எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-03-2009, 07:08 AM
இனியுமுங்களை வினவுவதற்கில்லை
பழைய பழுத்த அடர் தூசி படிந்த
முன் கழிந்த முன்னோர் சித்தாந்தங்களையெல்லாம்
எக் குப்பையில் கூட்டித் தொலைத்தீர்களென்றோ!
திடுமென திமிறி வளர்ந்த
புராண ராட்சஸ கதைகளை
மண்ணும் பொன்னும் வாரியிறைத்த
அழகிய தேவதைக் கதைகளை
எந்நுலகத்தை தூசி தட்டித் தேடுவதென்றோ!
தூர ஒளிரும் ஈர நிலாவை
வாசலுக்கழைக்கும் வரவேற்ப்புக் கீதங்களை
அறிவிற்கினிய ஆத்திச்சூடிகளை
எக்குழந்தை வாயில் பிடுங்குவதென்றோ!
அகன்று நீண்ட முற்ற வராண்டாக்களை
ஓரமித்து வாசனையொழுக்கும் துளசிச் செடிகளை
கூடிய குழந்தைகளின் கண்ணாமூச்சிக் கானங்களை
குடுகுடுத்த பெருசுகளின் உரலிடிப்போசைகளை
எப்பிரதேசம் போய் விட்டீர்களென்றோ!
மேலான வானம் நீலமென்றும்
கீழான வானம் கரடும் முரடுகளென்றும்
குளிர்ந்து பொழிந்து கொளுத்தும் காலம்
வருடந்தோறும் முப்பருவங்களென்றும்
தன் குறித்த வழமையான ஒரு நேரம் ஒரு ஓரமெழும்
அதே குறித்த வழமையான ஒரு நேரம் ஒரு ஓரம் விழும்
சூரியச் சந்திர அட்டவணைகள்
மற்றும் இப்படியான குறித்த இயற்கை இகழ்வுகளைத் தவிர
எல்லாமும் புதியதாய் புத்தொளிர வேண்டுமென்ற
புத்தாய்வுகள் பூணும் புதிய மாந்தர்களே!
மாறிய காலங்களிலினூடே அம் மாறாத
உங்களுர் பேருந்து நிலைய முதியவரின்
ஏற்ற இறக்க யாசக வார்த்தைகளை
உங்களில் ஒருவரேனுமா செவி மடுத்திருக்கவில்லை
என்பதையன்றி வேறொன்றும் இல்லை
எனக்குங்களிடம்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
junaidhasani@gmail.com
பழைய பழுத்த அடர் தூசி படிந்த
முன் கழிந்த முன்னோர் சித்தாந்தங்களையெல்லாம்
எக் குப்பையில் கூட்டித் தொலைத்தீர்களென்றோ!
திடுமென திமிறி வளர்ந்த
புராண ராட்சஸ கதைகளை
மண்ணும் பொன்னும் வாரியிறைத்த
அழகிய தேவதைக் கதைகளை
எந்நுலகத்தை தூசி தட்டித் தேடுவதென்றோ!
தூர ஒளிரும் ஈர நிலாவை
வாசலுக்கழைக்கும் வரவேற்ப்புக் கீதங்களை
அறிவிற்கினிய ஆத்திச்சூடிகளை
எக்குழந்தை வாயில் பிடுங்குவதென்றோ!
அகன்று நீண்ட முற்ற வராண்டாக்களை
ஓரமித்து வாசனையொழுக்கும் துளசிச் செடிகளை
கூடிய குழந்தைகளின் கண்ணாமூச்சிக் கானங்களை
குடுகுடுத்த பெருசுகளின் உரலிடிப்போசைகளை
எப்பிரதேசம் போய் விட்டீர்களென்றோ!
மேலான வானம் நீலமென்றும்
கீழான வானம் கரடும் முரடுகளென்றும்
குளிர்ந்து பொழிந்து கொளுத்தும் காலம்
வருடந்தோறும் முப்பருவங்களென்றும்
தன் குறித்த வழமையான ஒரு நேரம் ஒரு ஓரமெழும்
அதே குறித்த வழமையான ஒரு நேரம் ஒரு ஓரம் விழும்
சூரியச் சந்திர அட்டவணைகள்
மற்றும் இப்படியான குறித்த இயற்கை இகழ்வுகளைத் தவிர
எல்லாமும் புதியதாய் புத்தொளிர வேண்டுமென்ற
புத்தாய்வுகள் பூணும் புதிய மாந்தர்களே!
மாறிய காலங்களிலினூடே அம் மாறாத
உங்களுர் பேருந்து நிலைய முதியவரின்
ஏற்ற இறக்க யாசக வார்த்தைகளை
உங்களில் ஒருவரேனுமா செவி மடுத்திருக்கவில்லை
என்பதையன்றி வேறொன்றும் இல்லை
எனக்குங்களிடம்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
junaidhasani@gmail.com