umakarthick
30-03-2009, 02:10 PM
கல்லூரியில் முதல் வருடம் ஹாஸ்டலில் இருந்தேன், லைனில் நின்று தட்டு ஒன்றும் கிளாசும் வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு நிப்பேன்..வீட்டில் அம்மா செய்த ஆப்பாயில் உடைந்து விட்டால் தட்டை தூக்கி எறிந்து சண்டை போட்டு பணம் வாங்கி புரோட்டா சாப்பிடும் நான் இப்படி தட்டோடு சாப்பாட்டுக்கு நிற்பது என் தன்மானத்திற்கு(அப்படின்னா???) அவமானமாயிருந்தது ..
அதனால் 2 வருடம் ஹாஸ்டல் விட்டு வெளியேறி காலேக் பக்கம் ரூம் எடுத்து தங்கினோம்..அங்கே தான் இந்த மெஸ் கான்செப்ட் எனக்கு அறிமுகமாச்சு..500 ரூ டெபாசிட் கொடுத்துட்டு அக்கவுண்ட் ஆரம்பித்து சாப்பிடலாம்..ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்து விட வேண்டும்..
எங்க ரூமருகே இருந்த லச்சுமி மெஸ்ஸில் அக்கவுன்ட் வைத்தேன் நான் மட்டும் ..நாம பேசிக்கா சோம்பேறியாச்சா பக்கத்து மெஸ்ஸிலே சேர்ந்து விட்டேன் மற்றவர்கள் தூரத்தில் இருந்த மெஸ்களில் சேற எங்க ரூம் லைப் ஆரம்பமானது..
லச்சுமி மெஸ்ஸை ஒரு குடும்பமே சேர்ந்து நடத்திக்கொண்டிருந்தது , ஒரு தாத்தா அவருக்கு காது கேக்காது ,ஆப்பாயில் கேட்டால் ஆம்பிளேட் கொண்டு வருவார்..அவரின் மனைவி பாட்டியம்மா அப்புறம் ஒரு வயதான் அக்கா அவ்ங்களோட 2 மகன்ஸ் அப்புறம் அதில் மணமான ஒரு மகனின் அழகான மனைவி..சீக்கிரத்திலே எல்லாரும் என்னுடன் பழகி விட்டார்கள்..அதிலும் அந்த அக்காவின் கணவர் இறந்திருப்பார் போல எப்போதும் சோகமாவே இருக்கும்..
கிட்டத்தட்ட எனக்கொரு குடும்பமே கிடைத்த மாதிரி இருந்தது ..வீட்டிலிருந்த பிரிந்த இருந்த எனக்கு இது ஒரு பெரிய வடிகாலாகவே இருந்தது..நான் அவர்களுடன் பழகுவதை என் ரூம் பசங்க எல்லாரும் கிண்டலடிப்பார்கள்..நான் கண்டுக்கவே மாட்டேன்..ஞாயிறு மட்டும் ல்ச்சுமி மெஸ்ஸில் கூட்டம் அலைமோதும் காரணம் சிக்கன் குழம்பு..அந்த சாப்பாடும் சிக்கன் குழம்பும் சாப்பிட்டு அப்புறம் தயிறு அதுக்கு மேல ஆபாயில் பழம் என உள்ளே தள்ளிக்கொண்டே இருப்போம்..
இளமையின் மிடுக்கில் சிகரட் ,கிரிக்கெட் பார்த்து கொண்டே 5 டீ, பசங்களை கூப்பிட்டு வந்து சாப்பிட வைத்து , ஆப்பாயில் யார் அதிகம் சாப்பிடுகிறார்கள் என போட்டி ..இவ்வாறாக மெஸ் பில் மாதம் 2000 தாண்டும்..
அந்த மெஸ் குடும்பத்தில் புதிதாய் வந்திருந்த அந்த புதுபெண்ணும் சில நாட்களிலேயே மெஸ்ஸில் சாம்பார் ,சட்னி பறிமாற ஆரம்பித்து விட்டார்..அழகாக மஞ்சள் பூசி ஈரத்தலையோட அந்த பெண்ணை பார்க்க கொஞ்சம் கூட்டமே வந்தது
என் அக்காவிற்கு குழந்த பிறந்தசமயம் இந்த மெஸ்ஸிக்கு தான் போன் பண்ணி என் அம்மா சொன்னார்கள்..அப்போதெல்லாம் செல் போன் கிடையாது..
