View Full Version : வணக்கம் நண்பர்களே!
பரஞ்சோதி
16-03-2009, 07:12 AM
அன்பு தமிழ்மன்ற உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்
முதலில் என் வணக்கங்களை தெரிவிக்கிறேன்.
புதிய நண்பர்களுக்கு என் சிறிய அறிமுகம்.
என் பெயர் : பரஞ்சோதி
வசிப்பது : குவைத்
இணையத்தமிழ் கற்ற இடம் : தமிழ்மன்றம்
முதல் குரு, உறவு, நட்பு கிடைத்த இடம்: தமிழ்மன்றம்
மன்றத்தில் முக்கிய வேலை: கலாய்த்தல், பிறர் மனம் புண்படாமல் :)
தமிழ்மன்றத்தில் நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் இல்லை, சின்னஞ்சிறு ஊடல்களால் என் மன நிம்மதிக்காக கொஞ்ச நாட்கள் விலகி இருக்க விரும்பினேன், இப்போ மீண்டும் என் தாய் மன்றத்துடனும் உங்களுடனும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என் குருமார்கள் இளசு அண்ணா, மணியா அண்ணா, கரிகாலன் அண்ணா, ஆரென் அண்ணா, பிஜிகே அண்ணா மற்றும் உறவுகள் சேரன், பூ, மன்மதன், அறிஞர், கவிதா, ஓவியா, தாமரைசெல்வன் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
ஓவியன்
16-03-2009, 07:16 AM
ஆஹா பரம்ஸ் அண்ணாவா, என்னே ஒரு ஆனந்த அதிர்வு.!!
வாங்க அண்ணா, வாங்க...!! :):):):):):)
வாங்க அண்ணா வாங்கா..
தங்களுக்கு இந்த தம்பியின் வரவேற்புகள்..
மீண்டும் தங்களின் கலாய்ப்புகள் துவங்கட்டும்..
அன்புரசிகன்
16-03-2009, 07:31 AM
மீள்வருகைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
இன்று உங்களது பிறந்தநாள் அல்லவா.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...
ரங்கராஜன்
16-03-2009, 07:38 AM
வாங்க பரம்ஸ் அவர்களே, நல்வரவு
அமரன்
16-03-2009, 07:56 AM
வாங்கோ அண்ணா..
தாமரைசெல்வனில் "ச்"சை விட்டதில் தெருகிறது மன்றத்தினுடனான, அவருடனான உங்கள் உறவு.
சிவா.ஜியைச் சந்தித்ததை பென்சண்ணா மன்றத்தில் சொல்லும் போது "பரஞ்சோதி போல என்னில் இடம் பிடித்து விட்டீர்கள் சிவா" என்றார்.
உங்களுடன் உறவாட வேண்டும் என்ற எண்ணம் அத்தருணத்தில் மேலும் வீச்சம் அடைந்தது. அந்த சந்தர்ப்பத்தை அளித்த உங்களுக்கு என் நன்றியும் வாவேற்பு அளிப்பும்.
நேசம்
16-03-2009, 08:19 AM
முத்த உறுப்பினரான உங்கள் வருகை மன்ற உறவுக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
சிவா.ஜி
16-03-2009, 08:27 AM
மீண்டும் மன்றம் வந்து உங்களை மனமகிழ்வுடன் வரவேற்கும் வாய்ப்பையும் அளித்தமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பரஞ்சோதி. உங்களை தாய் மன்றத்துக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. வாருங்கள் மீண்டும் கலந்து கலாயுங்கள்.
இளசு உங்களைப்பற்றி மிகப்பெருமையாக சொல்லுவார். நீங்கள் இருந்த நாட்களில் நானிங்கு இல்லையே என்ற ஏக்கம் தீர்ந்தது.
வாங்க பரம்ஸ் அண்ணா..
உங்கள் மீள்வருகைக்கு வரவேற்புகள்.
வாங்க பரமஸ். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அப்படின்னா ராகவனும் பிரதீப்பும்தான் பாக்கி. அவர்களையும் இங்கே அழைத்துவாருங்களேன்.
