அமரன்
25-03-2009, 10:06 AM
ஏதோ ஒன்று தழுவ விழிகள் விரிகின்றன. உறக்கம் சுருள்கிறது. கண்ணாடிச்சாளரத்தை மறைத்திருந்த செந்நிறத் திரை சற்றே விலகி இருக்க அந்த விலகலினூடு வைகறையின் மெல்லிய வெளிச்சம் மோகத்துடன் அறைக்குள் பார்வை படர்த்துகிறது. நேராக என் மேனியில் பீச்சுகிறது. அண்மைக் காலங்களில்எத்தனையோ உறக்க உடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அந்த உடைவுகள் தந்திராத ஒருவிதமான திவ்விய உணர்வை இந்த விடியல் தந்தபடி உள்ளது. எந்தமாதிரியான ஒரு அதிகாலைக்காக தினமும் ஏங்குகிறேனோ அந்தமாதிரியான விடியல் வந்த சந்தோசத்துடன்சற்றே கழுத்தை வளைத்து கண்மலர்களால் இணையப்பெட்டியைப் பார்க்கிறேன். நேரம் அஞ்சரை என்றது. கட்டிலை விட்டிறங்கி மாடிப்படிகளில் இறங்கி கூடத்தை வந்தடைகிறேன்.
தோட்டத்துப் பக்கச் சட்டரை மேலே உயர்த்தி வெளிச்சத்துக்கு அழைப்பு விடுகிறேன். கூடத்தின் தலை ரசிகன் போல் கூடத்தை நிரப்பினான். நானோ தோட்டத்தை கண்ணோட்டம் விட்டேன். இளவேனில் காலம் மலர்ந்ததையிட்டு வண்ண நிற ரோஜாக்கள்தாமும் மலர்ந்திருந்தன என் இந்த வைகறை உள்ளம் போலவே. இளஞ்சூரியன் எழுச்சியை என் கண்கள் எதிர்நோக்கரோஜாச் செடிகளோ சூரியன் வருகையில் சிறிதாய் அஞ்சி பனிப்போர்வையை இழுத்துப் போர்த்தி இருக்கின்றன. பனியுடன் சேர்ந்து ஒருவித சோகமும் படர்ந்திருப்பதாக செடிகளின் சோர்வு உறுதிபடப் பேச எங்கிருந்தோ வந்த புளினிக் குருவிகள் செடிகளைக் குலுக்கி உற்சாகம் ஊட்டுகின்றன. மெல்லெனக் கொஞ்சிப்பேசி இதங்கொடுத்து உற்சாகம் கூட்டுகின்றன. செடிகளும் ஊட்டம் பெற்றதாய் ஆட்டம் போடுகின்றன. பனியும் சோர்வும் தோட்டத்தரைகளில் சிதறி விழுகின்றன. சித்திரம் கீறுகின்றன.
ஆகாயம் தரையினை முத்தமிட்டுக் கொள்வதை வேடிக்கை பார்க்கப் பிடிக்காமல் பார்வையை பக்கம் திருப்புகிறேன். செய்றதையும் செய்துவிட்டு வெள்ளையினப் பெண்போல் சலனமின்றி இருக்கிறது வானம். அகமும் புறமும் கொட்டிக்கிடந்த அழகில் மயங்கிக் கிடந்த என்னை கண்ணாடிக் கதவில் தொட்ட கன்னம் சுய நினைவுக்கு கொண்டு வரத்தான் தெரிகிறது நேரம் ஆறரை ஆனது. பொடிசுகளும் நித்திரை விட்டுவர மேலும்சந்தோசம் பூசிக் கொள்கிறது வீடு. பள்ளிக் கிளம்புகை ஆனந்தக் களேபரங்கள் முடிவுக்கு வர வேலை இல்லாமல் இருந்த என் தனிமை போக்கத் தயாராகின்றன வீடும் கணினியும்.
