ஆதவா
05-04-2009, 11:38 AM
மறந்து போகாமல் அடிமனதின் ஆழத்தின் இன்னும் உரசிக்கொண்டிருக்கும் பழைய நண்பர்களை மீளக் காணவதில் உள்ள தனி சுகம் வேறெந்த உறவில் இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. பழைய நினைவுகள் எல்லாமே அச்சமயத்தில் குவிந்து ஒன்றோடொன்று மல்லுக்கட்டி இருவருக்குமிடையேயுண்டான உரையாடலில் முந்தி நிற்கும்.
ஆண் நண்பர்களின் உரையாடல் பெரும்பாலும் பெண்களைக் குறித்ததாக இருக்கிறது. சுண்டியிழுக்கும் ரசனைக்காரிகளின் வடிவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றோ, திருமணத்திற்கு முந்திய அல்லது பிந்தைய வாழ்நிலை குறித்தோ பேசப்படுவதுண்டு. யாராவது ஒருவர் இடையில் நுழைந்து ஒரு நூலை மட்டும் உருவி பேச்சைத் திருப்ப முயலலாம். அப்பொழுது நாங்கள் இரவுகளைக் கொல்வதைக் குறித்தோ அல்லது கற்பனையில் அடங்காத காமத்தை எப்படிச் செயலாக்குவது என்பது குறித்தோ பேசிக் கொண்டிருப்போம்.
ஏதாவது ஒரு கடையின் வாசலில் அல்லது மூடப்பட்டிருக்கும் கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசுவது வழக்கமாக இருக்கிறது. வாழ்வை முதுகில் சுமந்து கொள்ளாத பருவத்தில் எல்லோரும் இருப்பதால் எங்கள் முதுகுகள் கூன் விழுந்து போகாமல் இருக்கின்றன. பழைய நண்பர்களைப் பார்க்கும் பொழுது நான் முதலில் கவனிப்பது அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதுதான். திருமணம் நண்பர்களுக்கிடையான சிறு விரிசலை ஏற்படுத்தத் தயாராக நிற்கின்றன. பெண்களுக்கு அவ்விரிசலின் தீவிரம் மிக அதிகமாக இருக்கிறது,.
கிருஷ்ணனை எங்கள் பகுதி கோவில் திருவிழாவின் பொழுதுதான் பார்த்தேன். பழைய நண்பன் என்பதால் சட்டென அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாத தூரத்தில் இருந்தான். அவனது முகத்தில் அப்பொழுதுதான் மனைபுகுந்த புதுமனைவி போன்று சிரிப்பு குடியேறியிருந்தது. எப்படி இருக்கே டா என்று சொல்லிக் கொண்டே கைக்குலுக்கினான். இரத்தம் மீண்டும் புதுப்பித்துச் செல்லுகிறதோ என்று தோணும் அளவுக்கு மகிழ்ச்சி பீறிட்டது எனக்குள்ளும்.
அவனை இறுதியாக பள்ளியில்தான் பார்த்தது. பள்ளிக்கும் எனக்குமான தொடர்பு சட்டென்று அவிழ்ந்து விட்டதால் நண்பர்கள் எல்லோருமே வெகு தொலைவில் இருந்துவிட்டார்கள்.
பள்ளிக் காலத்தில் கிருஷ்ணன் ஒரு சராசரி மாணவன். பெரும்பாலும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும் சிலமுறை தோல்விகண்டதுமுண்டு. அப்பொழுதெல்லாம் அதைப்பற்றிய கவலைகளை அவன் சுமந்து நடந்ததாக நான் பார்த்ததில்லை. எனக்கோ தோல்வி என்பது அவமானத்தின் பெரும் சின்னமாக இருந்தது. அதற்காகவே நான் கடுமையாக போராடவேண்டியிருந்தது.. கிருஷ்ணனது வீட்டினைப் போன்று தோல்விகளில் சுதந்திரம் எனக்கு யாரும் கொடுத்து வைத்திருக்கவில்லை.
கிருஷ்ணன், தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பரந்த பச்சைக் காடுகளின் வழியினூடாகவும் நாற்றங் கமழும் பீக்காடுகளைத் தாண்டியும் தான் அவனது வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. இன்னும் மக்களின் கண்களில் அகப்படாமல் பச்சை ஆடை போர்த்தியிருந்த அப்பகுதியின் ஒரு தூரத்தில் அவனது வீடு இருந்தது. அதை வீடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. கூரை வேயப்பட்டிருந்தது. வாசல் மிகக் குறுகலாகவும் உயரம் குறைந்ததாகவும் இருந்தது. இருவர் மட்டுமே படுக்கக்கூடிய இடத்தில் அவரது அப்பா, அம்மா, அவன் என மூவரும் குடியிருந்தார்கள். அவர்களது வீட்டின் பெரும்பாலான பொருட்கள் சமையல் பொருட்கள்தான். ஒரு ஆட்டோவில் அத்தனையும் ஏற்றிவிடலாம் அவ்வளவு குறைவு...
