ஆதவா
16-03-2009, 03:56 PM
பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் இன்றுவரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. முன்பு சில மாதங்களுக்கு முன்னர் வெறுமை படிந்த அறையில் தனிமையைத் துணைக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பொழுதுகளில் பேய்களோடுதான் என் காதல் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. இருளும் இருள் சார்ந்த பொருளும் ஒவ்வொரு தினத்திய பேய்களை உற்பத்தி செய்வதற்காக காத்திருக்கும் பொழுது என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன காதலும் காத்திருக்கும்.
பேய்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகச் சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. அதன் தொடக்கத்தில் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்.. கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். திகில் படக் கதாநாயகிகளைப் போன்று இரவில் அலறி விழித்து எனக்கருகே இருக்கும் பொருட்கள் தூரத்தில் ஓடுவதைக் கண்டு பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பேன். பேய்கள் என்னைக் காதலிக்கத் தொடங்கிய தினங்கள் அவை. அவைகளின் முத்தங்களின் அளவுக்கு எண்ணிக்கை இல்லாமல் போகவே, என் பெற்றோருக்கு இந்நிலையைச் சொல்லவேண்டிய கட்டாயம். தூக்க கலக்கத்தில் அப்பா எழுந்து என்னாச்சுடா என்பார். அவர் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மிக மெல்லிய குரலில் பேசுவதாகவும், அவர் நீட்டும் கரங்கள் என் அருகே நீண்டு என்னைக் குத்துவதாகவும் தோன்றும். அவர் என்னுடைய நிலையை அவர் புரிந்து கொண்டாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னை பேய்களிடமிருந்து பிரிக்கு உத்தியை நன்கு அறிந்திருந்தார். ஒருவகையில் என் அப்பா ஒரு பேயோட்டிதான். அந்த சிறு அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குத் தட்டில் கிடந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிடுவார். "அப்பா, அப்பவும் பேய் போகலைன்னா" என்று சந்தேகத்தோடு கேட்பேன். கையில் புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்து அந்த விளக்கு வெளிச்சத்தில் படிக்கச் சொல்லுவார். நான் படித்த பள்ளி கிறித்துவப் பள்ளி என்பதால் அருகே இருந்த தேவாலயத்திற்கு தினமும் செல்வது என் வழக்கமாக இருந்தது. அங்கே சுவிசேஷ பாடல்கள் (சுவிசேஷம் என்பது சரியான சொல்லா தெரியவில்லை), குறும் பைபிள்களும், இலவசமாகக் கிடைக்கும்.. அவை பின்னுக்கு என் பேயோட்டும் புத்தகங்களாக இருக்கப் போகின்றன என்பதை அறியவில்லை.
கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன். எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான். இது என் உறக்க காலத்தில் எத்தனை நொடிகள் நீண்டது என்பது தெரியாது. ஆனால் அடுத்த நொடியில் பிம்ப விரிசல்களின் ஒவ்வொரு கீற்றுகளிலும் என் அங்கங்கள் சிதறிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள். இருளும் நிசப்தமும் உடன் ஓடிவரும் சொற்களை மடித்து கவிதைகள் கொட்டின. அவைகளின் ஓங்காரத்தில் கொட்டிய கவிதைகளிலெல்லாம் யாருடைய குருதியோ நிறைந்திருக்கும். (செவ்விழி எனும் என் கனவுக் கவிதையைப் படித்த பழைய நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.)
தற்காலிக பேயோட்டிகள்தான் என் வாழ்நாளில் பலநாட்களில் நான் கண்டிருந்தவையாக இருந்தது. பைபிள்கள் காகித அரிப்பில் இரத்தம் தீர்ந்துபோய் இறந்து கிடந்தன, ஆன்மீக முடிச்சுகளை அவிழ்த்து விட்டதால் எந்த புத்தகமும் பேயோட்ட முன் வரவில்லை. பெரும் மரணத்தினிடையே போராடி எழும் மனிதர்களைப் போன்று உறக்கத்தில் எழுந்து, மாளாத் துயரில் அங்கங்கள் வெடித்து இறக்கும் நொடிகளைப் போன்று பேயோடு உறவாடிக் கொண்டிருந்த அந்த இரவுகளை எப்படி மறப்பது? கொஞ்சம் வயது ஆகிவிட்டது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லுவது எனும் மானப் பிரச்சனையாக வேறு இருந்தது. பேய்கள் என்னை நிர்வாணமாக்கி நடுச்சாலையில் நிற்கவைத்ததைப் போன்று ஒவ்வொரு இரவுகளிலும் மானம் பறிபோனது.
பின்வந்த நாட்களில் வேறு வழியின்றி எனக்குத் தெரிந்த ஒரு சென்னை தோழியிடம் என் பிரச்சனையைப் பகிர்ந்தேன். சாதாரணமாக யாரிடமும் சொல்லக்கூடாதென்று நினைத்த விஷயங்களை வேறு வழியின்றி சொல்லவேண்டியதாக ஆக்கிவிட்டது.. அந்த தோழியும் ஒரு கிறித்துவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவளை நேரில் கண்டதில்லையெனினும் அவளே எனக்கு நிரந்தர பேயோட்டியாக இருந்திருக்கிறாள் என்பது அப்பொது தெரியாமல் போய்விட்டது. யோகாக்களில் கவனத்தைச் செலுத்தச் சொன்னாள். பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்.
