Honeytamil
25-05-2009, 04:05 AM
மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது மீடியா பயங்கரவாதம்.prabhakaran1
என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.
இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.
இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம்.
அதற்கு முன் இப்போது வரும் ‘புதுப்புது மரணச் செய்திகள்’ குறித்து, நிஜமான தமிழ் உணர்வாளர் என அனைத்துத் தமிழர்களும் பாரபட்சமற்று நம்பும் பழ நெடுமாறன், நம்மிடம் கூறியதை இங்கே பதிவு செய்துவிடுகிறோம்.
“தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்துவிட்டதாக இப்போது செல்வராஜா பத்மநாதன் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி இடம்பெற்ற கடும் போரில் தீரத்துடன் போரிட்டு பிரபாகரன் வீரச் சாவை தழுவியதாக அவர் இன்று (மே 24) குறிப்பிட்டுள்ளார்.
கவனிக்கவும்… கடந்த 19-ம் தேதியன்று இதே பத்மநாதன் தனது பேட்டியில், ‘சற்று முன்னர்தான் பிரபாகரனுடன் பேசினேன். அவர் நலமுடன், பாதுகாப்பாக உள்ளார்’ என்று கூறியிருந்தார். எங்களைப் போன்ற உணர்வாளர்களிடமும் இதையே சொன்னார்.
எனில் 17-ம் தேதி வீரச் சாவடைந்த தலைவருடன் 19-ம் தேதி பேசியது எப்படி?
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை.
மேலும் புலிகளின் அனைத்துலக உளவுத் துறைப் பொறுப்பாளர் அறிவழகனும் தலைவர் நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.
எனவே தொடரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் இருப்பது அவசியம். உண்மை என்னவென்பது புலிகளின் தளபதிகள் மூலமாகவே வெளியில் வரும். இந்த நிமிடம் வரை அவர் நலமுடன் இருக்கிறார் என்பதே உண்மை.
போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன… உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால், அதை இத்தனை நாட்கள் கழித்து பத்மநாதன் கூறியதன் அவசியமன்ன?” என்றார் அவர்.
இது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பழ நெடுமாறன் மற்றும் வைகோ வெளியிட்டுள்ளனர்.
எனவே உறவுகளும் உணர்வாளர்களும் சற்றுப் பொறுமையுடன் காத்திருக்கவும்… உண்மை விரைவில் வெளியில் வரும்.
என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.
இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.
இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம்.
அதற்கு முன் இப்போது வரும் ‘புதுப்புது மரணச் செய்திகள்’ குறித்து, நிஜமான தமிழ் உணர்வாளர் என அனைத்துத் தமிழர்களும் பாரபட்சமற்று நம்பும் பழ நெடுமாறன், நம்மிடம் கூறியதை இங்கே பதிவு செய்துவிடுகிறோம்.
“தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்துவிட்டதாக இப்போது செல்வராஜா பத்மநாதன் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 17-ம் தேதி இடம்பெற்ற கடும் போரில் தீரத்துடன் போரிட்டு பிரபாகரன் வீரச் சாவை தழுவியதாக அவர் இன்று (மே 24) குறிப்பிட்டுள்ளார்.
கவனிக்கவும்… கடந்த 19-ம் தேதியன்று இதே பத்மநாதன் தனது பேட்டியில், ‘சற்று முன்னர்தான் பிரபாகரனுடன் பேசினேன். அவர் நலமுடன், பாதுகாப்பாக உள்ளார்’ என்று கூறியிருந்தார். எங்களைப் போன்ற உணர்வாளர்களிடமும் இதையே சொன்னார்.
எனில் 17-ம் தேதி வீரச் சாவடைந்த தலைவருடன் 19-ம் தேதி பேசியது எப்படி?
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை.
மேலும் புலிகளின் அனைத்துலக உளவுத் துறைப் பொறுப்பாளர் அறிவழகனும் தலைவர் நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.
எனவே தொடரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் இருப்பது அவசியம். உண்மை என்னவென்பது புலிகளின் தளபதிகள் மூலமாகவே வெளியில் வரும். இந்த நிமிடம் வரை அவர் நலமுடன் இருக்கிறார் என்பதே உண்மை.
போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன… உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால், அதை இத்தனை நாட்கள் கழித்து பத்மநாதன் கூறியதன் அவசியமன்ன?” என்றார் அவர்.
இது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பழ நெடுமாறன் மற்றும் வைகோ வெளியிட்டுள்ளனர்.
எனவே உறவுகளும் உணர்வாளர்களும் சற்றுப் பொறுமையுடன் காத்திருக்கவும்… உண்மை விரைவில் வெளியில் வரும்.