PDA

View Full Version : மரண தண்டனை எனக்கா???



இன்பக்கவி
31-05-2009, 03:56 PM
மகிழ்ச்சியோடு நீ!!!
இருட்டுக்குள்தான்
சிலகாலம்
என தெரிந்தும்
மகிழ்ந்தேன் நானும்....
நான் செய்யும்
சிறு குறும்புகளை
நீ ரசிப்பாய் என்று..
நினைத்து இருந்தேன்..
எனக்காக ஆசைஆசையாக
நீ உண்ணும் உணவுக்காய்
காத்திருந்தேன்......

என்னை பற்றியே
உன் நினைவு இருக்கும்என்று
சந்தோஷத்தில் இருந்தேன்....
உன்னையே உருக்கி
என்னை உருவாக்கும்
உன்னை கண்டு
உன் இன்முகம் மகிழ்ந்து
புன்னகை சிந்த காத்து இருந்தேன்....

உன் இரத்ததையே
எனக்கு உயிராக தரும்
உன்னை காண துடித்தேன்...
ஆனால்-நீயோ
நான் தப்பி தவறாக
உருவானது என்று
உன் கருவரையையே
என் கல்லரையாக்க
துணிவாய்
என்று நினைக்கவில்லை
நான்...

நான் தவறாக உருவானேனா??
இது என்ன கொடுமை!!
தவறு செய்தது நீ..
மரண தண்டனை எனக்கா???
பிள்ளை வரும் கேட்பவர்
பல பேர் இருக்க தப்பி
உன் கருவில் உருவானது
தவறு தான்.....

உன்னை எட்டி
உதைத்தால் வலிக்கும்
என்று என்னை தூக்கி
வீச துணிந்தாயோ!!!
உதைக்கமாட்டேன் அம்மா
எனக்கு வாழ்வு கொடு!!!!

அம்மா!!!
இந்த வார்த்தை இனி
உன்னை கூப்பிட நான்
உலகத்துக்கு வர போவது
இல்லை....

எல்லா தவறும் போகட்டும்..
என்னை அழிக்க
நினைப்பதையாவது
முறையோடு செய்துவிடு....
முறையில்லாமல்
அதையும் செய்து
என்னோடு நீயும்
மாண்டு விடாதே!!!!

என் கண்கள் கலங்குவதை
உன்னால் காணமுடியாது...
கருவிலே எனக்கு ஏன்
இந்த தூக்கு தண்டனை
அம்மா!!!!

அமரன்
02-06-2009, 03:30 PM
காற்றைத் தொடாமல் கருகிடும் மொட்டுகளின் ஒற்றை நாக்காக அமைந்த கவிதை நெஞ்சை தொடுகிறது. கொடுந்தாய்களின் நெஞ்சைச் சுடுமா கருகும் மொட்டின் கதறல்.

பாரதி
02-06-2009, 04:10 PM
கவிதையின் கரு - கர்ப்பப்பை கருவின் கதறலாக காண்கிறேன். நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுகிறேன்.

என்னுடைய பார்வையில் பட்டதை உங்கள் ஆலோசனைக்காக முன் வைக்கிறேன்.
* கவிதையில் அளவுக்கு மீறி நான், உன் போன்ற வார்த்தைகள் இடம் பெறுகின்றன.
*வரை - வறை; வரும் - வரம் எழுத்துப்பிழை பொருளை மாற்றி விடும் தன்மை இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
*கவிதை வரிகளை ஆங்காங்கே மாற்றி அமைத்திருக்கலாம். உதாரணமாக

மகிழ்ச்சியோடு நீ!!!

இருட்டுக்குள் சிலகாலம்
எனத் தெரிந்தும் மகிழ்ந்தேன் நானும்....

நான் செய்யும் குறும்புகளை
நீ ரசிப்பாய் என்று நினைத்தேன்..

ஆசைஆசையாக
நீ உண்ணும் உணவுக்காகக்
காத்திருந்தேன்......

என்னைப் பற்றியே
உன் நினைவு இருக்குமென்று
சந்தோஷத்தில் இருந்தேன்...

