சிவா.ஜி
03-06-2009, 11:39 PM
டவுசர போட்டுக்கிட்டு, சைக்கிள் வீல குச்சியால தட்டிக்கிட்டு சிட்டா பறந்துகிட்டிருந்த காலம். குறும்பு பண்ணி அம்மாகிட்ட அடிவாங்கும்போது அழறதத்தவிர சதா சந்தோஷமா இருந்த காலம். அப்ப நான் நாலாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தேன். அஞ்சுபைசாவுக்கு கைநிறைய சீரக மிட்டாய், பத்து பைசாவுக்கு ஃபிரெண்ட்ஸ்க்கு தொக்கு, மாங்கா பத்தை, எலந்தவடையோட பார்ட்டி வெக்கற அளவுக்கு நாங்க சல்லிசா வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்தோம். என் செட்ல ஆனந்தன், நாகராஜன், மதன், சுரேசு இப்படி கடைஞ்செடுத்த அராத்துங்க இருந்தாங்க.
நாங்க இருந்தது கிருஷ்ணன் கோயில் தெரு. இப்ப இருக்கறமாதிரி ஜனங்க கசகசன்னு இல்லாம...வீதியே மைதானமா இருக்கும். ரெண்டு பணங்காயை குச்சியில கோர்த்து, முனையில U மாதிரி இருக்கிற இன்னொரு குச்சியால அதை வேகமா உருட்டிக்கிட்டுப் போற ரேஸும், சைக்கிள் வீல் ரேஸும், டயர் ரேஸும் எல்லாமே அந்தத் தெருவுலதான். காலங்காத்தால கடைங்கள்லாம் திறக்கறதுக்கு முன்னால ஒவ்வொரு பெட்டிக்கடையா படையெடுத்து சிகெரெட் பாக்கெட் கலெக்ட் பண்றதுதான் எங்க முக்கியமான வேலை.
பாஷன் ஷோ, சிஸர்ஸ், பனாமா...இந்தமாதிரி லோக்கல் அய்ட்டங்களோட எப்பவாவது ஒரு ஃபாரின் சிகெரெட் பாக்கெட் கிடைக்கும். அது யாருக்கு கிடைக்குதோ அவன் தான் அந்தத் தெருவுலயே பெரிய பணக்காரன். ஒரு பாக்கெட்டுக்கு ரெண்டு சீட்டு. எல்லாத்தையும் ஒத்தையா கிழிச்சிக்கிட்டு விளையாடுவோம். அட்டையில இருக்கிறதை திருப்பி வெச்சுக்கிட்டு அவன் ஒண்ணு போட நான் ஒண்ணு போட, அவன் போட்டப்பறம் போடற என்னோட சீட்டு ஒரே மாதிரி இருந்தா அவன் பக்கம் இருக்கிற எல்லா சீட்டும் எனக்குதான். அப்படி விளையாடி நான் சேத்த சொத்து கட்டுக் கட்டா வீட்ல இருக்கும். யார் கண்ணுக்கும் படாம அத மறைச்சு வெக்கறதுக்குள்ள போதும் போதுன்னு ஆகிடும்.
அப்படி சேத்த சொத்தை ஒருநாள் எங்கம்மா மொத்தமா தூக்கி வீட்டுக்கு முன்னால வெச்சு எரிக்கறதை, ஸ்கூல் விட்டு வரும்போது தூரத்துலருந்தே பாத்துட்டு, காக்கி புத்தகப் பையை தூக்கி கடாசிட்டு ஓடி வந்தேன்.....நான் வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிப் போச்சி. நான் கஷ்டப்பட்டு சேத்த எல்லா சொத்தும் கண்ணுக்கு முன்னால கரியாகறதப் பாத்துட்டு நான் கத்துனக் கத்துக்கு, எங்கம்மா மொத்துன மொத்து இப்பவும் வலிக்குது.