மன்றம் வருகிறேன். இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ என்ற பாடலை என் நெஞ்சப் பெட்டியிலிருந்து ஒழுகச் செய்தபடிசில படைப்புகளுக்குப் பதில் போடுகிறேன். ஏதோ ஒன்று கடந்த பல நாட்களாக திறந்து பார்க்கப்படாத என் மின்னஞ்சல்பெட்டியை திறக்கச் சொல்லுது. கை தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்தக் காலைப் பொழுதின் இரகசியக் கதவு மெல்லத் திறக்கிறது. பெட்டிக்குள் இருந்து துள்ளி வருகிறான் இணையத்தூதுவன். என் பழைய நண்பர்கள் மூவர் தூதுவனை அனுப்பி இருந்தார்கள். அவர்களுடன் தூதுவன் மூலம் இணைகிறேன்.
பழங்கதைகள் பேசியதில் மணிகள் துரித கதியில் சிதறி விழுகின்றன. ஒரு தருணத்தில் மூவரும் ஒரு இடத்தில் சேர்ந்து விடச் சோர்ந்து விழுகிறது இருந்த கொஞ்ச நஞ்சச்சோர்வு. அந்த நேரம் பார்த்து உள்ளூர் நண்பனின் தொலைபேசி அழைப்பு. வீட்டில் உள்ளேன் என்று அக்னி அனுப்பிய அலைபேசி சமிக்கை. என்ன இது சினேகம் இன்று என்னுடன் அதிகம் ஸ்னேகிக்கிறது என்ற வியப்பு மேலிட்ட வேளை அலைபேசியில் அயல்நாட்டு தோழன். குலாவியபடிமுற்றும் ஆடை துறந்த சாளரத்துனூடு வெளியே பார்க்கிறேன். மஞ்சள் வெயில் மாலையை நினைவூட்டுகிறது மதியம். துணைக்குப் பசியும். அளாவல்களுக்கும் குலாவல்களுக்கும் தொடரும் போட்டுவிட்டு வயிற்றைக் கவனிக்கிறேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் சட்டென்று மாறுது வானிலை. வானம் மப்புப் போட மெல்லிய கூதல் காதல் காற்று சாமரம் வீசத் துவங்குகிறது. வருவாய்த்துறையில் இருந்த சொந்த வேலை கூவி அழைக்க வெளியே கிளம்புகிறேன். வாருவாய்த்துறை அலுவலக வாசலில் இன்னொரு நண்பன். மீண்டும் உள்ளுக்குள் ஒரு இன்பப்பிரளயம். சுற்றும் ஓடத் தொடங்குகிறது நட்புநதி. எல்லாம் முடித்து வீடேகினால் கூகிளில் செல்வா.. கூடவே ஆதி, மதி.. மறுபடியும் சகா வட்டாரம். பத்து நிமிடந்தான்.. விடை பெற்ற வேளை செல்வாவின் தொலைபேசி அழைப்பு. பேசிக்கொண்டே தயராகி பேசி முடித்து வெளிக் கிளம்புகிறேன் உள்ளூர் சினேகிதர்களை சந்திக்க.
இளந்தென்றல் சற்று வீரியம் பெறுகிறது. முகத்தில் கூதலை துப்புகிறது. உடலெங்கும் அது வழிகிறது. வானத்தில் கரு மேகங்கள் கூடுகிறன இன்றைய என் நண்பர்கள் சந்திப்புப் போலவே. இரவு மணி பத்து.. செயற்கையாய் அமைந்த ஆற்றங்கரை வனப்பை நண்பர்களுடன் அனுபவித்து விட்டு விடை பெறும் வேளை வானம் மழை பொழிகிறது. என் ஆனந்தத்தை அது மொழிகிறது. ஆனந்த மழையில் நனைந்தபடி வீடேகிறேன்.
