பாரதி
14-05-2009, 04:24 PM
சில வரிகளிலேயே இத்தனை அழகாக கதை எழுத முடியுமா என்ற வியப்பைத் தந்த கதை இது!
-----------------------------------------------------------
முதல்பாடம்
வீடு முழுவதும் ஒரு பறவை போல சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அழ அழ எல்.கே.ஜியில் சேர்த்து இரண்டு நாளாகியிருந்தது. கசங்கிய உடுப்புகளோடு சாயங்காலம் வீட்டிற்குள் நுழைந்தான். கூடவே ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனது அக்காவும் வந்தாள்.
"அம்மா, இப்ப பாருங்களேன்" என்றவள், தம்பியைப் பார்த்து "ஷட் அப் அண்ட் ஸிட் டவுன்" என்றாள்.
சட்டென்று கீழே உட்கார்ந்து உதடுகளின் மீது விரலை வைத்துக் கொண்டான். கண்களில் ஒரு மிரட்சி இருந்தது.
--------------------------------------------------------------
நன்றி : மாதவராஜ் அவர்களின் தீராதபக்கங்கள் வலைப்பூ.
-----------------------------------------------------------
முதல்பாடம்
வீடு முழுவதும் ஒரு பறவை போல சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அழ அழ எல்.கே.ஜியில் சேர்த்து இரண்டு நாளாகியிருந்தது. கசங்கிய உடுப்புகளோடு சாயங்காலம் வீட்டிற்குள் நுழைந்தான். கூடவே ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனது அக்காவும் வந்தாள்.
"அம்மா, இப்ப பாருங்களேன்" என்றவள், தம்பியைப் பார்த்து "ஷட் அப் அண்ட் ஸிட் டவுன்" என்றாள்.
சட்டென்று கீழே உட்கார்ந்து உதடுகளின் மீது விரலை வைத்துக் கொண்டான். கண்களில் ஒரு மிரட்சி இருந்தது.
--------------------------------------------------------------
நன்றி : மாதவராஜ் அவர்களின் தீராதபக்கங்கள் வலைப்பூ.