'தென்காசி கார்த்தி யாருப்ப்ப..உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம்'..சொல்லி விட்டு தாத்தா போய்ட்டாரு..சந்தோசத்தில் கண்ணில் கண்னீருடன் தாத்தா பின்னாடியே போய் 'தாத்தா என்ன குழந்தைன்னு சொன்னாங்களா??' ன்னு கேட்க ..அவர் அதை கேட்க வில்லை என சொல்ல ஆர்வம் தாளாமல் அன்று இரவே வீட்டில் சொல்லாமல் நான் ஊருக்கு கிளம்பியது இன்னும் நினைவிலிருக்கிறது..
2 ஆம் வருடத்தில் 4 அரியர் விழ இது வேலைக்காகாது என காலேக் கேம்பஸ் போய் எல்லா அரியரையும் கிளியர் பண்ணி மறுபடி 4 ஆம் வருடத்தில் ரூமுக்கே வர மறுபடியும் லச்சுமி மெஸ் ..அதே அன்பு என 4 வருடமும் ஓடிற்று..
கடைசியாக 2 வருடம் முன்பு காலேஜில் கான்வொக்கேசனுக்கு போன போது லச்சுமி மெஸ்ஸிக்கு போனேன்..எல்லாரையும் பார்த்து பேசினேன்..தாத்தாவுக்கு பார்வை ரொம்பவும் கம்மியாயிருந்தது..அதே சோகத்துடன் மெஸ் அக்கா..அவர்கள் பெயரை நான் ஏன் கடைசி வரை கேட்டுக்கொள்ள வில்லை என தெரியல..
அந்த மருமகள் இப்போது பழையவராயிருந்தார்..கர்ப்பமாயிருந்தார்..ஆனால் பசங்க 'அக்கா சாம்பார்..அக்கா ஆப்பாயில்' எனக்கேட்க்கும் போது குறுக்கும்மறுக்குமோடி வேலைப்பார்த்துக்கொண்டிருந்தார்..ஒரு மகன் சண்டையிட்டு தனியே போய் விட்டதாய் சொல்லி அக்கா வருத்தப்பட்டார்..
நான் சாப்பாடும் ஆப்பாயிலும் சாப்பிட்டு கிளம்பினேன்..இப்போது மறுபடி ஏப்ரல் 20 அம் தேதி கோவை செல்கிறேன்..மறுபடி லச்சுமி மெஸ் போகனும்
அதனால் 2 வருடம் ஹாஸ்டல் விட்டு வெளியேறி காலேக் பக்கம் ரூம் எடுத்து தங்கினோம்..அங்கே தான் இந்த மெஸ் கான்செப்ட் எனக்கு அறிமுகமாச்சு..500 ரூ டெபாசிட் கொடுத்துட்டு அக்கவுண்ட் ஆரம்பித்து சாப்பிடலாம்..ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்து விட வேண்டும்..
எங்க ரூமருகே இருந்த லச்சுமி மெஸ்ஸில் அக்கவுன்ட் வைத்தேன் நான் மட்டும் ..நாம பேசிக்கா சோம்பேறியாச்சா பக்கத்து மெஸ்ஸிலே சேர்ந்து விட்டேன் மற்றவர்கள் தூரத்தில் இருந்த மெஸ்களில் சேற எங்க ரூம் லைப் ஆரம்பமானது..
லச்சுமி மெஸ்ஸை ஒரு குடும்பமே சேர்ந்து நடத்திக்கொண்டிருந்தது , ஒரு தாத்தா அவருக்கு காது கேக்காது ,ஆப்பாயில் கேட்டால் ஆம்பிளேட் கொண்டு வருவார்..அவரின் மனைவி பாட்டியம்மா அப்புறம் ஒரு வயதான் அக்கா அவ்ங்களோட 2 மகன்ஸ் அப்புறம் அதில் மணமான ஒரு மகனின் அழகான மனைவி..சீக்கிரத்திலே எல்லாரும் என்னுடன் பழகி விட்டார்கள்..அதிலும் அந்த அக்காவின் கணவர் இறந்திருப்பார் போல எப்போதும் சோகமாவே இருக்கும்..
