PDA

View Full Version : சகியே



sathyamani
07-04-2009, 11:35 AM
எப்போதாவது பெய்யும் மழை துளி

வாசலில் நீ இட்ட கோலத்தை லேசாய்

சிதைத்துவிட்டு போகும்

மழை மீது எனக்கு கோபம் தான்

இருப்பினும் மழை எனக்கு பிடிக்கும்

நாம் இருவரும் சேர்ந்து நனையும் போது ....

பா.ராஜேஷ்
08-04-2009, 06:14 AM
நன்று சத்யா. கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

இளசு
18-04-2009, 02:35 PM
நோயும் நீயே மருந்தும் நீயே - என
பெண்ணின் கண்ணை எண்ணிப் பாடுவான் வள்ளுவன்!

மழையை இரு கோணங்களில் பார்த்து
மருகும் நெஞ்சம் இங்கு!

எல்லாம் காதல் மயன் செய்யும் மனமாயம்!

பாராட்டுகள் சத்யமணி அவர்களே!

ஆதவா
23-04-2009, 03:37 PM
நல்ல ஆரம்பம்... கவிதையை இன்னும் நன்கு செதுக்கியிருக்கலாம்.

மழை, கோலம், கோபம், காதல்...

இவைகளுமன்றி முற்றுபெறுமா வாழ்வு??