மதி
04-05-2009, 09:41 AM
உழைப்பாளர்கள் தினம். உழைப்பவர்க்கு என இருக்கும் தினம். அதைப்பற்றி உனக்கேன் கவலை. உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது நன்றாகவே தெரிகிறது. தப்பு தான். ஆனாலும் என்னையும் மனிதனாய் உழைப்பாளியாய் நம்பும் என் நிறுவனம் விடுமுறை தெரிவித்து சந்தோஷப்படுத்தியது. மூன்று நாள் விடுமுறை. என்ன செய்யலாம் என்று ஏகமாய் குழம்பவில்லை. காரணம் கிருஷ்ணகுமார். சுருக்கமாய் கி.கு. கல்லூரி சிநேகிதன். விரைவில் திருமணம். ஏற்பாட்டோடு ஏற்பாடா எங்களை மாதிரி வாலிபர்களுக்கு சட்டைத்துணி எடுத்திருந்தான். அதை வாங்கிப் போக வா என்றான். பயணப்பட்டேன் மூன்று நாள் பயணமாய். எண்ணற்ற எதிர்பார்ப்புடன்.
இறங்கியதும் அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். கொஞ்சம் வித்தியாசமாய் தான் இருந்தது. முதுகில் பரவலாய் பூத்திருந்த வியர்வை. சற்று நேரத்திலேயே கசகசக்க ஆரம்பித்தது. முகத்தில் முத்து முத்தாய் தோன்றிய வியர்வைத் துளிகள். கொஞ்ச நேரத்துலேயே குளித்தது போல் கொட்ட ஆரம்பித்துவிட்டது. உழைப்பாளர்களுக்குத் தான் வியர்க்குமாம். அப்போ உழைப்பாளிகள் தினத்தன்று நானும் உழைப்பாளியானேன்.
எதையும் திட்டமிடாமல் போனதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கி.கு வீட்டிற்கு சென்று இளைப்பாறிவிட்டு என் தம்பிக்கு தொலைப்பேசி வர சொன்னேன். அவன் பெரியம்மா பையனுடன் வந்தான். பயணம் களை கட்ட ஆரம்பித்தது. பயணம் பற்றி தலைக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேன். கூப்பிடுவதாய் சொன்னார். தக்ஸிடமும் சொல்லியிருந்தேன். தாமரை புண்ணியத்தில் மலருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. பென்ஸ் வெட்டியாய் இருந்தால் கூப்பிடு. மொக்கைப் போடலாமென்றார். அன்று முழுதும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று வருவதிலேயே கழிந்தது. கி.கு வீட்டிற்கு வந்ததும் குளியல் போட்டு நல்ல உறக்கம்.
அடுத்த நாள் காலையிலேயே டக்ஸை கூப்பிட்டேன்.
“இன்னாப்பா.. வந்து சேந்துட்டியா..?” செல்லமாய் டக்ஸின் குரல்.
“ஆமா. எங்க இருக்கீங்க? இன்னிக்கு பிஸியா.. இல்லே பார்க்கலாமா?”
“ம்.. கொஞ்சம் வேலை மதி. மத்தியானத்துக்கு அப்புறம் பார்க்கலாமா?”
“ஓ.. கண்டிப்பா. சாயந்திரம் கொஞ்சம் பாரிஸுக்கு போகணும். போலாமா?”
ஏதோ கிஃப்ட் வாங்கவேண்டுமென்று கி.கு சொல்லியிருந்தான். அப்படியே டக்ஸையும் தள்ளிட்டு போகலாம் என்று எண்ணம்.
“ஓக்கே.. கரெக்டா வந்துடறேன். எங்க தங்கியிருக்கீங்க? வந்துடறேன்.”
“வேளச்சேரி. இங்க வந்தா ட்ரெயின்ல போலாம்”
“சரி. நாலு மணிக்கு கரெக்டா வந்துடறேன்”
போனை வைத்த ஐந்தாவது நிமிஷத்தில் தலையிடமிருந்து போன்.
“என்னப்பா வந்து சேர்ந்துட்டியா…?”
“ஓ.. நேத்திக்கு காலையிலேயே. அப்புறம் நீங்க என்ன பிஸியா?”
“ஆமாம்ப்பா கொஞ்சம். இன்னிக்கு ஆபிஸ் போகணும். வேலை இருக்கு. அப்புறம் சாயந்திரம் இருந்தா கூப்பிடறேன்.”
“ஹிஹி. என்ன தலை சிட்டிங்கா..?”
“அடப்பாவி.. வீட்ல பின்னி எடுத்திடுவாங்க. நான் நல்ல பிள்ளை”
“எங்ககிட்டேயே பொய் சொல்றீங்க.. சரி இன்னிக்கு சி.எஸ்.கே மாட்ச் இருக்கே.. மறந்துட்டீங்களா?”
“மறக்கல.. என்னாத்த விளையாடறாங்க. போர் அடிக்குது. அதுக்கு உங்களையாச்சும் பாத்து பேசலாம்..”
தலைக்கு தலை வணங்கினேன். ச்சே.. தலை எவ்ளோ நல்லவர். அவர்கிட்ட போய் சிட்டிங்..சீட்டிங்னு தப்பா பேசிட்டோமே. ஏகத்துக்கும் வருத்தப்பட்டேன்.
