prapanjan
02-06-2009, 11:02 AM
மரணமடைந்த தாயிடம்
பால் அருந்தும் குழந்தை
கருவிலேயே குண்டுசிதறல்களில்
கொள்ளப்படும் மனித கருக்கள்
இறந்தவர்க்கு இரங்க
நேரமில்லை
காயம்பட்டவரின் உயிர்
காக்க அவசரமாய் அகற்றப்படும்
உடல்கள்
குழியில் வைக்கப்பட்ட
பிணத்தின் மீது
மண் எடுத்து போட
தெம்பிலாத கைகள்
தொடர் பட்டினியால்
வற்றி போன மார்புகள்
பால்பவுடர்க்கு
அல்லாடும் தமிழ்த்தாய்கள்
தள்ளு வண்டி கடைகள் போல்
அடிக்கடி இடம் மாறும்
மருத்துவமனைகள்
பாதுகாப்பு பகுதிகள்
நச்சு வாய்வு செலுத்தி
மயக்கதில்லேயே சுட்டு
கொல்லப்பட்ட தமிழ் பிண வரிசைகள்
இதையெல்லாம்
பார்த்தும் கேட்டும்
மண் மாதிரி தினசரி வாழ்வை
எத்தனை நாட்கள்
நடை பிணமாய் நடத்துவது
அவர்களோடு எங்களையும்
பால் அருந்தும் குழந்தை
கருவிலேயே குண்டுசிதறல்களில்
கொள்ளப்படும் மனித கருக்கள்
இறந்தவர்க்கு இரங்க
நேரமில்லை
காயம்பட்டவரின் உயிர்
காக்க அவசரமாய் அகற்றப்படும்
உடல்கள்
குழியில் வைக்கப்பட்ட
பிணத்தின் மீது
மண் எடுத்து போட
தெம்பிலாத கைகள்
தொடர் பட்டினியால்
வற்றி போன மார்புகள்
பால்பவுடர்க்கு
அல்லாடும் தமிழ்த்தாய்கள்
தள்ளு வண்டி கடைகள் போல்
அடிக்கடி இடம் மாறும்
மருத்துவமனைகள்
பாதுகாப்பு பகுதிகள்
நச்சு வாய்வு செலுத்தி
மயக்கதில்லேயே சுட்டு
கொல்லப்பட்ட தமிழ் பிண வரிசைகள்
இதையெல்லாம்
பார்த்தும் கேட்டும்
மண் மாதிரி தினசரி வாழ்வை
எத்தனை நாட்கள்
நடை பிணமாய் நடத்துவது
அவர்களோடு எங்களையும்