பாரதி
27-03-2009, 10:33 PM
தேதியில்லா குறிப்புகள்
பயணத்தில் படிக்காதது
வளைகுடா நாடுகளுக்கு சென்ற பிறகு பயணம் செய்வதென்பது தவிர்க்கவியலாததாகி விட்டது. ஆரம்பத்தில் இன்பச்சுற்றுலா செல்லும் சமயங்களில் பிடித்தமாக இருந்த பயணம் வேலைக்காக செல்லும் சமயங்களில் அலுப்பைத்தருவதாக மாறி விட்டது. என்றாலும் தொடர்வண்டிகளிலும், வானூர்திகளிலும் செல்லும் போது ஆர்வத்துடன் உடன்பயணிப்பவர்களையும், சுற்றுச்சூழலையும் கவனிப்பவனாக இருந்தேன். காலப்போக்கில் தூக்கம் என்பதே சுகமாகி விட்டது.
அபுதாபியில் வேலைக்கு சேர்ந்த புதிதில் திருச்சி அல்லது கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்களில் இருந்து ஷார்ஜா வழியாக சென்று வந்துகொண்டிருந்தேன். திருச்சி மற்றும் கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்களில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பிச்சையிட (சார்.. ஒரு 50 திர்ஹாம்ஸ் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன சார் குறஞ்சி போயிடும்...?) என்னால் இயலாததாலும், ஷார்ஜாவிலிருந்து பயணிப்பது சிரமமாக இருந்த காரணத்தாலும் என்னுடைய பயணத்தை சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து சென்று வருவதாக மாற்றிக்கொண்டேன்.
திருச்சி வானூர்தி நிலையத்தில் விமானம் கிளம்ப இரண்டுமணி நேரம் முன்னதாக மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதுவரைக்கும் பயணத்திற்கு வந்திருப்பவர்களுக்கு வெயிலோ, மழையோ இயற்கைதான் துணை. பரிசோதனை, பயணச்சீட்டிற்கு பிறகு காண வேண்டியதிருக்கும் குடியேற்றத்துறை அதிகாரிகளின் அலட்சியங்களை சொல்லி மாளாது. பின்னர் காத்திருந்து விமானத்தில் ஏறும் முன்னர் மறுபடியும் முழுமையான பரிசோதனை... இதற்கு பின்னரே ஒரு வழியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஆனாலும் அங்கு செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள் முழு திருப்தி அளிக்கக்கூடியவை. இப்படிப்பட்ட நிலையங்களை மட்டுமே கண்டிருந்த எனக்கு சென்னை விமான நிலையம் வியப்பை அளிப்பதாக இருந்தது. பயண நேர கணக்கின்றி எப்போது வேண்டுமெனிலும் நிலையத்தினுள் சென்று குளிரூட்டப்பட்ட இடங்களில் காத்திருக்க முடிந்தது. அதே போல பயணச்சீட்டு, குடியேற்றத்துறை - திரும்பி வரும் சமயங்களில் சுங்கத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் நடந்த கொண்ட விதம் மனநிறைவை அளிப்பதாக இருந்தது. ஆகவே பயண தூரம் அதிகமாக இருந்தாலும் சென்னை விமானநிலையம் என்னைக் கவர்ந்ததாகி விட்டது.
சென்னை திரிசூலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வானூர்திநிலையம் செல்ல சுரங்கப்பாதை அமைத்தபின்னர் பயணம் மிகவும் சுலபமாகி விட்டது. பெரும்பாலும் மின் தொடர்வண்டிகளில் ஏறி, திரிசூலம் நிலையத்தில் இறங்கி நடப்பதுதான் எனது வாடிக்கை. இப்போது சென்னை விமான நிலையத்தின் நுழைவாயில் முன்பாக மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இது முக்கிய சாலையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திருக்கிறது என்பதில் ஐய்யமில்லை. ஆனால் வானூர்தி நிலையத்திற்கு அந்த மேம்பாலம் ஒரு ஆபத்தாக விளங்குகிறது என்பதும் உண்மை. மேம்பாலத்தில் இருந்து வானூர்தி நிலையத்தின் உள்ளே இருக்கும் பெரும்பாலான பகுதிகளை எளிதில் காண இயலும். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாவிடில் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளைக்கூட எதிர் நோக்க வேண்டியதிருக்கலாம்.
