ஆதவா
28-04-2009, 06:23 AM
குருடியைப் பற்றிய கவிதை
எழுதவேண்டுமென்ற ஆவல் இருந்துவந்தது
அதற்கென தேடியலைந்ததில்
மழுங்கிய விழிகளுடைய
நான்கு தெருப்பாடகிகளைக் காண நேர்ந்தது
மிகமெல்லிய கீச்சுக் குரலில்
அவர்கள் கசித்த பாடல்களை
கவிதையின் குறிப்புகளாக்கிக் கொண்டேன்.
காணக்கூடாத இடமெங்கும்
கிழிந்து தைத்திருந்த ஆடையினை
உவமைகளாக்கிக் கொண்டேன்
மலையிடுக்கில் நீரூறுவதைப் போல
கண்களில் வடிந்த கண்ணீரால்
கவிதையை நிரப்பிக் கொண்டேன்
எதிர்பார்ப்புகளற்று அகன்று சென்றார்கள்
தெருப்பாடகிகள்
குருடாகிக் கிடந்தது
என் கண்களும், கவிதைகளும்.
எழுதவேண்டுமென்ற ஆவல் இருந்துவந்தது
அதற்கென தேடியலைந்ததில்
மழுங்கிய விழிகளுடைய
நான்கு தெருப்பாடகிகளைக் காண நேர்ந்தது
மிகமெல்லிய கீச்சுக் குரலில்
அவர்கள் கசித்த பாடல்களை
கவிதையின் குறிப்புகளாக்கிக் கொண்டேன்.
காணக்கூடாத இடமெங்கும்
கிழிந்து தைத்திருந்த ஆடையினை
உவமைகளாக்கிக் கொண்டேன்
மலையிடுக்கில் நீரூறுவதைப் போல
கண்களில் வடிந்த கண்ணீரால்
கவிதையை நிரப்பிக் கொண்டேன்
எதிர்பார்ப்புகளற்று அகன்று சென்றார்கள்
தெருப்பாடகிகள்
குருடாகிக் கிடந்தது
என் கண்களும், கவிதைகளும்.