர்க்கலாம்.

பாரதி
06-06-2009, 06:20 AM
அன்பு பிரவீண்,

நீங்கள் கூறிபடி சுட்டியை மாற்றித் தந்திருக்கிறேன். இப்போது சரியாக இருக்கிறதா..?

பொதுவாக தமிழ்ப்படுத்தி தருவதில்தான் எனக்கும் விருப்பம். ஆனால் இந்த விபரம் பெரியது; மேலும் இரு நாட்டினரின் அரசியல் கலந்தது. இதை மிக மிக கவனமாக தமிழாக்கம் செய்ய வேண்டி இருக்கும். மொழிபெயர்த்தலில் நான் அத்தனை திறமையானவன் இல்லை. சில விடயங்களை மட்டும் தமிழில் தருதல் முழுக்கருத்தையும் கூறாதது போன்ற தோற்றத்தை அமைக்கும். எனவேதான், சுட்டியை மட்டும் தந்தேன். தமிழ்படுத்த முடியாமைக்கு வருந்துகிறேன்.

இந்தத்திரியின் தலைப்பும் அப்பத்திரிக்கையாளர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக்குறித்து தொடுத்த வினாதான்... இலங்கையின் அதிகாரப்பூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இதைப்படித்த பின்னர் இங்கிருப்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ..?

கா.ரமேஷ்
06-06-2009, 06:28 AM
என்ன சொல்ல இலங்கையின் அடிவருடிகளுக்கு புரிந்தால் சரி..... இலங்கை நண்பர்கள் தேசமா இல்லை காலைவாரிவிடும் கயவர்கள் தேசமா என...

அமரன்
06-06-2009, 08:17 AM
இலங்கையின் அதிகாரப்பூர்வமான தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இதைப்படித்த பின்னர் இங்கிருப்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்களோ..?


நான் ஆர் அதைக் கூற:)

பரஞ்சோதி
06-06-2009, 11:55 AM
இலங்கை என்றுமே இந்தியாவை சந்தேக கண்ணோடு காணும் நாடு. பலமுறை இந்தியாவின் நிலைக்கு எதிராக செயல்பட்டிருக்கிறது.

ஐ.நா சபைகளில் பலமுறை இந்தியாவிற்கு எதிராக வாக்களித்திருக்கிறது.

பார்ப்போம், இனிமேல் என்ன என்ன செய்யப்போறாங்கன்னு.

இந்திய அரசாங்கத்திற்கு தவறுதலான ஆலோசனைகள் கொடுத்த இந்திய அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளின் தன்மை இனிமெல் தான் பலனை கொடுக்கும்.

praveen
07-06-2009, 05:38 AM
thamilspy என்ற தளத்தில் கண்ட மொழியாக்கம் அப்படியே தந்திருக்கிறேன். எல்லோரும் தமிழில் தெரிந்து கொள்ள


இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருப்பதற்கு அக்கட்டுரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கிருஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.

இல்லாவிட்டால் சிறிலங்காவுக்கு எதிராக பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக இணையத்தளம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு மேலும் சில விடயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரம் வழங்க மாட்டோம். ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம்.

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.

இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதை விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

இதையெல்லாம் அறிந்துதான் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தள கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அன்புரசிகன்
07-06-2009, 05:44 AM
அண்மையில் எங்கோ ஒரு திரியில் இப்படி நடக்கும் என்று நான் பதிந்திருந்தேன். ஆனால் இவ்வளவு விரைவாக நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... வாழ்த்துக்கள் இந்தியாவின் (அரசின்) இராஜதந்திர திறமைக்கு...

praveen
07-06-2009, 05:59 AM
அண்மையில் எங்கோ ஒரு திரியில் இப்படி நடக்கும் என்று நான் பதிந்திருந்தேன். ஆனால் இவ்வளவு விரைவாக நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.... வாழ்த்துக்கள் இந்தியாவின் (அரசின்) இராஜதந்திர திறமைக்கு...

அன்பு உங்கள் ஆசை என்னவென்று தெரிகிறது :).

யாரோ ஒருவன் இந்தியாவை கேள்வி கேட்பதை இலங்கை பாதுகாப்பு இனையதளத்தில் அவர்கள் கருத்து என்று வெளியிடவில்லை, மற்றவர் கருத்து என்று தான் வெளியிட்டுள்ளனர்.

உண்மையிலே இப்போது இலங்கைக்கு இந்தியாவை விட்டால் வேறு நாதியில்லை, அவர்களை போர்குற்றம் விரட்டுகிறது, பொருளாதர நெருக்கடி பாதிக்கிறது. எனவே தற்போதைக்கு இப்படி மேல்மட்டத்தில் சொல்லி தாங்களே தங்களுக்கு குழி வெட்டிக்கொள்ள மாட்டார்கள், இன்னும் சில ஆண்டுகள் இலங்கை தமிழர் பிரச்சினை வைத்தே பணம் மற்றும் இன்ன பிற ராஜாங்க உதவி பெற்று பின்னர் வேலை காட்டுவார்கள். இந்திய அரசும் அதனை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாது. பின்னர் பெரிதானதும் தான் அடக்கி வைக்கும். உதவி செய்பவர் அது தெரியாமாலா பனத்தை வாரி இறைப்பார்கள், சீனா உதவி செய்தால் அது இலங்கையில் காலூன்ற பார்க்கிறது அப்படி இப்படி, இந்தியா உதவி செய்தால் அது பயத்திலே செய்கிறது என்ற பேச்சு. மேலோட்டமாக பார்ப்பவர்கள் சீனா நெருங்குகிறது, இலங்கை அதற்கு வாலாட்டுகிறது என்கிறார்கள். உண்மையிலே இந்தியா உசாராகத்தான் இருக்கிறது என்பது பின்னால் தெரியவரும்.

அன்புரசிகன்
07-06-2009, 07:13 AM
பிரவீன்...

அந்த செய்தி வெளிவந்திருப்பது இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலிருந்து. மாறாக அது ஒரு செய்தி வெளியிடும் ஒரு தளம் அல்ல... அவர்கள் அந்த செய்தியை ஆராயாது அவர்கள் நிச்சயம் வெளியிட்டிருக்கமாட்டார்கள்...

சீனா காலூன்ன முயல்கிறது என்று சொல்கிறீர்கள். அது முயன்று வெற்றியும் பெற்றுவிட்டது. இலங்கையின் தென்பகுதியிலுள்ள அம்பாந்தோட்ட பகுதியில் அவர்களது கடற்படைத்தளம் ஒன்று நிறுவப்பட்டுவிட்டது.

இந்தியா போகமறுத்த போது துடுப்பாட்டப்போட்டிக்காக சென்றதும் இலங்கை தான்...

நான் சொன்னது ஒன்றும் அனுமானமல்ல. கடந்தகால அனுபவங்கள். காத்திருங்கள். வெகுவிரைவில் உங்களுக்கு புரியும்...