மேலும் விமான நிலையத்தின் உள்ளும், முதல் பரிசோதனையின் போது கையில் எடுத்துச் செல்லும் பெட்டி என்று சொன்னால் அதை கதிரியக்க சோதனைக்கு உட்படுத்துவது இல்லை..!
பயணச்சீட்டு பெறுதல், குடியேற்றம் மற்றும் சுங்க அதிகாரிகளின் விசாரணை ஆகியவற்றைக் கடந்து மேல்தளத்தில் கடைகள், விமானத்திற்காக பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு செல்லும் வரை எதை வேண்டுமானாலும் நம்முடன் வைத்துக்கொள்ளும் பெட்டிகளில் கொண்டு செல்ல முடியும் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். மத்திய பாதுகாப்பு படையினர் வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பினை சில வருடங்களுக்கு முன்பிருந்து மேற்கொண்டு வருகின்றனர். சில பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக செயல்படுகின்றனர். ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதாக கூற இயலாது. இன்னும் முறையான பாதுகாப்பு இன்றியே சென்னை வானூர்திநிலையம் இருப்பதாக உணர்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் முயற்சி செய்தால், காத்திருக்கும் அறையில் இருக்கும் கடைகளில் பணிபுரிவோர் நினைத்தால் அல்லது உதவினால் பாதுகாப்புப்பரிசோதனை இன்றி எல்லாப் (..!?) பொருட்களையும் விமானத்திற்கே கூட எடுத்து சென்று விடமுடியும் என்று தோன்றுகிறது. இது குறித்து சிலமுறை சென்னை வானூர்தி நிலைய மேலாளருக்கு கடிதங்கள் எழுதியும் எந்தப்பயனும் இல்லை. அவ்வப்போது தொலைக்காட்சிகளில் "ஆறடுக்கு பாதுகாப்பு, ஏழடுக்கு பாதுகாப்பு....!" என்று செய்திகளில் கூறும் போது நகைக்கக்தான் தோன்றுகிறது.
இந்த நேரத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. சென்னை வழியாக சென்று வர ஆரம்பித்த காலத்தில், வானூர்தி நிலையத்தினுள் இருக்கும் கடைகளில், காகிதப்பைகளில் அடைக்கப்பட்ட மாம்பழச்சாறு போன்ற குளிர்பானங்களின் விற்பனை விலை 20 ரூபாயாக இருந்தது. வெளியில் வாங்கினால் 10 ரூபாய் மட்டுமே இருக்கும் அப்பானத்திற்கு ஏன் அவ்வளவு விலை என்று அங்கு விற்பனை செய்பவர்களிடம் கேட்டேன். வாடகையும் விலைவாசியுமே காரணம் என்று கூறினர். அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்பதே 10 ரூபாய் என்கிற போது எப்படி இந்த அளவிற்கு விற்கிறீர்கள்..? வானூர்தி நிலையமும் இந்தியாவினுள்தானே இருக்கிறது என்று விவாதம் செய்தேன். பயனில்லை.
"விமான நிலையங்களில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய உதவுங்கள்" என்று எழுதப்பட்டிருக்கும் பெட்டியின் அருகே வைத்திருக்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பெட்டியில் இட்டேன். நம் கடமை முடிந்தது, இனிமேல் விலையைக்கூட்டி விற்பதற்கு தடை விதிப்பார்கள் என்று எண்ணினேன். அடுத்த முறை சென்ற போது, அதே குளிர்பானத்தை பத்து ரூபாய்க்கு பதிலாக முப்பது ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் விடவில்லை... மறுபடியும் படிவம்... மறுபடியும் நம்பிக்கை.. அடுத்த முறை செல்லும் போது, அதே குளிர்பானம் நாற்பது ரூபாய் விற்கப்பட்டது. மீண்டும் படிவம்!... அடுத்த முறை சென்ற போது அதே குளிர்பானம் ஐம்பது ரூபாய்களாக விலை உயர்ந்திருந்தது! இம்முறை படிவத்தினை எடுக்க எனக்கு விருப்பமே இல்லை... படிவங்கள் போடப்பட்டிருந்த பெட்டி கவனிப்பாரற்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
குளிர்பானம் என்று மட்டுமில்லை, கொட்டைவடிநீர், இலைவடிநீர் முதற்கொண்டு அங்கு விற்கப்படும் இதர உணவுவகைகளின் விலைகளையும் படித்தால் புதிதாக வரும் பயணிகளுக்கு மயக்கம் வருவது நிச்சயம். புத்தகக்கடைகளும் அப்படியே..! அத்தனை புத்தகங்களின் விலையும் விண்ணை முட்டும். மோசர்பியர் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு, சாதாரணமாக கடைகளில் 20,30 அதிகபட்சம் 40 ரூபாய்க்கு விற்கப்படும் திரைப்பட குறுந்தகடுகளின் விலை அங்கே எவ்வளவு தெரியுமா...? நம்புங்கள் - கிட்டத்தட்ட 400 ரூபாய். ஹும்ம்... எங்கே போய் முறையிட...? என்று யோசித்துக்கொண்டே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்ததாக காத்திருக்கும் அறைக்கு சென்ற பின்னர் இந்தியன் வானூர்தி அதிகாரிகளைக் காண்பதோ, இந்திய வானூர்திகள் (வளைகுடா நாடுகளுக்கு) சரியான நேரத்திற்கு புறப்படும் செய்தியைக்கேட்பதோ வெகு அரிதானது. சில நேரங்களில் பலமணி நேரம் வரை எந்த அறிவிப்பும் இன்றி காத்திருந்ததும் உண்டுதான். இனிமேல் அவ்வாறு இருக்காது என்கிறார்கள், நம்புவோம்.
