PDA

View Full Version : கவிதை சிலை நீ.....



இன்பக்கவி
01-05-2009, 06:53 PM
உன்னை நினைத்து
நான் வடிக்கும்
கவிதை சிலை நீ.....

எழுத்து உளியால்
பார்த்து பார்த்து
வடித்த சிலை
நீ.......

ஒரு நாளும்
சிதையாமல்
நான் பாதுகாக்கும்
பெட்டகம் நீ.....

ஓங்கி அடித்தால்
உனக்கு வலிக்குமோ என்று
என் வார்த்தை
உளீயை பார்த்து பார்த்து
செதுகுகிறேன்....

ஒவ்வொரு முறையும்
முடிவு பெறாத
சிலையான உன்னை
மீண்டும் ஒரு முறை
வலம் வந்து
சரி பார்ப்பேன்.......

இது வரை எனக்கு
தெரிய வில்லை
என்னில் என்ன பிழை......????

சிலையை முடிக்க
உன் சிலை கண்ணை
துறக்க நாள் பார்த்து
வந்தேன்.......

நல்ல நாள் என்று
கண்ணையும்
துறந்தேன்.....

முழு சிலையும்
முடிவுப் பெற்ற
திருப்தியில் நான்.......

உனை அழைத்து
வந்து காண்பிக்க
எண்ணி உன் கை
பிடித்து வந்தேன்.....

உன் கைப்பற்ற
நினைத்து
உன் கையை
தேடினேன்...........

இன்று வரை
எனக்கு கிடைக்காத
தூரத்தில் நீ.......
துயரத்தில் நான்.......

நான் அழிந்தாலும்
உனக்காக நான்
வடித்த.......
என் கவிதை
சிலை அழிவது இல்லை.......

ஓவியன்
02-05-2009, 01:59 AM
கவிதைச் சிலை,
அழகாக.....

வாழ்த்துக்கள் கவிதா..!!

அமரன்
25-05-2009, 01:29 PM
சிற்பி வீட்டில்
உலையாகக் கொதிக்கிறது
உளியின் ஓசை..!

எங்கோ ஒரு வீட்டில்
அழகாகச் சிலை..!

துறப்பு - திறப்பு...

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

உங்களுக்கு அழகாக வடிக்க வருகிறது.