PDA

View Full Version : வாழட்டும் காதல்



நம்பிகோபாலன்
30-03-2009, 12:18 PM
பெண்ணே
கவிதை எழுதி
நாளாகிறது

உனக்கு தெரியுமா
நீ விட்டு சென்ற
நாள் முதலாய்
என் நிழலும்
என்னோடு பயணிக்க மறுக்கிறது…

வழிகள்
வலிகளோடு
கலந்ததால்
என் வீடும்
எனக்கு மறந்து போனது…..

நீ
கேட்டு இல்லை
என்பதற்காக
சிரித்து கொண்டே
வழி அனுப்பினேன்
விழியோரம் நீரை கொண்டு…..

பார்த்த
முதல் நாள் முதல்
ரயிலடியில்
பிரிந்த கடைசி
நாள் வரை
வாழ்ந்திருக்கிறோம்
காதலில்
நம் நினைவுகளில்
வாழ்ந்து கொண்டு
இருக்கும்
காதல்….

ஜாக்
30-03-2009, 12:57 PM
காலத்தில் கோலத்தால் காதலர்கள் பிரிந்தாலும் காதல் அவர்களை என்றும் பிரிவதே இல்லை

மனதுக்கு இதமான கவிதை வாழ்த்துகள் நம்பிகோபாலன்