எந்த இருக்கையில் பயணம் செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே இணையத்தின் மூலம் நிச்சயித்துக்கொண்டு விடுவேன். இறங்கிய உடன் முதல் ஆளாக வெளியில் வருவதற்கு வசதியான இருக்கையை பதிவு செய்து வைத்துக்கொள்வேன். ஆரம்ப காலம் தவிர்த்து பெரும்பாலான சமயங்களில் உணவிற்கு பின்னர் உறங்குவதுதான் வழக்கம். சில நேரங்களில் உடன் பயணிப்பவர்களால் தூங்காமல் உரையாடியே பயண நேரத்தை கழித்ததும் உண்டு. சிலருடன் செய்த பயண அனுபவங்கள் நினைவில் உள்ளன.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பாக ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது. அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் வந்திருந்தார். என்னுடைய இருக்கைக்கு அடுத்த இருக்கை அவருக்கானது. பயணத்தின் போது குழந்தை தூங்குவதற்கு தனியாக ஒரு தொட்டிலை எங்கள் இருக்கைகளின் முன்பாக விமான சிப்பந்திகள் பொருத்தினர்.
முதலில் ஆங்கிலத்தில் உரையாடலை ஆரம்பித்த அவர் என்னைப் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். குழந்தையின் மூக்கு சளியினால் அடைபட்டும், (அடிக்கடி துடைத்திருப்பார்கள் போலும்) சிவப்பாகவும் இருந்தது. அமெரிக்காவில் நிலவிய அதிகக்குளிர் காரணமாக குழந்தை அவ்விதம் இருப்பதாக கூறினார். அதன் பின்னர் அவர் தமிழில் பேசியவற்றின் சுருக்கம் :
"கொஞ்சம் இந்த பேக்கை மேலே வச்சுடுறேளா?"
"அவர் ஸ்டேட்ல ஐ.டி. கம்பெனியில பெரிய போஸ்ட்ல இருக்கார்."
"நான் மயிலாப்பூர்ல ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணிண்டுருக்கேன்."
"ரெண்டு மூணு வாட்டி போயிட்டு வந்திருக்கேன். இந்தவாட்டி அவராலே வர முடியல."
"மேலேருந்து கொஞ்சம் பேக்க எடுத்து தரேளா... பால்புட்டி உள்ற இருக்கு."
"நான் போறச்சே பி..ஏ..ல (பிரிட்டீஸ் ஏர்வேஸ்) தான் போனேன். எனக்கு பிடிக்கவேயில்ல. அவாள்ளாம் இண்டியன்னா ஒரு மாதிரியா பாக்குறா. க்ரூ மெம்பர்ஸ்ண்ட கேட்டாலும் மதிக்கிறதேயில்ல. நம்மவாள்ளாம் படிச்சிருந்தாலும் அவா கண்டுக்குறதேயில்ல. கேட்டா ஆன்ஸர் கூட பண்ண மாட்டேன்றா.. அதனாலதான் என்ன நடந்தாலும் சரி இனி பி.ஏ..ல போக மாட்டேனுட்டேன்"
"நானும் பாத்துட்டேன், நம்மவாகிட்ட இருக்குற தெறம யார்கிட்டேயும் கெடயாது. என்ன வேலைன்னாலும் சின்சியரா செய்றதுல யாரும் கிட்ட வரமுடியாது."
