PDA

View Full Version : ஆதிநாள் அது



umakarthick
26-03-2009, 01:31 PM
ஆதிநாள் அது
மனிதனைக் கவர
கடவுளுக்கும் சாத்தானுக்கும்
கடும் முயற்சி நடந்தது

மனிதன் பயணிக்க கடவுள்
ஆலிலையைக் கொண்டு வந்தார்
சாத்தான் தேர் தந்தான்

வெளிச்சத்துக்குக் கடவுள்
அகல்விளக்கு ஏற்றிவைத்தார்.

விடுவானா சாத்தான்
வாணவேடிக்கை நிகழ்த்தினான்.
வசிக்கக் குடிலொன்று
கொடுத்தார் கடவுள்.

நிலப்பரப்பையே நீட்டினான்
சாத்தான் அதே வேகத்தில்

கடவுள் காதலைக் கொடுத்தார்
சாத்தான் காமத்தைப் பருக விட்டான்.

எச்சில் ஒழுக மனிதன்
சாத்தானைப் பார்த்துப் புன்னகைத்தான்
கோபத்தில் கடவுள்
கோயிலுக்குள் சென்றுவிட்டார்
மனசுக்குள் சாத்தான் புகுந்துகொண்டான்.

- வஸந்த் செந்தில்.

அறிஞர்
26-03-2009, 04:16 PM
ஆதியில் ஆரம்பித்தது... இன்னும் தொடர்கிறது....