அப்பத்தான் ஒரு நாள் பாகிஸ்தான் கூடவோ, இல்ல சைனா கூடவோ..சரியா நினைவில்ல. சண்டை நடந்தது. சாயங்காலம், ஆறு மணியாச்சின்னா சங்கு ஊதுவாங்க. விளக்கெல்லாம் அணைச்சிடுவாங்க. வெளியில விளையாடிக்கிட்டிருக்கிற பசங்களையெல்லாம், ஆட்டை கிடைக்கு தப்பி விடறமாதிரி வீட்டுக்குள்ள கொண்டுபோய் அடைச்சிடுவாங்க. ரெண்டுநாள்தான் பொறுத்தோம். எங்க சுதந்திரம் பறிபோறதை சகிச்சிக்க முடியாத நாங்க, கட்டுப்பாட்டை மீறி வீதிக்கு வந்துட்டோம். ஒரு ஈ காக்கா ரோட்டுல இல்ல.
மணி ஏழு இருக்கும். இருட்டிடிச்சி. நாங்க அஞ்சுபேர். எங்க வீட்டுக்குப் பக்கத்துல முள்ளு மரங்க புதர் மாதிரி வளர்ந்து அடர்த்தியா இருக்கும். அதை தாண்டினா,ஒரு முஸ்லீம் பாய் வீடு. அந்த வீடு ஒண்ணுதான் நாலு அடி உயருத்துல காம்பௌண்ட்டோட இருக்கும். திருடன் போலீஸ் விளையாட்டு ஆரம்பிச்சோம். நல்லாத்தான் போய்ட்டிருந்தது. அப்ப பாத்து பாய் வீட்டுக்கு பக்கத்துல ஒளிஞ்சிக்கிட்டிருந்த ஆனந்தன் லபோ திபோன்னு கத்திக்கிட்டு ஓடி வந்தான்.
என்னடா ஆச்சுன்னு கேட்டா...பே....பே...ன்னு உளர்றான். என்னடான்னா...பேய்டா...பாய் வீட்டுக் காம்பௌண்ட்டுக்கு பக்கத்துல நிக்குதுன்னான். நான் அப்பவே கொஞ்சம் விவ(கா)ரமானவன் தான். அது என்னதுன்னு பாத்துடலான்னு சுரேசக் கூப்பிட்டா...அடுத்த செகெண்ட் அவன் அங்க இல்ல. எல்லாரும் ஓடிட்டானுங்க. எனக்கும் லேசா பயம். பக்கத்துலதான் எங்க வீடு. அதனால கொஞ்சூண்டு தைரியத்த வரவழைச்சுக்கிட்டு மெதுவா சத்தம் போடாம முள்ளு மரங்களுக்குள்ள நுழைஞ்சு போனேன். கொஞ்ச தூரத்துலையே அந்த உருவம் தெரிஞ்சிது. அந்தப்பக்கம் இருட்டா இருந்ததால சில் அவுட்ல உருவம் மட்டும் தெரிஞ்சுது. முகத்தைப் பாக்க முடியல. ஆனா அது ஒரு பொண்ணுங்கறது தெரிஞ்சுது. இன்னும் கொஞ்சம் கிட்ட போனா...கூடவே இன்னொரு உருவமும் தெரிஞ்சது. அது என்னோட திசையைப் பாத்து நின்னுக்கிட்டிருந்தது. அது ஒரு ஆம்பிளை...
பயமா இருந்தாலும்...என்னவோ ஒரு குருட்டு தைரியம்...இன்னும் கொஞ்சம் முன்னால போனேன்.சத்தம் கேட்டுச்சோ என்னவோ, சட்டுன்னு அந்த ஆண் உருவம் ஒரு டார்ச்லைட்டை என் முகத்துக்கு நேரா அடிச்சுது. அங்கருந்து ஒரே ஓட்டம் ரிவர்ஸுல..ஓடி வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சி போர்வையை எடுத்து கால்லருந்து தலை வரைக்கும் போத்திக்கிட்டு ரெண்டு காலையும் நெஞ்சோட சேத்து மடக்கிக்கிட்டு கண்ணை இறுக மூடிக்கிட்டு படுத்துட்டேன். அப்படியே தூங்கிட்டேன்.
அடுத்தநாள் காலையில ஸ்கூலுக்கு போகும்போது, பக்கத்துவீட்டு அக்கா, அவங்க வீட்டு காம்பௌண்ட் சுவத்துக்கு(அதை காம்பௌண்ட்ன்னு சொல்லமுடியுமா தெரியல். ரெண்டு அடி உயரம்தான் இருக்கும். மண்சுவர். ஒன்றரை அடி அகலம் இருக்கும்.)பின்னால நின்னுக்கிட்டு என்னை கூப்பிட்டாங்க,
“நேத்து ராத்திரி பாத்தத யார்கிட்டயும் சொல்லிடாதடா..இந்தா பத்துபைசா...மிட்டாய் வாங்கிக்க”ன்னு சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனா அதுக்கப்புறம் தினம் பத்து பைசா கிடைச்சிச்சி அந்த அக்கா பாய் வீட்டு பையனோட ஓடிப்போறவரைக்கும்......
