ஆதவா
22-05-2009, 05:09 AM
முகங்களில் பூசிக்கிடக்கிறது
அழுகையின் பிரதிபலிப்பு
பெண்களுக்கு நடுவே
ஊர்ந்து செல்லுகிறது
சுரம் குன்றிய ஒப்பாரி
கனத்த விசும்பலுக்கிடையே
சிக்கித் தவிக்கிறது சொற்கள்
உதிர்ந்து விழுகிறது
வழியெங்கும் சேகரித்த
இதழின் இசைக்குறிப்புகள்
கவனிப்பாரற்று கடந்து செல்லுகிறது
வெறுமையின் நிழல்
யாராவது நீரருந்தச் சொல்வார்களாவென
வாசற்படியில் அமர்ந்திருக்கையில்
சம்பந்தமில்லாமல் தோன்றுகிறது
ஒரு கவிதைக்கான கரு.
அழுகையின் பிரதிபலிப்பு
பெண்களுக்கு நடுவே
ஊர்ந்து செல்லுகிறது
சுரம் குன்றிய ஒப்பாரி
கனத்த விசும்பலுக்கிடையே
சிக்கித் தவிக்கிறது சொற்கள்
உதிர்ந்து விழுகிறது
வழியெங்கும் சேகரித்த
இதழின் இசைக்குறிப்புகள்
கவனிப்பாரற்று கடந்து செல்லுகிறது
வெறுமையின் நிழல்
யாராவது நீரருந்தச் சொல்வார்களாவென
வாசற்படியில் அமர்ந்திருக்கையில்
சம்பந்தமில்லாமல் தோன்றுகிறது
ஒரு கவிதைக்கான கரு.