View Full Version : தாவரங்கள்
பா.ராஜேஷ்
08-04-2009, 07:01 AM
கத்தியின்றி
யுத்தமின்றி
பூமியை காத்திடும்
போர் வீரர்கள்!
பாரதி
08-04-2009, 12:16 PM
பூமியைக்காக்க தங்களையே அர்பணித்துக்கொள்ளும் சமாதான தூதுவர்கள்.
தா"வரம்" அல்லவா..!நல்ல கவிதை இராஜேஷ்.
பா.ராஜேஷ்
09-04-2009, 06:01 AM
நன்றி பாரதி. பெரும் புலவர் பெயர் கொண்டவர் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது..
praveen
09-04-2009, 06:19 AM
தாவரங்கள் பூமியை காப்பதோடு, வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவிடும் வள்ளலும் கூட.
உங்கள் ஹைக்கூ-விற்கு ஒரு ஹாய்.
பா.ராஜேஷ்
09-04-2009, 06:31 AM
தங்கள் கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி பிரவீன்.
அமரன்
22-04-2009, 09:40 AM
அருமையான பார்வைப் பதிவு.
பாராட்டுகள் "பா"ராஜேஸ்.
வானதிதேவி
18-09-2009, 03:05 PM
அவ்வீரர்கள் மடியாமல் இருக்க உயிர் தண்ணீர் ஊற்றி காப்பாற்றுவதும்,வீரர்களை உருவாக்குவதும் நம் கைகளில் தான் உள்ளது.கவிதை அருமை.
பா.ராஜேஷ்
18-09-2009, 03:30 PM
தங்கள் பாராட்டிற்கு நன்றி !
ஓவியன்
19-09-2009, 05:40 AM
கத்தியின்றி நம்மைக் காப்பனவற்றை,
நாம் கத்தியாலும், கோடரியாலும்
இன்னும் பிற ஆயுதங்களாலும்
அழித்தொழித்துக் கொண்டிருக்கின்றோம்...
நல்லதோர் கவிதைக்கு பாராட்டுகள் ராஜேஷ்..!!
கா.ரமேஷ்
19-09-2009, 06:24 AM
அருமையான வரிகள்... இயற்க்கையை போற்றும் வரிகள்.. வாழ்த்துக்கள்.
அழகிய பார்வை!
பாராட்டுகள் இராஜேஷ்!