சின்ன வயசுக்காலம்...இன்னும் தொடரும்
நாங்க இருந்தது கிருஷ்ணன் கோயில் தெரு. இப்ப இருக்கறமாதிரி ஜனங்க கசகசன்னு இல்லாம...வீதியே மைதானமா இருக்கும். ரெண்டு பணங்காயை குச்சியில கோர்த்து, முனையில U மாதிரி இருக்கிற இன்னொரு குச்சியால அதை வேகமா உருட்டிக்கிட்டுப் போற ரேஸும், சைக்கிள் வீல் ரேஸும், டயர் ரேஸும் எல்லாமே அந்தத் தெருவுலதான். காலங்காத்தால கடைங்கள்லாம் திறக்கறதுக்கு முன்னால ஒவ்வொரு பெட்டிக்கடையா படையெடுத்து சிகெரெட் பாக்கெட் கலெக்ட் பண்றதுதான் எங்க முக்கியமான வேலை.
பாஷன் ஷோ, சிஸர்ஸ், பனாமா...இந்தமாதிரி லோக்கல் அய்ட்டங்களோட எப்பவாவது ஒரு ஃபாரின் சிகெரெட் பாக்கெட் கிடைக்கும். அது யாருக்கு கிடைக்குதோ அவன் தான் அந்தத் தெருவுலயே பெரிய பணக்காரன். ஒரு பாக்கெட்டுக்கு ரெண்டு சீட்டு. எல்லாத்தையும் ஒத்தையா கிழிச்சிக்கிட்டு விளையாடுவோம். அட்டையில இருக்கிறதை திருப்பி வெச்சுக்கிட்டு அவன் ஒண்ணு போட நான் ஒண்ணு போட, அவன் போட்டப்பறம் போடற என்னோட சீட்டு ஒரே மாதிரி இருந்தா அவன் பக்கம் இருக்கிற எல்லா சீட்டும் எனக்குதான். அப்படி விளையாடி நான் சேத்த சொத்து கட்டுக் கட்டா வீட்ல இருக்கும். யார் கண்ணுக்கும் படாம அத மறைச்சு வெக்கறதுக்குள்ள போதும் போதுன்னு ஆகிடும்.
அப்படி சேத்த சொத்தை ஒருநாள் எங்கம்மா மொத்தமா தூக்கி வீட்டுக்கு முன்னால வெச்சு எரிக்கறதை, ஸ்கூல் விட்டு வரும்போது தூரத்துலருந்தே பாத்துட்டு, காக்கி புத்தகப் பையை தூக்கி கடாசிட்டு ஓடி வந்தேன்.....நான் வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிப் போச்சி. நான் கஷ்டப்பட்டு சேத்த எல்லா சொத்தும் கண்ணுக்கு முன்னால கரியாகறதப் பாத்துட்டு நான் கத்துனக் கத்துக்கு, எங்கம்மா மொத்துன மொத்து இப்பவும் வலிக்குது.
அப்பத்தான் ஒரு நாள் பாகிஸ்தான் கூடவோ, இல்ல சைனா கூடவோ..சரியா நினைவில்ல. சண்டை நடந்தது. சாயங்காலம், ஆறு மணியாச்சின்னா சங்கு ஊதுவாங்க. விளக்கெல்லாம் அணைச்சிடுவாங்க. வெளியில விளையாடிக்கிட்டிருக்கிற பசங்களையெல்லாம், ஆட்டை கிடைக்கு தப்பி விடறமாதிரி வீட்டுக்குள்ள கொண்டுபோய் அடைச்சிடுவாங்க. ரெண்டுநாள்தான் பொறுத்தோம். எங்க சுதந்திரம் பறிபோறதை சகிச்சிக்க முடியாத நாங்க, கட்டுப்பாட்டை மீறி வீதிக்கு வந்துட்டோம். ஒரு ஈ காக்கா ரோட்டுல இல்ல.