இப்படிக் காலை முதல் மாலை முடியும் வரை சினேகங்களில் பிடியில் இன்றைய பொழுது.. இரவு நேர உறக்கமோ தழுவ மறுக்கிறது. இந்தமாதிரியான தருணங்களில்தான் கதைகள், கவிதைகளை எழுதுவது . ஏறத்தாழ ஓராண்டுகளாக இந்த மாதிரி தூக்கம் தர மறுக்கும் இரவுகளில் எழுதியதில்லை. இன்று.. இந்த இரவில் அந்தப் பழக்கம் எழுகிறது. கட்டுக் கதைகளுக்குப் பதிலாக பழங்கதைகள், குறிப்பாக ஸ்னேகிதர்கள் கதைகள் அதி வீச்சுடன் எழுந்தாடுகின்றன. வரும் பொழுதுகளில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தோட்டத்துப் பக்கச் சட்டரை மேலே உயர்த்தி வெளிச்சத்துக்கு அழைப்பு விடுகிறேன். கூடத்தின் தலை ரசிகன் போல் கூடத்தை நிரப்பினான். நானோ தோட்டத்தை கண்ணோட்டம் விட்டேன். இளவேனில் காலம் மலர்ந்ததையிட்டு வண்ண நிற ரோஜாக்கள்தாமும் மலர்ந்திருந்தன என் இந்த வைகறை உள்ளம் போலவே. இளஞ்சூரியன் எழுச்சியை என் கண்கள் எதிர்நோக்கரோஜாச் செடிகளோ சூரியன் வருகையில் சிறிதாய் அஞ்சி பனிப்போர்வையை இழுத்துப் போர்த்தி இருக்கின்றன. பனியுடன் சேர்ந்து ஒருவித சோகமும் படர்ந்திருப்பதாக செடிகளின் சோர்வு உறுதிபடப் பேச எங்கிருந்தோ வந்த புளினிக் குருவிகள் செடிகளைக் குலுக்கி உற்சாகம் ஊட்டுகின்றன. மெல்லெனக் கொஞ்சிப்பேசி இதங்கொடுத்து உற்சாகம் கூட்டுகின்றன. செடிகளும் ஊட்டம் பெற்றதாய் ஆட்டம் போடுகின்றன. பனியும் சோர்வும் தோட்டத்தரைகளில் சிதறி விழுகின்றன. சித்திரம் கீறுகின்றன.
ஆகாயம் தரையினை முத்தமிட்டுக் கொள்வதை வேடிக்கை பார்க்கப் பிடிக்காமல் பார்வையை பக்கம் திருப்புகிறேன். செய்றதையும் செய்துவிட்டு வெள்ளையினப் பெண்போல் சலனமின்றி இருக்கிறது வானம். அகமும் புறமும் கொட்டிக்கிடந்த அழகில் மயங்கிக் கிடந்த என்னை கண்ணாடிக் கதவில் தொட்ட கன்னம் சுய நினைவுக்கு கொண்டு வரத்தான் தெரிகிறது நேரம் ஆறரை ஆனது. பொடிசுகளும் நித்திரை விட்டுவர மேலும்சந்தோசம் பூசிக் கொள்கிறது வீடு. பள்ளிக் கிளம்புகை ஆனந்தக் களேபரங்கள் முடிவுக்கு வர வேலை இல்லாமல் இருந்த என் தனிமை போக்கத் தயாராகின்றன வீடும் கணினியும்.
மன்றம் வருகிறேன். இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ என்ற பாடலை என் நெஞ்சப் பெட்டியிலிருந்து ஒழுகச் செய்தபடிசில படைப்புகளுக்குப் பதில் போடுகிறேன். ஏதோ ஒன்று கடந்த பல நாட்களாக திறந்து பார்க்கப்படாத என் மின்னஞ்சல்பெட்டியை திறக்கச் சொல்லுது. கை தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்தக் காலைப் பொழுதின் இரகசியக் கதவு மெல்லத் திறக்கிறது. பெட்டிக்குள் இருந்து துள்ளி வருகிறான் இணையத்தூதுவன். என் பழைய நண்பர்கள் மூவர் தூதுவனை அனுப்பி இருந்தார்கள். அவர்களுடன் தூதுவன் மூலம் இணைகிறேன்.
