சசிதரன்
20-03-2009, 02:15 PM
காதல் செய்...
கனவுகள் கொண்டே
இரவுகள் கழியும்.
தோள்கள் இரண்டிலும்
சிறகுகள் முளைக்கும்.
நொடி நொடியாய்
வாழ்வு அர்த்தப்படும்.
உள்ளங்கைக்குள்
உலகம் அகப்படும்.
எதிரிக்கும் பரிசாய்
புன்னகை தரப்படும்.
இரத்த அணுக்களில்
பூக்கள் பூக்கும்.
ஒவ்வொரு விடியலும்
வெளிச்சமாய் இருக்கும்.
இதயம் துடிப்பதும்
இசையாய் கேட்கும்.
காதல் செய்...
கனவுகள் தேடி
இரவுகள் தொலையும்.
உதிரும் சிறகுகள்
வலியை கொடுக்கும்.
வாழ்வு மொத்தம்
சூனியமாகும்.
உன்னை விட்டு
உலகம் பிரியும்.
புன்னகை என்பதே
மறந்து போகும்.
இரத்த அணுக்களும்
கண்ணீர் வடிக்கும்.
இதயம் துடிப்பதே
இம்சையாய் இருக்கும்.
காதல் செய்...
காயம் கிடைக்கும்..
கண்ணீர் கிடைக்கும்..
இதயம் வலிக்கும்..
வாழப் பிறந்துவிட்டாய்...
மரணம் வரை வாழ்ந்தாக வேண்டும்.
வாழும் வழி இதுதான்...
காதல் செய்...
கனவுகள் கொண்டே
இரவுகள் கழியும்.
தோள்கள் இரண்டிலும்
சிறகுகள் முளைக்கும்.
நொடி நொடியாய்
வாழ்வு அர்த்தப்படும்.
உள்ளங்கைக்குள்
உலகம் அகப்படும்.
எதிரிக்கும் பரிசாய்
புன்னகை தரப்படும்.
இரத்த அணுக்களில்
பூக்கள் பூக்கும்.
ஒவ்வொரு விடியலும்
வெளிச்சமாய் இருக்கும்.
இதயம் துடிப்பதும்
இசையாய் கேட்கும்.
காதல் செய்...
கனவுகள் தேடி
இரவுகள் தொலையும்.
உதிரும் சிறகுகள்
வலியை கொடுக்கும்.
வாழ்வு மொத்தம்
சூனியமாகும்.
உன்னை விட்டு
உலகம் பிரியும்.
புன்னகை என்பதே
மறந்து போகும்.
இரத்த அணுக்களும்
கண்ணீர் வடிக்கும்.
இதயம் துடிப்பதே
இம்சையாய் இருக்கும்.
காதல் செய்...
காயம் கிடைக்கும்..
கண்ணீர் கிடைக்கும்..
இதயம் வலிக்கும்..
வாழப் பிறந்துவிட்டாய்...
மரணம் வரை வாழ்ந்தாக வேண்டும்.
வாழும் வழி இதுதான்...
காதல் செய்...