PDA

View Full Version : புன்னகைத்தின்ற பூக்கள்



kulirthazhal
07-04-2009, 07:19 AM
அந்த
புன்னகை தின்ற
பூக்களுக்கு
கண்களைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தேனின்
சுவையைப்பற்றி
வாதாட ஏதுமில்லை,
வண்டுகளால்
வலியுண்டு...

போதையும்,
மயக்கமும்,
மகிழ்ச்சியாய் ஒளிரும்
வாழ்க்கையில்
மனம்வீசும்வரை
இனிமையை தந்து,
பொலிவுள்ளவரை
கண்களுக்கு இன்பம் தரும்
இந்த மலர்கள்

வாடிப்போனால்
எந்த கண்களும்
கண்ணீர் விடுவதில்லை......

அந்த
புன்னகை தின்ற
பூக்களுக்கு
கண்களைப்பற்றி
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

-குளிர்தழல்.

ஆதி
07-04-2009, 07:52 AM
"புன்னகைத்தின்ற பூக்கள்" தலைப்பு மட்டுமல்ல முழு கவிதையும், கடந்த 1 வாரமாக என் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளோடு ஒத்துப்போகிறது.. என்னையே நினைத்து என்னை அழவைத்துவிட்டது.. கவிதையை குறித்து என்னால் ஏதும் விமர்சிக்க முடியவில்லை.. மன்னிக்கவும்...

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

பா.ராஜேஷ்
08-04-2009, 06:33 AM
பூவின் நினைப்பை எடுத்து சொல்லும் கவிதை மிக அருமை. பாராட்டுகள்