Nanban
15-09-2003, 05:17 PM
நானும் என் தனிமையும்
அமர்ந்து பேசிக்
கொண்டிருக்கிறோம் -
பாலஸ்தீன, இஸ்ரேலிய
பிரச்னைகளை தீர்ப்பவர்கள் போல்...
என் தனிமையை
எப்படியாவது கொலை செய்துவிட
எண்ணம் கொண்டிருக்கிறேன் நான் -
அராபாத்தை கொலை செய்வதைத்
தீர்வாகக் கொண்ட இஸ்ரேலைப் போல்...
பின்லேடனின் நிழலைப் போல
என் தனிமை என்னை மிரட்டுகிறது -
நட்புடன் வந்து
நிலைகுலையைச் செய்யும்
மனித குண்டுகளாய்....
குரோதம் ஒன்றை வைத்தே
பேரம் நடக்கிறது....
ஒருவரின் அழிவிலே தான்
மற்றவரின் வாழ்வே!
என் தனிமை அறியவில்லை -
நான் வாழாமல்
தான் வாழ முடியாது என்பதை.
எனக்கும் தெரியும்
தனிமை இன்றேல்
எந்த கவிதைகளையும்
சுகங்களையும்
அசை போட்டு சுகம் பெற
இயலாது என்று...
புது வெள்ளம் பாயும்
வாய்க்கால் எலிகளாய்
பதுங்கி இருக்கும்
தனிமைத் துளிகள்
வெளிவந்து
எரிச்சலூட்டுகிறது -
எனக்கும் இடம் தா என்று.
உனக்கும் கொஞ்சம் இடம்
தருகிறேன் நிபந்தனையுடன் -
நீ மட்டும் வந்தால்.
அரசவையில் வீற்றிருக்க
ஆசனமும் தருகிறேன் -
நிபந்தனையுடன்.
எந்த ஒரு நிபந்தனையும்
என்னைக் கட்டாது -
ஏறிட்டு நோக்கும்
ஏளனப் பார்வையுடன்
மூக்கு விடைத்து
எந்தத் திசையில் பாயுமென்ற
கணிப்பிற்குட்படா காளையாய்
தனிமை கோபம் வீசி நிற்கிறது...
மத்துக் கடைசலின்
வெண்ணையாய்
திரளும் கோபம் -
கொலைவெறியுடன்
மது திராவகம் வீசுகிறேன் -
வயிற்றினுள்.
தனிமையே நீ
அமிழ்ந்து போ!!!
தடாகத் தாமரையாய்
தனிமை மிதக்கிறது -
அமிழ்ந்து போனவனாய் நான்.
கர்ப்பமுற்ற மேகமாய்
நான் கீழிறங்கி வந்து
கேட்கிறேன் -
உனக்கு என்ன வேண்டும்?
நான் வருவேன் - போவேன்
என்னிஷ்டமாய்...
எந்த நிபந்தனையுமின்றி
எனக்கும் ஒரு இடம் வேண்டும் -
நீ மறந்தவளின் நினைவுகளுக்கும் தான்.
அமர்ந்து பேசிக்
கொண்டிருக்கிறோம் -
பாலஸ்தீன, இஸ்ரேலிய
பிரச்னைகளை தீர்ப்பவர்கள் போல்...
என் தனிமையை
எப்படியாவது கொலை செய்துவிட
எண்ணம் கொண்டிருக்கிறேன் நான் -
அராபாத்தை கொலை செய்வதைத்
தீர்வாகக் கொண்ட இஸ்ரேலைப் போல்...
பின்லேடனின் நிழலைப் போல
என் தனிமை என்னை மிரட்டுகிறது -
நட்புடன் வந்து
நிலைகுலையைச் செய்யும்
மனித குண்டுகளாய்....
குரோதம் ஒன்றை வைத்தே
பேரம் நடக்கிறது....
ஒருவரின் அழிவிலே தான்
மற்றவரின் வாழ்வே!
என் தனிமை அறியவில்லை -
நான் வாழாமல்
தான் வாழ முடியாது என்பதை.
எனக்கும் தெரியும்
தனிமை இன்றேல்
எந்த கவிதைகளையும்
சுகங்களையும்
அசை போட்டு சுகம் பெற
இயலாது என்று...
புது வெள்ளம் பாயும்
வாய்க்கால் எலிகளாய்
பதுங்கி இருக்கும்
தனிமைத் துளிகள்
வெளிவந்து
எரிச்சலூட்டுகிறது -
எனக்கும் இடம் தா என்று.
உனக்கும் கொஞ்சம் இடம்
தருகிறேன் நிபந்தனையுடன் -
நீ மட்டும் வந்தால்.
அரசவையில் வீற்றிருக்க
ஆசனமும் தருகிறேன் -
நிபந்தனையுடன்.
எந்த ஒரு நிபந்தனையும்
என்னைக் கட்டாது -
ஏறிட்டு நோக்கும்
ஏளனப் பார்வையுடன்
மூக்கு விடைத்து
எந்தத் திசையில் பாயுமென்ற
கணிப்பிற்குட்படா காளையாய்
தனிமை கோபம் வீசி நிற்கிறது...
மத்துக் கடைசலின்
வெண்ணையாய்
திரளும் கோபம் -
கொலைவெறியுடன்
மது திராவகம் வீசுகிறேன் -
வயிற்றினுள்.
தனிமையே நீ
அமிழ்ந்து போ!!!
தடாகத் தாமரையாய்
தனிமை மிதக்கிறது -
அமிழ்ந்து போனவனாய் நான்.
கர்ப்பமுற்ற மேகமாய்
நான் கீழிறங்கி வந்து
கேட்கிறேன் -
உனக்கு என்ன வேண்டும்?
நான் வருவேன் - போவேன்
என்னிஷ்டமாய்...
எந்த நிபந்தனையுமின்றி
எனக்கும் ஒரு இடம் வேண்டும் -
நீ மறந்தவளின் நினைவுகளுக்கும் தான்.