kulirthazhal
07-04-2009, 07:19 AM
அந்த
புன்னகை தின்ற
பூக்களுக்கு
கண்களைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தேனின்
சுவையைப்பற்றி
வாதாட ஏதுமில்லை,
வண்டுகளால்
வலியுண்டு...
போதையும்,
மயக்கமும்,
மகிழ்ச்சியாய் ஒளிரும்
வாழ்க்கையில்
மனம்வீசும்வரை
இனிமையை தந்து,
பொலிவுள்ளவரை
கண்களுக்கு இன்பம் தரும்
இந்த மலர்கள்
வாடிப்போனால்
எந்த கண்களும்
கண்ணீர் விடுவதில்லை......
அந்த
புன்னகை தின்ற
பூக்களுக்கு
கண்களைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-குளிர்தழல்.
புன்னகை தின்ற
பூக்களுக்கு
கண்களைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தேனின்
சுவையைப்பற்றி
வாதாட ஏதுமில்லை,
வண்டுகளால்
வலியுண்டு...
போதையும்,
மயக்கமும்,
மகிழ்ச்சியாய் ஒளிரும்
வாழ்க்கையில்
மனம்வீசும்வரை
இனிமையை தந்து,
பொலிவுள்ளவரை
கண்களுக்கு இன்பம் தரும்
இந்த மலர்கள்
வாடிப்போனால்
எந்த கண்களும்
கண்ணீர் விடுவதில்லை......
அந்த
புன்னகை தின்ற
பூக்களுக்கு
கண்களைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-குளிர்தழல்.