அமரன்
22-04-2009, 07:07 AM
கறை மூடிக் கிடக்கின்றன
என் எழுத்துகள்.
துருபிடித்த நம்பிக்கைகள்
அறுத்து வடிந்த செந்நீர்
பெருத்தத் திட்டுகளாய்..
முனை மழுங்கிய கோட்பாடுகள்
குத்திக் கிளம்பிய நீர்
கறுப்பேறி அயர்களாய்..
செத்துப் போன அனுபவங்கள்
கீறி ஊறிய கண்ணீர்
பழுப்பேறிக் கொப்புளங்களாய்..
படிந்து கிடக்கும்
நாற்றம் வீசும் கறைகள்
கழுவப்பட்டுவிடும்
ஒட்டப்பட்ட
தீவிரவாத முத்திரை நைந்து போகையில்.
என் எழுத்துகள்.
துருபிடித்த நம்பிக்கைகள்
அறுத்து வடிந்த செந்நீர்
பெருத்தத் திட்டுகளாய்..
முனை மழுங்கிய கோட்பாடுகள்
குத்திக் கிளம்பிய நீர்
கறுப்பேறி அயர்களாய்..
செத்துப் போன அனுபவங்கள்
கீறி ஊறிய கண்ணீர்
பழுப்பேறிக் கொப்புளங்களாய்..
படிந்து கிடக்கும்
நாற்றம் வீசும் கறைகள்
கழுவப்பட்டுவிடும்
ஒட்டப்பட்ட
தீவிரவாத முத்திரை நைந்து போகையில்.