"இந்த வாட்டி ஸ்டேட்ஸ்ல எங்க பார்த்தாலும் பனி... ஜில்லுன்னு -வெளியில கால வைக்கவே முடியாது பாருங்கோ. எல்லாம் இவனுக்காகதான். கார்ல ஏர்போர்ட் வரச்சே, பனியால ஆக்ஸிடெண்ட் ஆகிடுமோன்னு பயந்துண்டே வந்தேன்.."
"என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வராது. நம்ம ஊருதான் பெஸ்ட். ஃப்யூச்சர்ல எல்லாரும் நம்ம நாட்டுக்கு வேல கேட்டுண்டு வருவா பாருங்கோ."
"கொஞ்சம் பேக்க வச்சுடுறேளா.. ப்ளீஸ்?"
"எமிரேட்ஸ் எவ்வளவோ பரவால்ல. சாப்பாடெல்லாம் நன்னாருக்கு."
"ஆமா... இப்ப என்னவோ அனெளன்ஸ் பண்ணாளே.. என்ன சொல்றா..? ஒங்களுக்கு எப்படி இதெல்லாம் புரியறது? குடிபோதைல பேசறவா பேச்சு மாதிரின்னா கேக்குது. அனெளன்ஸ் செய்யறச்சே பொறுமையா செஞ்சா என்ன?"
"ஸ்கூல்ல கொழந்தைகளுக்கு நன்னா பாடம் எடுப்பேன்னு எனக்கு நல்ல பேரு."
"இவன கொஞ்சம் பாத்துக்கறேளா?"
"ஏன் சீட் பெல்ட்ட போடச்சொல்றா... இப்படி குலுங்குறதே..? ஃபிளைட்ல பிராப்ளமா?"
"பேக்க கொஞ்சம் எடுத்துத்தாங்கோளேன்."
"அட... தமிழ்படம் எல்லாம் இதுல வருதா...? எப்படிப் பாக்குறதுன்னு சொல்றேளா, ப்ளீஸ்..."
"ஒங்களுக்கு சிரமம் இல்லதானே...?"
இப்படியாக வழமையான பயணத்தூக்கம் அன்றைக்கு விடைபெற்றுப் போயிருந்தது.
இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் போது, பயணிகள் அனைவரும் குடியேற்றத்துறை அதிகாரிகளின் சோதனைக்காக ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்பது கட்டாயம். அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து விட்டு, கொஞ்சம் கண்ணயரலாமா என்று யோசித்தேன்.
"இத கொஞ்சம் ஃபில்லப் பண்ணித் தரேளா?" என்ற கேள்வியில் அந்த யோசனையும் மறைந்தது. "அதை அவரே செய்யலாமே" என்ற என் முகக்குறிப்பை அறிந்த அவர், "நீங்களே செஞ்சு கொடுங்கோ. ப்ளீஸ்" என்றார். பதில் பேசாமல், அவருடைய படிவத்தை பூர்த்தி செய்த பின் அந்தக்குழந்தையின் படிவத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். தேவையான விபரங்களைக் காண அக்குழந்தையின் பாஸ்போர்ட் புத்தகத்தைப் பிரித்தேன்.
அது அமெரிக்க நாட்டு பாஸ்போர்ட்!
என்னுடைய வியப்பான வினாவிற்கு "இவன பெத்துக்குறதுக்குதான் ஸ்டேட்ஸ் போனேன். அங்க பொறந்ததால இவன் அமெரிக்கன் சிட்டிஜன் ஆயிட்டான். பின்னாடி நாங்க ஸ்டேட்ஸ்ல செட்டில் ஆகுறதுக்கும் வசதியா இருக்குமோல்லியோ...?" என்ற பதில் வந்தது.
பொதுவாக அனைவரும் பேறுகாலத்தில் தாய்வீட்டிற்கு வர விரும்புவதுதானே வழக்கம் - இப்படியொரு சிந்தனை இவர்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது.
அதுவரை "இண்டியன்னா மதிக்க மாட்டேன்றா... நம்ம ஊருதான் பெஸ்ட், ஃப்யூச்சர்ல எல்லாரும் நம்ம நாட்டுக்கு வேல கேட்டுண்டு வருவா" என்று பேசியதெல்லாம் எதற்காக என்று எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கு...?