உன்னை உருக்கி என்னை உருவாக்கும்
உன்னைக் கண்டு, உன் இன்முகம் மகிழ்ந்து
புன்னகை சிந்துவதைக் காணக் காத்திருந்தேன்....

உன் இரத்ததையே எனக்கு உயிராக தரும்
உன்னைக் காணத் துடித்தேன்...

ஆனால்-நீயோ நான் தப்பி
தவறாக உருவானது என்றுன்
கருவறையையே கல்லறையாக்க
துணிவாய் என்று நினைக்கவில்லை

எட்டி உதைத்தால் வலிக்குமென்று
என்னைத் தூக்கி வீசத் துணிந்தாயோ!!!
உதைக்கமாட்டேன் அம்மா
எனக்கு வாழ்வு கொடு!!!!

நான் தவறாக உருவானேனா??
இது என்ன கொடுமை!!
தவறு செய்தது நீ..
மரண தண்டனை எனக்கா???

பிள்ளை வரம் கேட்டு
பல பேர் இருக்க தப்பி
உன் கருவில் உருவானது
என் தவறு தான்.....

அம்மா!!!
இந்த வார்த்தையால் உன்னைக் கூப்பிட
உலகத்திற்கு நான் வரப்போவதில்லை....

எல்லாத் தவறும் போகட்டும்..
அழிக்க நினைப்பதையாவது
முறையோடு செய்துவிடு.... அதையும்
முறையில்லாமல் செய்து
என்னோடு நீயும் மறைந்து விடாதே!!!!

----- இப்படி... இது உங்கள் பார்வைக்கு மட்டுமே. கவிதையின் வரிகளும், பொருளடக்கமும், அமைப்பும் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியவர் நீங்களே.

இன்னும் எழுதுங்கள் - வாழ்த்துகிறேன்.

இன்பக்கவி
03-06-2009, 10:37 AM
நீங்கள் கூறிய அனைத்தையும் நான் ஏற்கிறேன்...
எனக்கு ரௌம்ப எழுத வராது....
எனக்கு தெரிந்த முறையில் எழுதினேன்...
நீங்கள் சொன்னதை எல்லாம் திருத்திக் கொள்கிறேன்....

இங்கு உள்ள "கூகுல் தமிழ் தட்டச்சு வசதி " எனக்கு பயன் படுத்த கடினமாக உள்ளது...
அதனால் நான் "ரெடிஎஃப் மெயில்" இதில் எழுதி கொண்டு வந்து இங்கு போடுகிறேன்...
அங்கு சில எழுத்துக்கள் கிடைக்க கஷ்டம்.........
இருந்தாலும் உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்....
எனக்கு கவிதை எப்படி இருக்கணும் என்று, எப்படி அமைக்கணும் என்ற அளவுக்கு எல்லாம் திறமை...இல்லை...
இனி முயற்சி செய்கிறேன்.... தவறை திருத்திக் கொள்கிறேன்....
நன்றிகள்....

அமரன்
03-06-2009, 10:46 AM
நீங்கள் மிகப்பெரியளவில் எழுத்தாளுவீர்கள்.
உங்கள் பதிவு இதற்குக் கட்டியம்.
தட்டச்சு உதவிகள் மன்றத்தில் உள்ளன.

பாரதி
03-06-2009, 12:40 PM
அன்பு நண்பரே,
நமது மன்றத்தின் முல்லை மன்றப்பகுதியில் தமிழ் எழுத்துரு உதவிப்பகுதி இருக்கிறது. நீங்கள் இ-கலப்பை அல்லது NHM ரைட்டர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் தமிழில் தட்டச்சுவது மிகவும் எளிது. உதாரணமாக,
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19361
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15520
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4865
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410
ஆகிய சுட்டிகளைப்பாருங்கள். உங்களுக்கு உதவக்கூடும்.

மேற்கொண்டும் உங்களுக்கு தட்டச்சுவதில் சிரமம் என்றால் அந்தப்பகுதியிலேயே உங்கள் வினாக்களை தொடுங்கள். உங்கள் பிரச்சினை வெகு விரைவில் தீர்ந்து கவிதைகள் படைக்க வாழ்த்துகிறேன்.