பா.ராஜேஷ்
26-03-2009, 06:44 AM
கோல்கட்டா நைட் ரைடர்ஸ் (ஐ.பி.எல்.,) அணியின் கேப்டன் பதவி யிலிருந்து சவுரவ் கங்குலி நீக்கப்பட்டார். ஐ.பி.எல்., சார்பில் 2வது கட்ட "டுவென்டி-20' கிரிக் கெட் தொடர் தென் ஆப்ரிக் காவில் வரும் ஏப்ரல் 18 ம் தேதி துவங் குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் "கோல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியும் ஒன்று. இதன் உரிமையாளராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்தார். கங்குலிக்கும், அணியின் பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் ஜான் புக்கானனுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கேப்டன் பதவியில் இருந்து கங்குலியை நீக்க வேண்டும் என புக்கானன் விரும்புவதாக செய்திகள் வெளியாகின.
சுழற்சி முறை: இந்நிலை யில், நேற்று கோல் கட்டாவில் ஜான் புக்கானன், சவுரவ் கங்குலி இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது புக்கானன் கூறுகையில், ""அணியில் கங்குலி, மெக்கலம் (நியூசி.,), கெய்ல் (வெ. இண்டீஸ்), ஹாட்ஜ் (ஆஸி.,) என நான்கு கேப்டன்கள் உள்ளனர். இந்நிலையில் அணிக்கு நிரந்தர கேப்டன் தேவை யில்லை என முடிவு செய்தேன். இது குறித்து நானும், கங்குலி யிடம் ஆலோசனை நடத்தினேன். இனி ஒவ்வொரு போட்டிக்கும் சுழற்சி முறையில் ஒருவர் அணியை வழிநடத்து வார்,'' என்றார். கங்குலிக்கும், தனக்கும் மோதல் இல்லை என்பதை விளக்கும் விதமாக பேட்டியின் இடையே," கங்குலி கோல்கட்டாவின் ராஜா' என அவரை புகழ்ந்தார் புக்கானன்.
கங்குலி பெருந்தன்மை: புக்கானன் முடிவை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி. இது குறித்து அவர் கூறுகையில்,""அணியின் பயிற்சியாளர் புக்கானன் முடிவு எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. சுழற்சி முறையில் கேப்டன்களை தேர்வு செய்வது என்பது புதிய முறை. புக்கானன் இம்முடிவை எடுத்து உள்ளார். இது அவரது விருப்பம். என்னை பொறுத்த வரை, தொடரில் சிறப்பாக ஆடி ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,'' என்றார்.
~~~~~~~~~~~~~~~~~
நன்றி: தினமலர்
~~~~~~~~~~~~~~~~~
சுழற்சி முறை: இந்நிலை யில், நேற்று கோல் கட்டாவில் ஜான் புக்கானன், சவுரவ் கங்குலி இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது புக்கானன் கூறுகையில், ""அணியில் கங்குலி, மெக்கலம் (நியூசி.,), கெய்ல் (வெ. இண்டீஸ்), ஹாட்ஜ் (ஆஸி.,) என நான்கு கேப்டன்கள் உள்ளனர். இந்நிலையில் அணிக்கு நிரந்தர கேப்டன் தேவை யில்லை என முடிவு செய்தேன். இது குறித்து நானும், கங்குலி யிடம் ஆலோசனை நடத்தினேன். இனி ஒவ்வொரு போட்டிக்கும் சுழற்சி முறையில் ஒருவர் அணியை வழிநடத்து வார்,'' என்றார். கங்குலிக்கும், தனக்கும் மோதல் இல்லை என்பதை விளக்கும் விதமாக பேட்டியின் இடையே," கங்குலி கோல்கட்டாவின் ராஜா' என அவரை புகழ்ந்தார் புக்கானன்.
கங்குலி பெருந்தன்மை: புக்கானன் முடிவை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி. இது குறித்து அவர் கூறுகையில்,""அணியின் பயிற்சியாளர் புக்கானன் முடிவு எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. சுழற்சி முறையில் கேப்டன்களை தேர்வு செய்வது என்பது புதிய முறை. புக்கானன் இம்முடிவை எடுத்து உள்ளார். இது அவரது விருப்பம். என்னை பொறுத்த வரை, தொடரில் சிறப்பாக ஆடி ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,'' என்றார்.
~~~~~~~~~~~~~~~~~
நன்றி: தினமலர்
~~~~~~~~~~~~~~~~~