==============================================================
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்
பயணத்தில் படிக்காதது
வளைகுடா நாடுகளுக்கு சென்ற பிறகு பயணம் செய்வதென்பது தவிர்க்கவியலாததாகி விட்டது. ஆரம்பத்தில் இன்பச்சுற்றுலா செல்லும் சமயங்களில் பிடித்தமாக இருந்த பயணம் வேலைக்காக செல்லும் சமயங்களில் அலுப்பைத்தருவதாக மாறி விட்டது. என்றாலும் தொடர்வண்டிகளிலும், வானூர்திகளிலும் செல்லும் போது ஆர்வத்துடன் உடன்பயணிப்பவர்களையும், சுற்றுச்சூழலையும் கவனிப்பவனாக இருந்தேன். காலப்போக்கில் தூக்கம் என்பதே சுகமாகி விட்டது.
அபுதாபியில் வேலைக்கு சேர்ந்த புதிதில் திருச்சி அல்லது கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்களில் இருந்து ஷார்ஜா வழியாக சென்று வந்துகொண்டிருந்தேன். திருச்சி மற்றும் கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்களில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பிச்சையிட (சார்.. ஒரு 50 திர்ஹாம்ஸ் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன சார் குறஞ்சி போயிடும்...?) என்னால் இயலாததாலும், ஷார்ஜாவிலிருந்து பயணிப்பது சிரமமாக இருந்த காரணத்தாலும் என்னுடைய பயணத்தை சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து சென்று வருவதாக மாற்றிக்கொண்டேன்.
திருச்சி வானூர்தி நிலையத்தில் விமானம் கிளம்ப இரண்டுமணி நேரம் முன்னதாக மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதுவரைக்கும் பயணத்திற்கு வந்திருப்பவர்களுக்கு வெயிலோ, மழையோ இயற்கைதான் துணை. பரிசோதனை, பயணச்சீட்டிற்கு பிறகு காண வேண்டியதிருக்கும் குடியேற்றத்துறை அதிகாரிகளின் அலட்சியங்களை சொல்லி மாளாது. பின்னர் காத்திருந்து விமானத்தில் ஏறும் முன்னர் மறுபடியும் முழுமையான பரிசோதனை... இதற்கு பின்னரே ஒரு வழியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஆனாலும் அங்கு செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள் முழு திருப்தி அளிக்கக்கூடியவை. இப்படிப்பட்ட நிலையங்களை மட்டுமே கண்டிருந்த எனக்கு சென்னை விமான நிலையம் வியப்பை அளிப்பதாக இருந்தது. பயண நேர கணக்கின்றி எப்போது வேண்டுமெனிலும் நிலையத்தினுள் சென்று குளிரூட்டப்பட்ட இடங்களில் காத்திருக்க முடிந்தது. அதே போல பயணச்சீட்டு, குடியேற்றத்துறை - திரும்பி வரும் சமயங்களில் சுங்கத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் நடந்த கொண்ட விதம் மனநிறைவை அளிப்பதாக இருந்தது. ஆகவே பயண தூரம் அதிகமாக இருந்தாலும் சென்னை விமானநிலையம் என்னைக் கவர்ந்ததாகி விட்டது.
சென்னை திரிசூலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வானூர்திநிலையம் செல்ல சுரங்கப்பாதை அமைத்தபின்னர் பயணம் மிகவும் சுலபமாகி விட்டது. பெரும்பாலும் மின் தொடர்வண்டிகளில் ஏறி, திரிசூலம் நிலையத்தில் இறங்கி நடப்பதுதான் எனது வாடிக்கை. இப்போது சென்னை விமான நிலையத்தின் நுழைவாயில் முன்பாக மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இது முக்கிய சாலையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திருக்கிறது என்பதில் ஐய்யமில்லை. ஆனால் வானூர்தி நிலையத்திற்கு அந்த மேம்பாலம் ஒரு ஆபத்தாக விளங்குகிறது என்பதும் உண்மை. மேம்பாலத்தில் இருந்து வானூர்தி நிலையத்தின் உள்ளே இருக்கும் பெரும்பாலான பகுதிகளை எளிதில் காண இயலும். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாவிடில் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளைக்கூட எதிர் நோக்க வேண்டியதிருக்கலாம்.