பழங்கதைகள் பேசியதில் மணிகள் துரித கதியில் சிதறி விழுகின்றன. ஒரு தருணத்தில் மூவரும் ஒரு இடத்தில் சேர்ந்து விடச் சோர்ந்து விழுகிறது இருந்த கொஞ்ச நஞ்சச்சோர்வு. அந்த நேரம் பார்த்து உள்ளூர் நண்பனின் தொலைபேசி அழைப்பு. வீட்டில் உள்ளேன் என்று அக்னி அனுப்பிய அலைபேசி சமிக்கை. என்ன இது சினேகம் இன்று என்னுடன் அதிகம் ஸ்னேகிக்கிறது என்ற வியப்பு மேலிட்ட வேளை அலைபேசியில் அயல்நாட்டு தோழன். குலாவியபடிமுற்றும் ஆடை துறந்த சாளரத்துனூடு வெளியே பார்க்கிறேன். மஞ்சள் வெயில் மாலையை நினைவூட்டுகிறது மதியம். துணைக்குப் பசியும். அளாவல்களுக்கும் குலாவல்களுக்கும் தொடரும் போட்டுவிட்டு வயிற்றைக் கவனிக்கிறேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் சட்டென்று மாறுது வானிலை. வானம் மப்புப் போட மெல்லிய கூதல் காதல் காற்று சாமரம் வீசத் துவங்குகிறது. வருவாய்த்துறையில் இருந்த சொந்த வேலை கூவி அழைக்க வெளியே கிளம்புகிறேன். வாருவாய்த்துறை அலுவலக வாசலில் இன்னொரு நண்பன். மீண்டும் உள்ளுக்குள் ஒரு இன்பப்பிரளயம். சுற்றும் ஓடத் தொடங்குகிறது நட்புநதி. எல்லாம் முடித்து வீடேகினால் கூகிளில் செல்வா.. கூடவே ஆதி, மதி.. மறுபடியும் சகா வட்டாரம். பத்து நிமிடந்தான்.. விடை பெற்ற வேளை செல்வாவின் தொலைபேசி அழைப்பு. பேசிக்கொண்டே தயராகி பேசி முடித்து வெளிக் கிளம்புகிறேன் உள்ளூர் சினேகிதர்களை சந்திக்க.
இளந்தென்றல் சற்று வீரியம் பெறுகிறது. முகத்தில் கூதலை துப்புகிறது. உடலெங்கும் அது வழிகிறது. வானத்தில் கரு மேகங்கள் கூடுகிறன இன்றைய என் நண்பர்கள் சந்திப்புப் போலவே. இரவு மணி பத்து.. செயற்கையாய் அமைந்த ஆற்றங்கரை வனப்பை நண்பர்களுடன் அனுபவித்து விட்டு விடை பெறும் வேளை வானம் மழை பொழிகிறது. என் ஆனந்தத்தை அது மொழிகிறது. ஆனந்த மழையில் நனைந்தபடி வீடேகிறேன்.
இப்படிக் காலை முதல் மாலை முடியும் வரை சினேகங்களில் பிடியில் இன்றைய பொழுது.. இரவு நேர உறக்கமோ தழுவ மறுக்கிறது. இந்தமாதிரியான தருணங்களில்தான் கதைகள், கவிதைகளை எழுதுவது . ஏறத்தாழ ஓராண்டுகளாக இந்த மாதிரி தூக்கம் தர மறுக்கும் இரவுகளில் எழுதியதில்லை. இன்று.. இந்த இரவில் அந்தப் பழக்கம் எழுகிறது. கட்டுக் கதைகளுக்குப் பதிலாக பழங்கதைகள், குறிப்பாக ஸ்னேகிதர்கள் கதைகள் அதி வீச்சுடன் எழுந்தாடுகின்றன. வரும் பொழுதுகளில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.