ஐவர் அணியை மறுபடியும் ஆரம்பிக்கலாமே.
கலாய்க்க பலர் காத்திருக்கிறார்கள்.
தொடருங்கள் பரம்ஸ்.
நன்றி வணக்கம்
ஆரென்
வாங்க வாங்க வாங்க!!!
எப்படி இருக்கீங்க
சக்தி எப்படி இருக்கிறாள்?? அண்ணி எப்படி இருக்காங்க...??
உங்களை மீண்டும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா....
அக்னி
16-03-2009, 12:08 PM
வணக்கங்கள் பல அண்ணலே...
மன்றத்தில் எனக்குக் கிடைத்த முதல் ஊக்கம் என்பது,
எனது அறிமுகப்பதிவை இடுவதற்கு முன்னர்,
உங்களது பத்தாயிரமாவது பதிவுகளின் பார்வைத் திரியில்,
நான் இட்ட பதிவுக்குக் கிடைத்த, உங்கள் பதிற் பதிவு என்றுதான்,
என் மனதில் பதிவாய் உள்ளது.
நான் 5000 பதிவுகளைக் கடக்கையில் ஏக்கம் கலந்த நம்பிக்கை என்னுள்...
எனக்குள் உத்வேகம் தந்த பதிவு... எனக்கு கிடைத்த முதல் ஊக்கம்...
மதிப்பிற்குரிய பரம்ஸ் அவர்களிடமிருந்து...
வாங்க அக்னி.
நானும் ஆரம்ப காலத்தில் அப்படியே உங்கள் எண்ணங்களோடு தான் இருந்தேன். ஒரு பதிவை போட்டு விட்டு எத்தனை பேர் படித்தாங்க, யார் யார் கருத்து சொல்றாங்கன்னு காத்திருப்பேன். அது ஓர் இனிய அனுபவம்.
நீங்களும் விரைவில் ஆயிரக்கணக்கில் பதிவுகள் பதிய வாழ்த்துகள்.
அவரின் முதல் வாழ்த்து, என்னைத் தூண்டிய வாழ்த்து என்றால் அது மிகையில்லை. இன்று அவர் என்னைப் பார்க்கவேனும் மீள மன்றம் வருவாரா..? மீண்டும் வாழ்த்துத் தருவாரா..? என்றும் இணைந்தே இருப்பாரா..? நம்பிக்கை இருக்கின்றது...
இன்று அந்த ஏக்கம் தீர்ந்து விட்டது.
நான் மட்டுமல்லாமல்,
மன்ற முன்னோடிகளும்,
புதியதாய் மன்றம் வந்த பலரும்,
தமது நினைவு மீட்டல்களில் உங்களை நினைவிற் கொள்ளத் தவறியதில்லை.
உங்கள் வருகை, அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விடயம்.
மகிழ்ச்சி அனைவரிடமும் நிலைக்கட்டும்...
மன்மதன்
16-03-2009, 01:38 PM
வாங்க பரமஸ். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அப்படின்னா ராகவனும் பிரதீப்பும்தான் பாக்கி. அவர்களையும் இங்கே அழைத்துவாருங்களேன்.
ஐவர் அணியை மறுபடியும் ஆரம்பிக்கலாமே.
கலாய்க்க பலர் காத்திருக்கிறார்கள்.
தொடருங்கள் பரம்ஸ்.
நன்றி வணக்கம்
ஆரென்
நானும் இதையேதான் நினைத்தேன்..
ரெட் கார்பெட் நல்வரவு பரம்ஸ்..!!
அறிஞர்
16-03-2009, 01:41 PM
அன்பு பரம்ஸ்...
எங்கிருந்தாலும் வாழ்த்தும்
தங்கள் வளர்ச்சியை.. விரும்பும்
தாய் மன்றம் - தமிழ் மன்றம்.
இணையத்தில் தங்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்ந்தோம்.
மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி....
மன்றத்தில் எங்கும் உம் பதிவுகள்... பறக்கட்டும்.