மேலும் விமான நிலையத்தின் உள்ளும், முதல் பரிசோதனையின் போது கையில் எடுத்துச் செல்லும் பெட்டி என்று சொன்னால் அதை கதிரியக்க சோதனைக்கு உட்படுத்துவது இல்லை..!
பயணச்சீட்டு பெறுதல், குடியேற்றம் மற்றும் சுங்க அதிகாரிகளின் விசாரணை ஆகியவற்றைக் கடந்து மேல்தளத்தில் கடைகள், விமானத்திற்காக பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு செல்லும் வரை எதை வேண்டுமானாலும் நம்முடன் வைத்துக்கொள்ளும் பெட்டிகளில் கொண்டு செல்ல முடியும் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். மத்திய பாதுகாப்பு படையினர் வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பினை சில வருடங்களுக்கு முன்பிருந்து மேற்கொண்டு வருகின்றனர். சில பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக செயல்படுகின்றனர். ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதாக கூற இயலாது. இன்னும் முறையான பாதுகாப்பு இன்றியே சென்னை வானூர்திநிலையம் இருப்பதாக உணர்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் முயற்சி செய்தால், காத்திருக்கும் அறையில் இருக்கும் கடைகளில் பணிபுரிவோர் நினைத்தால் அல்லது உதவினால் பாதுகாப்புப்பரிசோதனை இன்றி எல்லாப் (..!?) பொருட்களையும் விமானத்திற்கே கூட எடுத்து சென்று விடமுடியும் என்று தோன்றுகிறது. இது குறித்து சிலமுறை சென்னை வானூர்தி நிலைய மேலாளருக்கு கடிதங்கள் எழுதியும் எந்தப்பயனும் இல்லை. அவ்வப்போது தொலைக்காட்சிகளில் "ஆறடுக்கு பாதுகாப்பு, ஏழடுக்கு பாதுகாப்பு....!" என்று செய்திகளில் கூறும் போது நகைக்கக்தான் தோன்றுகிறது.
இந்த நேரத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. சென்னை வழியாக சென்று வர ஆரம்பித்த காலத்தில், வானூர்தி நிலையத்தினுள் இருக்கும் கடைகளில், காகிதப்பைகளில் அடைக்கப்பட்ட மாம்பழச்சாறு போன்ற குளிர்பானங்களின் விற்பனை விலை 20 ரூபாயாக இருந்தது. வெளியில் வாங்கினால் 10 ரூபாய் மட்டுமே இருக்கும் அப்பானத்திற்கு ஏன் அவ்வளவு விலை என்று அங்கு விற்பனை செய்பவர்களிடம் கேட்டேன். வாடகையும் விலைவாசியுமே காரணம் என்று கூறினர். அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்பதே 10 ரூபாய் என்கிற போது எப்படி இந்த அளவிற்கு விற்கிறீர்கள்..? வானூர்தி நிலையமும் இந்தியாவினுள்தானே இருக்கிறது என்று விவாதம் செய்தேன். பயனில்லை.
"விமான நிலையங்களில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய உதவுங்கள்" என்று எழுதப்பட்டிருக்கும் பெட்டியின் அருகே வைத்திருக்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பெட்டியில் இட்டேன். நம் கடமை முடிந்தது, இனிமேல் விலையைக்கூட்டி விற்பதற்கு தடை விதிப்பார்கள் என்று எண்ணினேன். அடுத்த முறை சென்ற போது, அதே குளிர்பானத்தை பத்து ரூபாய்க்கு பதிலாக முப்பது ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் விடவில்லை... மறுபடியும் படிவம்... மறுபடியும் நம்பிக்கை.. அடுத்த முறை செல்லும் போது, அதே குளிர்பானம் நாற்பது ரூபாய் விற்கப்பட்டது. மீண்டும் படிவம்!... அடுத்த முறை சென்ற போது அதே குளிர்பானம் ஐம்பது ரூபாய்களாக விலை உயர்ந்திருந்தது! இம்முறை படிவத்தினை எடுக்க எனக்கு விருப்பமே இல்லை... படிவங்கள் போடப்பட்டிருந்த பெட்டி கவனிப்பாரற்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
குளிர்பானம் என்று மட்டுமில்லை, கொட்டைவடிநீர், இலைவடிநீர் முதற்கொண்டு அங்கு விற்கப்படும் இதர உணவுவகைகளின் விலைகளையும் படித்தால் புதிதாக வரும் பயணிகளுக்கு மயக்கம் வருவது நிச்சயம். புத்தகக்கடைகளும் அப்படியே..! அத்தனை புத்தகங்களின் விலையும் விண்ணை முட்டும். மோசர்பியர் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு, சாதாரணமாக கடைகளில் 20,30 அதிகபட்சம் 40 ரூபாய்க்கு விற்கப்படும் திரைப்பட குறுந்தகடுகளின் விலை அங்கே எவ்வளவு தெரியுமா...? நம்புங்கள் - கிட்டத்தட்ட 400 ரூபாய். ஹும்ம்... எங்கே போய் முறையிட...? என்று யோசித்துக்கொண்டே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்ததாக காத்திருக்கும் அறைக்கு சென்ற பின்னர் இந்தியன் வானூர்தி அதிகாரிகளைக் காண்பதோ, இந்திய வானூர்திகள் (வளைகுடா நாடுகளுக்கு) சரியான நேரத்திற்கு புறப்படும் செய்தியைக்கேட்பதோ வெகு அரிதானது. சில நேரங்களில் பலமணி நேரம் வரை எந்த அறிவிப்பும் இன்றி காத்திருந்ததும் உண்டுதான். இனிமேல் அவ்வாறு இருக்காது என்கிறார்கள், நம்புவோம்.