மணி ஏழு இருக்கும். இருட்டிடிச்சி. நாங்க அஞ்சுபேர். எங்க வீட்டுக்குப் பக்கத்துல முள்ளு மரங்க புதர் மாதிரி வளர்ந்து அடர்த்தியா இருக்கும். அதை தாண்டினா,ஒரு முஸ்லீம் பாய் வீடு. அந்த வீடு ஒண்ணுதான் நாலு அடி உயருத்துல காம்பௌண்ட்டோட இருக்கும். திருடன் போலீஸ் விளையாட்டு ஆரம்பிச்சோம். நல்லாத்தான் போய்ட்டிருந்தது. அப்ப பாத்து பாய் வீட்டுக்கு பக்கத்துல ஒளிஞ்சிக்கிட்டிருந்த ஆனந்தன் லபோ திபோன்னு கத்திக்கிட்டு ஓடி வந்தான்.
என்னடா ஆச்சுன்னு கேட்டா...பே....பே...ன்னு உளர்றான். என்னடான்னா...பேய்டா...பாய் வீட்டுக் காம்பௌண்ட்டுக்கு பக்கத்துல நிக்குதுன்னான். நான் அப்பவே கொஞ்சம் விவ(கா)ரமானவன் தான். அது என்னதுன்னு பாத்துடலான்னு சுரேசக் கூப்பிட்டா...அடுத்த செகெண்ட் அவன் அங்க இல்ல. எல்லாரும் ஓடிட்டானுங்க. எனக்கும் லேசா பயம். பக்கத்துலதான் எங்க வீடு. அதனால கொஞ்சூண்டு தைரியத்த வரவழைச்சுக்கிட்டு மெதுவா சத்தம் போடாம முள்ளு மரங்களுக்குள்ள நுழைஞ்சு போனேன். கொஞ்ச தூரத்துலையே அந்த உருவம் தெரிஞ்சிது. அந்தப்பக்கம் இருட்டா இருந்ததால சில் அவுட்ல உருவம் மட்டும் தெரிஞ்சுது. முகத்தைப் பாக்க முடியல. ஆனா அது ஒரு பொண்ணுங்கறது தெரிஞ்சுது. இன்னும் கொஞ்சம் கிட்ட போனா...கூடவே இன்னொரு உருவமும் தெரிஞ்சது. அது என்னோட திசையைப் பாத்து நின்னுக்கிட்டிருந்தது. அது ஒரு ஆம்பிளை...
பயமா இருந்தாலும்...என்னவோ ஒரு குருட்டு தைரியம்...இன்னும் கொஞ்சம் முன்னால போனேன்.சத்தம் கேட்டுச்சோ என்னவோ, சட்டுன்னு அந்த ஆண் உருவம் ஒரு டார்ச்லைட்டை என் முகத்துக்கு நேரா அடிச்சுது. அங்கருந்து ஒரே ஓட்டம் ரிவர்ஸுல..ஓடி வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சி போர்வையை எடுத்து கால்லருந்து தலை வரைக்கும் போத்திக்கிட்டு ரெண்டு காலையும் நெஞ்சோட சேத்து மடக்கிக்கிட்டு கண்ணை இறுக மூடிக்கிட்டு படுத்துட்டேன். அப்படியே தூங்கிட்டேன்.
அடுத்தநாள் காலையில ஸ்கூலுக்கு போகும்போது, பக்கத்துவீட்டு அக்கா, அவங்க வீட்டு காம்பௌண்ட் சுவத்துக்கு(அதை காம்பௌண்ட்ன்னு சொல்லமுடியுமா தெரியல். ரெண்டு அடி உயரம்தான் இருக்கும். மண்சுவர். ஒன்றரை அடி அகலம் இருக்கும்.)பின்னால நின்னுக்கிட்டு என்னை கூப்பிட்டாங்க,
“நேத்து ராத்திரி பாத்தத யார்கிட்டயும் சொல்லிடாதடா..இந்தா பத்துபைசா...மிட்டாய் வாங்கிக்க”ன்னு சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனா அதுக்கப்புறம் தினம் பத்து பைசா கிடைச்சிச்சி அந்த அக்கா பாய் வீட்டு பையனோட ஓடிப்போறவரைக்கும்......
சின்ன வயசுக்காலம்...இன்னும் தொடரும்