த.ஜார்ஜ்
13-04-2009, 02:20 PM
நேற்றைய யுத்தத்தில்
அறிமுகமானோம்.
கொள்கைகள் கிழித்த எல்லைகளில்
அமைதியிழந்த உத்தரவுகளோடு..
குற்றமற்ற பிணங்களிடையே
இன்னும் பசி தீரா ஆயுதங்களோடு...!
நீயோ நிராயுதபாணி.
சுட வேண்டும் உன்னை.
கொலைதான் என்றாலும்
எனக்கு விருது கிடைக்கும்.
நீ தியாகியாக்கப்படலாம்..!
வாழ்வின் கடைசி வினாடியில்
விழியில் கனவாய்
பையிலிருந்து குழந்தை படம் எடுத்து
முத்திக் கொண்டாய்.
எதிரியின் உறவு மற
என்ற தர்மம் மறந்து
சுட மறந்து...
சட்டென்று மனிதம் விழித்தேன்.
தேச துரோகமாம்.. நாம் இறந்து போனோம்.
அறிமுகமானோம்.
கொள்கைகள் கிழித்த எல்லைகளில்
அமைதியிழந்த உத்தரவுகளோடு..
குற்றமற்ற பிணங்களிடையே
இன்னும் பசி தீரா ஆயுதங்களோடு...!
நீயோ நிராயுதபாணி.
சுட வேண்டும் உன்னை.
கொலைதான் என்றாலும்
எனக்கு விருது கிடைக்கும்.
நீ தியாகியாக்கப்படலாம்..!
வாழ்வின் கடைசி வினாடியில்
விழியில் கனவாய்
பையிலிருந்து குழந்தை படம் எடுத்து
முத்திக் கொண்டாய்.
எதிரியின் உறவு மற
என்ற தர்மம் மறந்து
சுட மறந்து...
சட்டென்று மனிதம் விழித்தேன்.
தேச துரோகமாம்.. நாம் இறந்து போனோம்.