எந்த இருக்கையில் பயணம் செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே இணையத்தின் மூலம் நிச்சயித்துக்கொண்டு விடுவேன். இறங்கிய உடன் முதல் ஆளாக வெளியில் வருவதற்கு வசதியான இருக்கையை பதிவு செய்து வைத்துக்கொள்வேன். ஆரம்ப காலம் தவிர்த்து பெரும்பாலான சமயங்களில் உணவிற்கு பின்னர் உறங்குவதுதான் வழக்கம். சில நேரங்களில் உடன் பயணிப்பவர்களால் தூங்காமல் உரையாடியே பயண நேரத்தை கழித்ததும் உண்டு. சிலருடன் செய்த பயண அனுபவங்கள் நினைவில் உள்ளன.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பாக ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது. அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் வந்திருந்தார். என்னுடைய இருக்கைக்கு அடுத்த இருக்கை அவருக்கானது. பயணத்தின் போது குழந்தை தூங்குவதற்கு தனியாக ஒரு தொட்டிலை எங்கள் இருக்கைகளின் முன்பாக விமான சிப்பந்திகள் பொருத்தினர்.
முதலில் ஆங்கிலத்தில் உரையாடலை ஆரம்பித்த அவர் என்னைப் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். குழந்தையின் மூக்கு சளியினால் அடைபட்டும், (அடிக்கடி துடைத்திருப்பார்கள் போலும்) சிவப்பாகவும் இருந்தது. அமெரிக்காவில் நிலவிய அதிகக்குளிர் காரணமாக குழந்தை அவ்விதம் இருப்பதாக கூறினார். அதன் பின்னர் அவர் தமிழில் பேசியவற்றின் சுருக்கம் :
"கொஞ்சம் இந்த பேக்கை மேலே வச்சுடுறேளா?"
"அவர் ஸ்டேட்ல ஐ.டி. கம்பெனியில பெரிய போஸ்ட்ல இருக்கார்."
"நான் மயிலாப்பூர்ல ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணிண்டுருக்கேன்."
"ரெண்டு மூணு வாட்டி போயிட்டு வந்திருக்கேன். இந்தவாட்டி அவராலே வர முடியல."
"மேலேருந்து கொஞ்சம் பேக்க எடுத்து தரேளா... பால்புட்டி உள்ற இருக்கு."
"நான் போறச்சே பி..ஏ..ல (பிரிட்டீஸ் ஏர்வேஸ்) தான் போனேன். எனக்கு பிடிக்கவேயில்ல. அவாள்ளாம் இண்டியன்னா ஒரு மாதிரியா பாக்குறா. க்ரூ மெம்பர்ஸ்ண்ட கேட்டாலும் மதிக்கிறதேயில்ல. நம்மவாள்ளாம் படிச்சிருந்தாலும் அவா கண்டுக்குறதேயில்ல. கேட்டா ஆன்ஸர் கூட பண்ண மாட்டேன்றா.. அதனாலதான் என்ன நடந்தாலும் சரி இனி பி.ஏ..ல போக மாட்டேனுட்டேன்"
"நானும் பாத்துட்டேன், நம்மவாகிட்ட இருக்குற தெறம யார்கிட்டேயும் கெடயாது. என்ன வேலைன்னாலும் சின்சியரா செய்றதுல யாரும் கிட்ட வரமுடியாது."