கிட்டத்தட்ட எனக்கொரு குடும்பமே கிடைத்த மாதிரி இருந்தது ..வீட்டிலிருந்த பிரிந்த இருந்த எனக்கு இது ஒரு பெரிய வடிகாலாகவே இருந்தது..நான் அவர்களுடன் பழகுவதை என் ரூம் பசங்க எல்லாரும் கிண்டலடிப்பார்கள்..நான் கண்டுக்கவே மாட்டேன்..ஞாயிறு மட்டும் ல்ச்சுமி மெஸ்ஸில் கூட்டம் அலைமோதும் காரணம் சிக்கன் குழம்பு..அந்த சாப்பாடும் சிக்கன் குழம்பும் சாப்பிட்டு அப்புறம் தயிறு அதுக்கு மேல ஆபாயில் பழம் என உள்ளே தள்ளிக்கொண்டே இருப்போம்..
இளமையின் மிடுக்கில் சிகரட் ,கிரிக்கெட் பார்த்து கொண்டே 5 டீ, பசங்களை கூப்பிட்டு வந்து சாப்பிட வைத்து , ஆப்பாயில் யார் அதிகம் சாப்பிடுகிறார்கள் என போட்டி ..இவ்வாறாக மெஸ் பில் மாதம் 2000 தாண்டும்..
அந்த மெஸ் குடும்பத்தில் புதிதாய் வந்திருந்த அந்த புதுபெண்ணும் சில நாட்களிலேயே மெஸ்ஸில் சாம்பார் ,சட்னி பறிமாற ஆரம்பித்து விட்டார்..அழகாக மஞ்சள் பூசி ஈரத்தலையோட அந்த பெண்ணை பார்க்க கொஞ்சம் கூட்டமே வந்தது
என் அக்காவிற்கு குழந்த பிறந்தசமயம் இந்த மெஸ்ஸிக்கு தான் போன் பண்ணி என் அம்மா சொன்னார்கள்..அப்போதெல்லாம் செல் போன் கிடையாது..
'தென்காசி கார்த்தி யாருப்ப்ப..உங்க அக்காவுக்கு குழந்தை பிறந்திருக்காம்'..சொல்லி விட்டு தாத்தா போய்ட்டாரு..சந்தோசத்தில் கண்ணில் கண்னீருடன் தாத்தா பின்னாடியே போய் 'தாத்தா என்ன குழந்தைன்னு சொன்னாங்களா??' ன்னு கேட்க ..அவர் அதை கேட்க வில்லை என சொல்ல ஆர்வம் தாளாமல் அன்று இரவே வீட்டில் சொல்லாமல் நான் ஊருக்கு கிளம்பியது இன்னும் நினைவிலிருக்கிறது..
2 ஆம் வருடத்தில் 4 அரியர் விழ இது வேலைக்காகாது என காலேக் கேம்பஸ் போய் எல்லா அரியரையும் கிளியர் பண்ணி மறுபடி 4 ஆம் வருடத்தில் ரூமுக்கே வர மறுபடியும் லச்சுமி மெஸ் ..அதே அன்பு என 4 வருடமும் ஓடிற்று..
கடைசியாக 2 வருடம் முன்பு காலேஜில் கான்வொக்கேசனுக்கு போன போது லச்சுமி மெஸ்ஸிக்கு போனேன்..எல்லாரையும் பார்த்து பேசினேன்..தாத்தாவுக்கு பார்வை ரொம்பவும் கம்மியாயிருந்தது..அதே சோகத்துடன் மெஸ் அக்கா..அவர்கள் பெயரை நான் ஏன் கடைசி வரை கேட்டுக்கொள்ள வில்லை என தெரியல..
அந்த மருமகள் இப்போது பழையவராயிருந்தார்..கர்ப்பமாயிருந்தார்..ஆனால் பசங்க 'அக்கா சாம்பார்..அக்கா ஆப்பாயில்' எனக்கேட்க்கும் போது குறுக்கும்மறுக்குமோடி வேலைப்பார்த்துக்கொண்டிருந்தார்..ஒரு மகன் சண்டையிட்டு தனியே போய் விட்டதாய் சொல்லி அக்கா வருத்தப்பட்டார்..
நான் சாப்பாடும் ஆப்பாயிலும் சாப்பிட்டு கிளம்பினேன்..இப்போது மறுபடி ஏப்ரல் 20 அம் தேதி கோவை செல்கிறேன்..மறுபடி லச்சுமி மெஸ் போகனும்