“ஓக்கேப்பா. சாயந்தரம் ஃப்ரீயானா போன் பண்றேன். பாக்கலாம்”
“ஓக்கே தலை.”
மாலை நாலு மணி.
வருவதாய் சொன்ன டக்ஸ் இன்னும் வந்து சேரவில்லை.
(அந்த நேரத்தில் டக்ஸ் என்ன செய்தார், ஏன் தாமதாய் வர நேர்ந்தது, அப்புறம் என்னாச்சு..விரைவில்)
இறங்கியதும் அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். கொஞ்சம் வித்தியாசமாய் தான் இருந்தது. முதுகில் பரவலாய் பூத்திருந்த வியர்வை. சற்று நேரத்திலேயே கசகசக்க ஆரம்பித்தது. முகத்தில் முத்து முத்தாய் தோன்றிய வியர்வைத் துளிகள். கொஞ்ச நேரத்துலேயே குளித்தது போல் கொட்ட ஆரம்பித்துவிட்டது. உழைப்பாளர்களுக்குத் தான் வியர்க்குமாம். அப்போ உழைப்பாளிகள் தினத்தன்று நானும் உழைப்பாளியானேன்.
எதையும் திட்டமிடாமல் போனதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கி.கு வீட்டிற்கு சென்று இளைப்பாறிவிட்டு என் தம்பிக்கு தொலைப்பேசி வர சொன்னேன். அவன் பெரியம்மா பையனுடன் வந்தான். பயணம் களை கட்ட ஆரம்பித்தது. பயணம் பற்றி தலைக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேன். கூப்பிடுவதாய் சொன்னார். தக்ஸிடமும் சொல்லியிருந்தேன். தாமரை புண்ணியத்தில் மலருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. பென்ஸ் வெட்டியாய் இருந்தால் கூப்பிடு. மொக்கைப் போடலாமென்றார். அன்று முழுதும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று வருவதிலேயே கழிந்தது. கி.கு வீட்டிற்கு வந்ததும் குளியல் போட்டு நல்ல உறக்கம்.
அடுத்த நாள் காலையிலேயே டக்ஸை கூப்பிட்டேன்.
“இன்னாப்பா.. வந்து சேந்துட்டியா..?” செல்லமாய் டக்ஸின் குரல்.
“ஆமா. எங்க இருக்கீங்க? இன்னிக்கு பிஸியா.. இல்லே பார்க்கலாமா?”
“ம்.. கொஞ்சம் வேலை மதி. மத்தியானத்துக்கு அப்புறம் பார்க்கலாமா?”
“ஓ.. கண்டிப்பா. சாயந்திரம் கொஞ்சம் பாரிஸுக்கு போகணும். போலாமா?”
ஏதோ கிஃப்ட் வாங்கவேண்டுமென்று கி.கு சொல்லியிருந்தான். அப்படியே டக்ஸையும் தள்ளிட்டு போகலாம் என்று எண்ணம்.
“ஓக்கே.. கரெக்டா வந்துடறேன். எங்க தங்கியிருக்கீங்க? வந்துடறேன்.”
“வேளச்சேரி. இங்க வந்தா ட்ரெயின்ல போலாம்”
“சரி. நாலு மணிக்கு கரெக்டா வந்துடறேன்”
போனை வைத்த ஐந்தாவது நிமிஷத்தில் தலையிடமிருந்து போன்.
“என்னப்பா வந்து சேர்ந்துட்டியா…?”
“ஓ.. நேத்திக்கு காலையிலேயே. அப்புறம் நீங்க என்ன பிஸியா?”
“ஆமாம்ப்பா கொஞ்சம். இன்னிக்கு ஆபிஸ் போகணும். வேலை இருக்கு. அப்புறம் சாயந்திரம் இருந்தா கூப்பிடறேன்.”
“ஹிஹி. என்ன தலை சிட்டிங்கா..?”
“அடப்பாவி.. வீட்ல பின்னி எடுத்திடுவாங்க. நான் நல்ல பிள்ளை”
“எங்ககிட்டேயே பொய் சொல்றீங்க.. சரி இன்னிக்கு சி.எஸ்.கே மாட்ச் இருக்கே.. மறந்துட்டீங்களா?”
“மறக்கல.. என்னாத்த விளையாடறாங்க. போர் அடிக்குது. அதுக்கு உங்களையாச்சும் பாத்து பேசலாம்..”
தலைக்கு தலை வணங்கினேன். ச்சே.. தலை எவ்ளோ நல்லவர். அவர்கிட்ட போய் சிட்டிங்..சீட்டிங்னு தப்பா பேசிட்டோமே. ஏகத்துக்கும் வருத்தப்பட்டேன்.
“ஓக்கேப்பா. சாயந்தரம் ஃப்ரீயானா போன் பண்றேன். பாக்கலாம்”
“ஓக்கே தலை.”
மாலை நாலு மணி.
வருவதாய் சொன்ன டக்ஸ் இன்னும் வந்து சேரவில்லை.
(அந்த நேரத்தில் டக்ஸ் என்ன செய்தார், ஏன் தாமதாய் வர நேர்ந்தது, அப்புறம் என்னாச்சு..விரைவில்)