View Full Version : நீயும் நானும்
கீதம்
12-05-2009, 01:43 AM
நான் உனக்கானவள் என்பதாலேயே
தோட்டத்து மலராக உருமாறி
கைக்கெட்டும் தூரத்தில்
உன் கண் அசைவிற்காக
காலமெல்லாம் காத்திருக்க,
நீ எனக்கானவன் என்றபோதும்
நீலவானின் நிலவாய் மாறி
கைவசப்படாத தொலைவில் நின்று
காட்சிப் பொருளாய் மட்டுமே
ஆகிப்போகிறாய் எனக்கு!
samuthraselvam
12-05-2009, 03:13 AM
அருமையான கவிதை கீதம்....
நிலவு வந்ததும் மலர்தல் மலருக்கு உரிய குணம் அல்லவா?
மேலும் மலரட்டும் உங்கள் கவிதைகள்....
வாழ்த்துக்கள் கீதம்....
சிவா.ஜி
13-05-2009, 07:33 AM
காதலில் கசிந்துருக கைக்கெட்டிய தொலைவில் காதலி தோட்டத்துமலராய் இருக்க....
காதலிக்கவேண்டியவனோ எட்டா தூரத்தில் வான் நிலவாய் வாழ்கிறான்.
அழகான சொற்களால் கோர்க்கப்பட்ட நல்ல கவிதை.
வாழ்த்துகள் கீதம்.
கீதம்
13-05-2009, 07:53 AM
தங்கள் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி. அன்புடன் கீதம்.
பாரதி
16-05-2009, 03:46 PM
சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா என்ற பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தது இக்கவிதை! இன்னும் எழுதுங்கள் கீதம்.
அமரன்
25-05-2009, 10:37 AM
வேதனைத் தீ ஆக்கிய கவிதை.
வெக்கைக்கு இதமான குளிர் பானம்..
பாராட்டுகள் கீதம்.
உன்னைத் தேடி
ஆகாய வீதியில் வலம் வருகிறேன்..
நீயோ
வேலிக்குள் மலராக
மலர்ந்து இருக்கிறாய்..
நானோ
அழுது வடிக்கிறேன்..
இருட்டைக் கரைக்கிறேன்..
அட...
உன் முகம் கூட
என் கண்ணீரில் கழுவி
பளிச்சிடுகிறதே..