"இந்த வாட்டி ஸ்டேட்ஸ்ல எங்க பார்த்தாலும் பனி... ஜில்லுன்னு -வெளியில கால வைக்கவே முடியாது பாருங்கோ. எல்லாம் இவனுக்காகதான். கார்ல ஏர்போர்ட் வரச்சே, பனியால ஆக்ஸிடெண்ட் ஆகிடுமோன்னு பயந்துண்டே வந்தேன்.."
"என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வராது. நம்ம ஊருதான் பெஸ்ட். ஃப்யூச்சர்ல எல்லாரும் நம்ம நாட்டுக்கு வேல கேட்டுண்டு வருவா பாருங்கோ."
"கொஞ்சம் பேக்க வச்சுடுறேளா.. ப்ளீஸ்?"
"எமிரேட்ஸ் எவ்வளவோ பரவால்ல. சாப்பாடெல்லாம் நன்னாருக்கு."
"ஆமா... இப்ப என்னவோ அனெளன்ஸ் பண்ணாளே.. என்ன சொல்றா..? ஒங்களுக்கு எப்படி இதெல்லாம் புரியறது? குடிபோதைல பேசறவா பேச்சு மாதிரின்னா கேக்குது. அனெளன்ஸ் செய்யறச்சே பொறுமையா செஞ்சா என்ன?"
"ஸ்கூல்ல கொழந்தைகளுக்கு நன்னா பாடம் எடுப்பேன்னு எனக்கு நல்ல பேரு."
"இவன கொஞ்சம் பாத்துக்கறேளா?"
"ஏன் சீட் பெல்ட்ட போடச்சொல்றா... இப்படி குலுங்குறதே..? ஃபிளைட்ல பிராப்ளமா?"
"பேக்க கொஞ்சம் எடுத்துத்தாங்கோளேன்."
"அட... தமிழ்படம் எல்லாம் இதுல வருதா...? எப்படிப் பாக்குறதுன்னு சொல்றேளா, ப்ளீஸ்..."
"ஒங்களுக்கு சிரமம் இல்லதானே...?"
இப்படியாக வழமையான பயணத்தூக்கம் அன்றைக்கு விடைபெற்றுப் போயிருந்தது.
இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் போது, பயணிகள் அனைவரும் குடியேற்றத்துறை அதிகாரிகளின் சோதனைக்காக ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்பது கட்டாயம். அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து விட்டு, கொஞ்சம் கண்ணயரலாமா என்று யோசித்தேன்.
"இத கொஞ்சம் ஃபில்லப் பண்ணித் தரேளா?" என்ற கேள்வியில் அந்த யோசனையும் மறைந்தது. "அதை அவரே செய்யலாமே" என்ற என் முகக்குறிப்பை அறிந்த அவர், "நீங்களே செஞ்சு கொடுங்கோ. ப்ளீஸ்" என்றார். பதில் பேசாமல், அவருடைய படிவத்தை பூர்த்தி செய்த பின் அந்தக்குழந்தையின் படிவத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். தேவையான விபரங்களைக் காண அக்குழந்தையின் பாஸ்போர்ட் புத்தகத்தைப் பிரித்தேன்.
அது அமெரிக்க நாட்டு பாஸ்போர்ட்!
என்னுடைய வியப்பான வினாவிற்கு "இவன பெத்துக்குறதுக்குதான் ஸ்டேட்ஸ் போனேன். அங்க பொறந்ததால இவன் அமெரிக்கன் சிட்டிஜன் ஆயிட்டான். பின்னாடி நாங்க ஸ்டேட்ஸ்ல செட்டில் ஆகுறதுக்கும் வசதியா இருக்குமோல்லியோ...?" என்ற பதில் வந்தது.
பொதுவாக அனைவரும் பேறுகாலத்தில் தாய்வீட்டிற்கு வர விரும்புவதுதானே வழக்கம் - இப்படியொரு சிந்தனை இவர்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது.
அதுவரை "இண்டியன்னா மதிக்க மாட்டேன்றா... நம்ம ஊருதான் பெஸ்ட், ஃப்யூச்சர்ல எல்லாரும் நம்ம நாட்டுக்கு வேல கேட்டுண்டு வருவா" என்று பேசியதெல்லாம் எதற்காக என்று எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கு...?
==============================================================
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்