Nanban
23-09-2003, 06:49 AM
துபாய்............ :p:p:p
இன்று காலியாகக் கிடப்பது
என் மனம் மட்டுமல்ல
என் வீடும் கூடத் தான்.
களைந்து எறியப்பட்ட
ஆடைகள்
கோபத்துடன் இருந்தன -
நாளை நீ வெளியே செல்ல
நாங்கள் வேண்டும்
என்ற கர்வத்துடன்.
நாளை வெளியே செல்வேனா
என்ற முடிவிற்கு இன்னமும்
வரவில்லை என்பதால்
ஆடைகளின் கோபம்
அர்த்தமற்றதாகிறது எனக்கு.
எல்லோருக்கும் உண்டான நாளை
எனக்கும் தான் இருக்கிறது.
எல்லோருக்கும் ஒடுவதற்கு
ஓர் இலக்கு வைத்திருக்கிறான்.
நான் மட்டும் இலக்கில்லாத
நிர்வாண மனத்துடன்
மல்லுக்கு நிற்கிறேன்.
கொடுப்பவற்றை எல்லாம்,
அதிகம் பால்குடித்த குழந்தையாய்
எதுக்களித்து
வெளியே தள்ளுகிறது -
பால் கொடுத்த தாயின்
வேதனை தான்
என்னைத் தீண்டுகிறது.
விடியும் முன்னே
விடிந்தது என் உலகம் மாத்திரம்
எழுந்திரு - நேரமாகி விட்டது.
வயதாகி நடுங்கும் குரல்
விரட்டி விரட்டி
பழக்கப்பட்ட ஆணவக்குரல்
தொண்டை உடையாத
கரகர குரல்.
எல்லா குரல்களும்
ஒரே தொனியில் பாடியது -
நேரமாகி விட்டது, எழுந்திரு.
எல்லோருக்கும்
ஒரு இலக்கு இருக்கிறது.....
ஒவ்வொரு ஆசை இருக்கிறது...
ஒரு நாளைய கனவு இருக்கிறது....
இதெல்லாம் புரியாத
இளையது மட்டும் வந்து
கழுத்தைக் கட்டிக் கொண்டு
மீண்டும் மெல்லமாய்
ஒரு தூக்கத்தில் ஆழ்ந்த பொழுது
என் மனம் விழித்தது -
என்னுடைய இலக்கு,
எதுவுமே கேட்கத் தெரியாத
இந்தப் பிஞ்சுதான்.
ஆடைகளை நாணத்துடன் எடுத்து
அணிந்து கொண்டேன் -
அதிகாலை விமானத்தைப் பிடிக்க.
காலியான மனமெல்லாம்
நிறைந்து, நிறைந்து வழிந்தது -
'திர்ஹம், திர்ஹம், திர்ஹம்.....'
இன்று காலியாகக் கிடப்பது
என் மனம் மட்டுமல்ல
என் வீடும் கூடத் தான்.
களைந்து எறியப்பட்ட
ஆடைகள்
கோபத்துடன் இருந்தன -
நாளை நீ வெளியே செல்ல
நாங்கள் வேண்டும்
என்ற கர்வத்துடன்.
நாளை வெளியே செல்வேனா
என்ற முடிவிற்கு இன்னமும்
வரவில்லை என்பதால்
ஆடைகளின் கோபம்
அர்த்தமற்றதாகிறது எனக்கு.
எல்லோருக்கும் உண்டான நாளை
எனக்கும் தான் இருக்கிறது.
எல்லோருக்கும் ஒடுவதற்கு
ஓர் இலக்கு வைத்திருக்கிறான்.
நான் மட்டும் இலக்கில்லாத
நிர்வாண மனத்துடன்
மல்லுக்கு நிற்கிறேன்.
கொடுப்பவற்றை எல்லாம்,
அதிகம் பால்குடித்த குழந்தையாய்
எதுக்களித்து
வெளியே தள்ளுகிறது -
பால் கொடுத்த தாயின்
வேதனை தான்
என்னைத் தீண்டுகிறது.
விடியும் முன்னே
விடிந்தது என் உலகம் மாத்திரம்
எழுந்திரு - நேரமாகி விட்டது.
வயதாகி நடுங்கும் குரல்
விரட்டி விரட்டி
பழக்கப்பட்ட ஆணவக்குரல்
தொண்டை உடையாத
கரகர குரல்.
எல்லா குரல்களும்
ஒரே தொனியில் பாடியது -
நேரமாகி விட்டது, எழுந்திரு.
எல்லோருக்கும்
ஒரு இலக்கு இருக்கிறது.....
ஒவ்வொரு ஆசை இருக்கிறது...
ஒரு நாளைய கனவு இருக்கிறது....
இதெல்லாம் புரியாத
இளையது மட்டும் வந்து
கழுத்தைக் கட்டிக் கொண்டு
மீண்டும் மெல்லமாய்
ஒரு தூக்கத்தில் ஆழ்ந்த பொழுது
என் மனம் விழித்தது -
என்னுடைய இலக்கு,
எதுவுமே கேட்கத் தெரியாத
இந்தப் பிஞ்சுதான்.
ஆடைகளை நாணத்துடன் எடுத்து
அணிந்து கொண்டேன் -
அதிகாலை விமானத்தைப் பிடிக்க.
காலியான மனமெல்லாம்
நிறைந்து, நிறைந்து வழிந்தது -
'திர்ஹம், திர்ஹம், திர்ஹம்.....'