நாகரா
23-04-2009, 04:38 AM
புலிக்குள் புகுந்த
அன்பாம் சிவமே
வீரமாய்ப் பாயும்
விடுதலை வேட்கை!
மன இத அறம்
மறந்தோரின் தீவிரவாதமே
அன்பாம் சிவத்தைப்
புலியின் அவதாரத்தில் புகுத்தி
மறஞ்செய உசுப்பியது!
மன இத அறத்தின் ஞாபகம்
மறந்தோரில் மீண்டும் மூண்டாலன்றி
மறஞ்செயும் புலியின் அவதாரங்கள்
மீள மீளப் பாயும்!
புலியின் வன்பை
அன்பாய் இரசவாதம் செய்ய
மன இதம் வேண்டும்!
மன இதம் வரும் வரைக்கும்
புலி மாயாது!
மன இதம் வந்த பின்னர்
அன்பாம் சிவத்தில்
புலி மாயா நிலை எய்தும்!
மன இத அறம் மறந்தோரே!
தீவிரவாதத்தின் காரண கர்த்தரே!
பிரபாகரத்தை விதையாக்கிப்
பூமியில் புதைத்தோ
புலிகளை வதைப்பீர்!
பிரபாகர விதையின் சாவில்
வீரியப் புலிப் பயிர்கள்
இன்னும் அமோகமாய் விளையும்
என்பதை இப்போதே அறிவீர்!
மன இத அறத்தின் கண்
திரும்பட்டும் உம் மனம்!
அன்பாம் சிவத்தில்
திரும்பட்டும் பிரபாகரமும்
அதன் விளைச்சலாம் புலிகளும்!
ஒருவனாம் தேவனின் பிள்ளைகள்
நம் குலம் ஒன்றே என்பதன்
ஞாபகம் நம்முள் மூள
மனிதராய் வாழ்வோம் வாரீர்!
அன்பே சிவமாய்
அவனியில் எழுவோம் வாரீர்!
பிரபாகரத்தில் புலிகளை உசுப்பிய
நீவிர்
மனிதராவீர் முதலில்!
பிரபாகர மனிதம்
பிரகாசமாய் விடியும்
நம்மிடை நிச்சயம்!
அன்பாம் சிவமே
வீரமாய்ப் பாயும்
விடுதலை வேட்கை!
மன இத அறம்
மறந்தோரின் தீவிரவாதமே
அன்பாம் சிவத்தைப்
புலியின் அவதாரத்தில் புகுத்தி
மறஞ்செய உசுப்பியது!
மன இத அறத்தின் ஞாபகம்
மறந்தோரில் மீண்டும் மூண்டாலன்றி
மறஞ்செயும் புலியின் அவதாரங்கள்
மீள மீளப் பாயும்!
புலியின் வன்பை
அன்பாய் இரசவாதம் செய்ய
மன இதம் வேண்டும்!
மன இதம் வரும் வரைக்கும்
புலி மாயாது!
மன இதம் வந்த பின்னர்
அன்பாம் சிவத்தில்
புலி மாயா நிலை எய்தும்!
மன இத அறம் மறந்தோரே!
தீவிரவாதத்தின் காரண கர்த்தரே!
பிரபாகரத்தை விதையாக்கிப்
பூமியில் புதைத்தோ
புலிகளை வதைப்பீர்!
பிரபாகர விதையின் சாவில்
வீரியப் புலிப் பயிர்கள்
இன்னும் அமோகமாய் விளையும்
என்பதை இப்போதே அறிவீர்!
மன இத அறத்தின் கண்
திரும்பட்டும் உம் மனம்!
அன்பாம் சிவத்தில்
திரும்பட்டும் பிரபாகரமும்
அதன் விளைச்சலாம் புலிகளும்!
ஒருவனாம் தேவனின் பிள்ளைகள்
நம் குலம் ஒன்றே என்பதன்
ஞாபகம் நம்முள் மூள
மனிதராய் வாழ்வோம் வாரீர்!
அன்பே சிவமாய்
அவனியில் எழுவோம் வாரீர்!
பிரபாகரத்தில் புலிகளை உசுப்பிய
நீவிர்
மனிதராவீர் முதலில்!
பிரபாகர மனிதம்
பிரகாசமாய் விடியும்
நம்மிடை நிச்சயம்!