இப்பொழுது பேய்கள் இல்லாத இரவுகளைத்தான் ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கிறேன். தியானங்களுக்கான பேயோட்டும் வேலை பதினைந்தாம் நாளோடு முடிந்துவிட்டது. என்னைவிட்டு அகன்ற பேய் இப்பொழுது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!
பேய்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகச் சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. அதன் தொடக்கத்தில் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்.. கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். திகில் படக் கதாநாயகிகளைப் போன்று இரவில் அலறி விழித்து எனக்கருகே இருக்கும் பொருட்கள் தூரத்தில் ஓடுவதைக் கண்டு பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பேன். பேய்கள் என்னைக் காதலிக்கத் தொடங்கிய தினங்கள் அவை. அவைகளின் முத்தங்களின் அளவுக்கு எண்ணிக்கை இல்லாமல் போகவே, என் பெற்றோருக்கு இந்நிலையைச் சொல்லவேண்டிய கட்டாயம். தூக்க கலக்கத்தில் அப்பா எழுந்து என்னாச்சுடா என்பார். அவர் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மிக மெல்லிய குரலில் பேசுவதாகவும், அவர் நீட்டும் கரங்கள் என் அருகே நீண்டு என்னைக் குத்துவதாகவும் தோன்றும். அவர் என்னுடைய நிலையை அவர் புரிந்து கொண்டாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னை பேய்களிடமிருந்து பிரிக்கு உத்தியை நன்கு அறிந்திருந்தார். ஒருவகையில் என் அப்பா ஒரு பேயோட்டிதான். அந்த சிறு அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குத் தட்டில் கிடந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிடுவார். "அப்பா, அப்பவும் பேய் போகலைன்னா" என்று சந்தேகத்தோடு கேட்பேன். கையில் புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்து அந்த விளக்கு வெளிச்சத்தில் படிக்கச் சொல்லுவார். நான் படித்த பள்ளி கிறித்துவப் பள்ளி என்பதால் அருகே இருந்த தேவாலயத்திற்கு தினமும் செல்வது என் வழக்கமாக இருந்தது. அங்கே சுவிசேஷ பாடல்கள் (சுவிசேஷம் என்பது சரியான சொல்லா தெரியவில்லை), குறும் பைபிள்களும், இலவசமாகக் கிடைக்கும்.. அவை பின்னுக்கு என் பேயோட்டும் புத்தகங்களாக இருக்கப் போகின்றன என்பதை அறியவில்லை.
கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன். எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான். இது என் உறக்க காலத்தில் எத்தனை நொடிகள் நீண்டது என்பது தெரியாது. ஆனால் அடுத்த நொடியில் பிம்ப விரிசல்களின் ஒவ்வொரு கீற்றுகளிலும் என் அங்கங்கள் சிதறிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள். இருளும் நிசப்தமும் உடன் ஓடிவரும் சொற்களை மடித்து கவிதைகள் கொட்டின. அவைகளின் ஓங்காரத்தில் கொட்டிய கவிதைகளிலெல்லாம் யாருடைய குருதியோ நிறைந்திருக்கும். (செவ்விழி எனும் என் கனவுக் கவிதையைப் படித்த பழைய நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.)
தற்காலிக பேயோட்டிகள்தான் என் வாழ்நாளில் பலநாட்களில் நான் கண்டிருந்தவையாக இருந்தது. பைபிள்கள் காகித அரிப்பில் இரத்தம் தீர்ந்துபோய் இறந்து கிடந்தன, ஆன்மீக முடிச்சுகளை அவிழ்த்து விட்டதால் எந்த புத்தகமும் பேயோட்ட முன் வரவில்லை. பெரும் மரணத்தினிடையே போராடி எழும் மனிதர்களைப் போன்று உறக்கத்தில் எழுந்து, மாளாத் துயரில் அங்கங்கள் வெடித்து இறக்கும் நொடிகளைப் போன்று பேயோடு உறவாடிக் கொண்டிருந்த அந்த இரவுகளை எப்படி மறப்பது? கொஞ்சம் வயது ஆகிவிட்டது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லுவது எனும் மானப் பிரச்சனையாக வேறு இருந்தது. பேய்கள் என்னை நிர்வாணமாக்கி நடுச்சாலையில் நிற்கவைத்ததைப் போன்று ஒவ்வொரு இரவுகளிலும் மானம் பறிபோனது.
பின்வந்த நாட்களில் வேறு வழியின்றி எனக்குத் தெரிந்த ஒரு சென்னை தோழியிடம் என் பிரச்சனையைப் பகிர்ந்தேன். சாதாரணமாக யாரிடமும் சொல்லக்கூடாதென்று நினைத்த விஷயங்களை வேறு வழியின்றி சொல்லவேண்டியதாக ஆக்கிவிட்டது.. அந்த தோழியும் ஒரு கிறித்துவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவளை நேரில் கண்டதில்லையெனினும் அவளே எனக்கு நிரந்தர பேயோட்டியாக இருந்திருக்கிறாள் என்பது அப்பொது தெரியாமல் போய்விட்டது. யோகாக்களில் கவனத்தைச் செலுத்தச் சொன்னாள். பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்.
இப்பொழுது பேய்கள் இல்லாத இரவுகளைத்தான் ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கிறேன். தியானங்களுக்கான பேயோட்டும் வேலை பதினைந்தாம் நாளோடு முடிந்துவிட்டது. என்னைவிட்டு அகன்ற பேய் இப்பொழுது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!