vairabharathy
15-04-2009, 12:18 PM
பாரதீ ஓர் ஜோதி
பாட்டுக்குள் தீ வளர்த்த பாவலனே - நம்
பாருக்குள் மா மீசை கொண்ட காவலனே !
ஏட்டுக்குள் அன்றெழுதிய கவி மந்திரமே - இஃது
எந்நாளும் எங்களுக்குள் சக்தி தந்திடுமே !
செல்லம்மா துணை கொண்ட செந்தமிழா - எங்கள்
செங்குரதி சேற்றுக்குள் நீ செந்தாமரை ! - நீர்
இல்லா பிறப்பென்றொன்று உண்டாவெனில்
இனியொரு பிறவியெனக்கு வேண்டாமென்பேன் !
விடுதலைக்கு முன்னே நான் விளைந்திருக்கக்கூடாதா?
வீரபாரதியே உன்னோடு திரிந்திருக்கக்கூடாதா?
'சுடு" வெள்ளையனேயென மாய்ந்திருக்கக்கூடாதா? - இச்
சுதேசியின் மடிமீது வீழ்ந்திருக்கக் கூடாதா?
மனமெங்கும் உனை நிரப்பி வாழ்கிறேன்.
மண்ணில் உன் பேரொன்றே வாசிக்கிறேன் ! - உன்
இனமது நானென்று நம்புகிறேன் - உன்
இளமை வரிகளில் இன்பம் பொங்குகிறேன்.!
கார் மழை கைம்மாறு காணாது - உன்
கவி வரி பலநூறு இது போலாகும்...
பாரதி எனும் பேர் சொன்னால் போதும் - என்
பார்வைக்குள் ஒளி ஒன்பது கோளாகும் !
பாட்டுக்குள் தீ வளர்த்த பாவலனே - நம்
பாருக்குள் மா மீசை கொண்ட காவலனே !
ஏட்டுக்குள் அன்றெழுதிய கவி மந்திரமே - இஃது
எந்நாளும் எங்களுக்குள் சக்தி தந்திடுமே !
செல்லம்மா துணை கொண்ட செந்தமிழா - எங்கள்
செங்குரதி சேற்றுக்குள் நீ செந்தாமரை ! - நீர்
இல்லா பிறப்பென்றொன்று உண்டாவெனில்
இனியொரு பிறவியெனக்கு வேண்டாமென்பேன் !
விடுதலைக்கு முன்னே நான் விளைந்திருக்கக்கூடாதா?
வீரபாரதியே உன்னோடு திரிந்திருக்கக்கூடாதா?
'சுடு" வெள்ளையனேயென மாய்ந்திருக்கக்கூடாதா? - இச்
சுதேசியின் மடிமீது வீழ்ந்திருக்கக் கூடாதா?
மனமெங்கும் உனை நிரப்பி வாழ்கிறேன்.
மண்ணில் உன் பேரொன்றே வாசிக்கிறேன் ! - உன்
இனமது நானென்று நம்புகிறேன் - உன்
இளமை வரிகளில் இன்பம் பொங்குகிறேன்.!
கார் மழை கைம்மாறு காணாது - உன்
கவி வரி பலநூறு இது போலாகும்...
பாரதி எனும் பேர் சொன்னால் போதும் - என்
பார்வைக்குள் ஒளி ஒன்பது கோளாகும் !