அவனை மீண்டும் பார்த்ததில் மெல்ல மெல்ல பல விஷயங்கள் வெளிவந்தன. கூரை வீடும், சுள்ளிக்காடும் ஒழிந்து மூளியானதை சற்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான். பல வேலைகளைச் செய்தவன் ஒருவேலைக்கும் உருப்படமாட்டான் என்பது போல, அவனுக்கு எந்த வேலையும் அமையவில்லை. திருவிழாவில் நண்பர்களோடு இணைந்து பணம் திரட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, கம்பம் நடுவது போன்ற காரியங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினான். கிடைக்கும் கூலி வெகு சொற்பம். வாழ்க்கையை நடத்த அது போதுமானதாக இருக்காது. ஆனால் இன்று இதைவிட்டால் வேறு வழியுமில்லை என்றான்.
திருமணம் ஆகாமல் தடைபடும் செவ்வாய் தோஷமும், அபகரிக்கப்பட்ட நிலமும், அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பும் அவனது வாழ்க்கைப் பாதையை சீரழித்ததாகக் கூறினான். உண்மைதான். நம் வாழ்க்கையை நம்மால் மட்டுமே தீர்மானிக்க முடிவதில்லை. வேறு சில கைகள் தூக்கி விட்டோ, வேறு சில கால்கள் உதைத்தோ நிர்ணயிக்கப்படுகிறது! கிருஷ்ணனோடு பேசியது சுமார் பத்து நிமிடங்கள்தான், அவனைப் பார்க்காதிருந்த இந்த பத்து வருட வாழ்க்கையை அந்த பத்து நிமிடத்தில் அடக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு ப்ரிண்டிங் பட்டறையின் முகவரியைக் கொடுத்துவிட்டு என் வீட்டுக்குச் சென்றேன். என் முதுகில் பத்துவருட வாழ்க்கையைச் சுமந்ததைப் போன்ற உணர்வு இன்னும் இருக்கிறது. பழைய நண்பர்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று உள்ளூரச் சொன்னது அவனது கைபட்ட வியர்வைத் துளிகள்!
அன்புடன்
ஆதவா//
(முந்தைய திரிகளுக்கு பதிலளித்த பா.ராஜேஷ், இளசு, பாரதி மற்றும் பார்வையிட்டு அனைவருக்கும் நன்றி.. திரி திறப்பதற்கு நேரமெடுப்பதால் என்னால் அந்தந்த திரிகளில் நன்றி தெரிவிக்க முடியவில்லை)
ஆண் நண்பர்களின் உரையாடல் பெரும்பாலும் பெண்களைக் குறித்ததாக இருக்கிறது. சுண்டியிழுக்கும் ரசனைக்காரிகளின் வடிவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றோ, திருமணத்திற்கு முந்திய அல்லது பிந்தைய வாழ்நிலை குறித்தோ பேசப்படுவதுண்டு. யாராவது ஒருவர் இடையில் நுழைந்து ஒரு நூலை மட்டும் உருவி பேச்சைத் திருப்ப முயலலாம். அப்பொழுது நாங்கள் இரவுகளைக் கொல்வதைக் குறித்தோ அல்லது கற்பனையில் அடங்காத காமத்தை எப்படிச் செயலாக்குவது என்பது குறித்தோ பேசிக் கொண்டிருப்போம்.
ஏதாவது ஒரு கடையின் வாசலில் அல்லது மூடப்பட்டிருக்கும் கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசுவது வழக்கமாக இருக்கிறது. வாழ்வை முதுகில் சுமந்து கொள்ளாத பருவத்தில் எல்லோரும் இருப்பதால் எங்கள் முதுகுகள் கூன் விழுந்து போகாமல் இருக்கின்றன. பழைய நண்பர்களைப் பார்க்கும் பொழுது நான் முதலில் கவனிப்பது அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதுதான். திருமணம் நண்பர்களுக்கிடையான சிறு விரிசலை ஏற்படுத்தத் தயாராக நிற்கின்றன. பெண்களுக்கு அவ்விரிசலின் தீவிரம் மிக அதிகமாக இருக்கிறது,.
கிருஷ்ணனை எங்கள் பகுதி கோவில் திருவிழாவின் பொழுதுதான் பார்த்தேன். பழைய நண்பன் என்பதால் சட்டென அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாத தூரத்தில் இருந்தான். அவனது முகத்தில் அப்பொழுதுதான் மனைபுகுந்த புதுமனைவி போன்று சிரிப்பு குடியேறியிருந்தது. எப்படி இருக்கே டா என்று சொல்லிக் கொண்டே கைக்குலுக்கினான். இரத்தம் மீண்டும் புதுப்பித்துச் செல்லுகிறதோ என்று தோணும் அளவுக்கு மகிழ்ச்சி பீறிட்டது எனக்குள்ளும்.
அவனை இறுதியாக பள்ளியில்தான் பார்த்தது. பள்ளிக்கும் எனக்குமான தொடர்பு சட்டென்று அவிழ்ந்து விட்டதால் நண்பர்கள் எல்லோருமே வெகு தொலைவில் இருந்துவிட்டார்கள்.
பள்ளிக் காலத்தில் கிருஷ்ணன் ஒரு சராசரி மாணவன். பெரும்பாலும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும் சிலமுறை தோல்விகண்டதுமுண்டு. அப்பொழுதெல்லாம் அதைப்பற்றிய கவலைகளை அவன் சுமந்து நடந்ததாக நான் பார்த்ததில்லை. எனக்கோ தோல்வி என்பது அவமானத்தின் பெரும் சின்னமாக இருந்தது. அதற்காகவே நான் கடுமையாக போராடவேண்டியிருந்தது.. கிருஷ்ணனது வீட்டினைப் போன்று தோல்விகளில் சுதந்திரம் எனக்கு யாரும் கொடுத்து வைத்திருக்கவில்லை.
கிருஷ்ணன், தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பரந்த பச்சைக் காடுகளின் வழியினூடாகவும் நாற்றங் கமழும் பீக்காடுகளைத் தாண்டியும் தான் அவனது வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. இன்னும் மக்களின் கண்களில் அகப்படாமல் பச்சை ஆடை போர்த்தியிருந்த அப்பகுதியின் ஒரு தூரத்தில் அவனது வீடு இருந்தது. அதை வீடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. கூரை வேயப்பட்டிருந்தது. வாசல் மிகக் குறுகலாகவும் உயரம் குறைந்ததாகவும் இருந்தது. இருவர் மட்டுமே படுக்கக்கூடிய இடத்தில் அவரது அப்பா, அம்மா, அவன் என மூவரும் குடியிருந்தார்கள். அவர்களது வீட்டின் பெரும்பாலான பொருட்கள் சமையல் பொருட்கள்தான். ஒரு ஆட்டோவில் அத்தனையும் ஏற்றிவிடலாம் அவ்வளவு குறைவு...
அவனை மீண்டும் பார்த்ததில் மெல்ல மெல்ல பல விஷயங்கள் வெளிவந்தன. கூரை வீடும், சுள்ளிக்காடும் ஒழிந்து மூளியானதை சற்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான். பல வேலைகளைச் செய்தவன் ஒருவேலைக்கும் உருப்படமாட்டான் என்பது போல, அவனுக்கு எந்த வேலையும் அமையவில்லை. திருவிழாவில் நண்பர்களோடு இணைந்து பணம் திரட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, கம்பம் நடுவது போன்ற காரியங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினான். கிடைக்கும் கூலி வெகு சொற்பம். வாழ்க்கையை நடத்த அது போதுமானதாக இருக்காது. ஆனால் இன்று இதைவிட்டால் வேறு வழியுமில்லை என்றான்.
திருமணம் ஆகாமல் தடைபடும் செவ்வாய் தோஷமும், அபகரிக்கப்பட்ட நிலமும், அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பும் அவனது வாழ்க்கைப் பாதையை சீரழித்ததாகக் கூறினான். உண்மைதான். நம் வாழ்க்கையை நம்மால் மட்டுமே தீர்மானிக்க முடிவதில்லை. வேறு சில கைகள் தூக்கி விட்டோ, வேறு சில கால்கள் உதைத்தோ நிர்ணயிக்கப்படுகிறது! கிருஷ்ணனோடு பேசியது சுமார் பத்து நிமிடங்கள்தான், அவனைப் பார்க்காதிருந்த இந்த பத்து வருட வாழ்க்கையை அந்த பத்து நிமிடத்தில் அடக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு ப்ரிண்டிங் பட்டறையின் முகவரியைக் கொடுத்துவிட்டு என் வீட்டுக்குச் சென்றேன். என் முதுகில் பத்துவருட வாழ்க்கையைச் சுமந்ததைப் போன்ற உணர்வு இன்னும் இருக்கிறது. பழைய நண்பர்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று உள்ளூரச் சொன்னது அவனது கைபட்ட வியர்வைத் துளிகள்!
அன்புடன்
ஆதவா//
(முந்தைய திரிகளுக்கு பதிலளித்த பா.ராஜேஷ், இளசு, பாரதி மற்றும் பார்வையிட்டு அனைவருக்கும் நன்றி.. திரி திறப்பதற்கு நேரமெடுப்பதால் என்னால் அந்தந்த திரிகளில் நன்றி தெரிவிக்க முடியவில்லை)