சிறுவர் மையத்தில் கதைகள் பல வெளிவரட்டும்.
subashinii
16-03-2009, 03:50 PM
பழைய உறுப்பினர் பரஞ்சோதி அவர்களை வரவேற்கிறேன்.
Mano.G.
16-03-2009, 04:20 PM
மன்றம் மறுபடியும் கலகலப்பான மாதிரி தெரியுது,
தம்பி பரம்ஸோட வருகை மன்றத்தை மேலும் மெருகூட்ட
வாழ்த்துக்கள்
மனோ.ஜி
அறிஞர்
16-03-2009, 05:06 PM
மன்றம் மறுபடியும் கலகலப்பான மாதிரி தெரியுது,
தம்பி பரம்ஸோட வருகை மன்றத்தை மேலும் மெருகூட்ட
வாழ்த்துக்கள்
மனோ.ஜி நீங்களும் தொடர்ந்து.. கலாய்த்தால்.. இன்னும் சிறப்பாக இருக்கும்.
வாய்ச்சொற்களால் யாதொரு பலனும் இராத சூழல்கள் சில வாழ்வில்..
இது அத்தகையதொரு தருணம்..
வா பரம்ஸ்!
சக்திக்கு என் அன்பு முத்தங்கள்...
வசீகரன்
17-03-2009, 05:27 AM
இந்த ஓடத்தில் நானும் இணைகிறேன்.... மன்றத்தின் மூத்த உறுப்பினரை வரவேற்ப்பதில் நானும் பங்கு பெறுகிறேன்.
மிகுந்த மகிழ்ச்சி தங்களின் மீள் வருகைக்கு...
வாருங்கள் அண்ணா...!
பூமகள்
17-03-2009, 05:33 AM
வாங்க பரம்ஸ் அண்ணா.... உங்களின் கூட்டணி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த தங்கத் தருணங்கள் மீண்டும் உங்கள் மூலம் வருமென எதிர்பார்க்கிறேன்..
நல்வரவு அண்ணா...
மனோஜ்
17-03-2009, 05:54 AM
மீன்டும் பரம்ஸ் அண்ணாவின் வரவு இன்பத்தை தருகிறது வாழ்த்துக்கள் அண்ணா
mania
17-03-2009, 06:41 AM
வா பரம்ஸ்.....மிகுந்த மகிழ்சி...இதை நான் கொஞ்சம் முன்னதாகவே எதிர்பார்த்தேன்.....என்னால் உன்னுடைய வேகத்திற்கு தற்போது ஈடு கொடுக்கமுடியாது....!!!!:rolleyes::D ஒரு மாதத்திற்கு பிறகு வந்து கோதாவில் குதிக்கிறேன்.....சரியா.....மீண்டும் எனது வாழ்த்துகள்....:D
மிகுந்த மகிழ்சியுடன்
மணியா....:D:D:D
samuthraselvam
17-03-2009, 07:44 AM
மீண்டு வந்த மூத்தவர் பரம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.:icon_b:
மீள்வருகைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
இன்று உங்களது பிறந்தநாள் அல்லவா.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா...
__________________
சூரியன்
17-03-2009, 10:48 AM
அண்ணா உங்களை மீண்டும் மன்றத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
பரஞ்சோதி
18-03-2009, 06:56 AM
என்னை அன்போடு வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.
Narathar
25-03-2009, 12:01 PM
பரஞ்சோதியை மீண்டும் மன்றத்தில் காண்பதில்
மீண்டும் மன்றம் வந்த எனக்கு மகிழ்ச்சி :D
பரஞ்சோதி
25-03-2009, 05:00 PM
நன்றி நாரதரே!
நீங்களும் நம்மை மாதிரி தானா, அடிக்கடி காணாமல் போயிடுவீங்களோ?
செல்வா
26-03-2009, 05:37 PM
வாருங்கள் அண்ணா..... தங்கள் மீள்வருகையை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
பரஞ்சோதி
09-12-2015, 10:38 AM
வணக்கம் நண்பர்களே!
வெகு நாட்களுக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
பரஞ்சோதி
09-12-2015, 10:39 AM
புதிய நண்பர்களுக்கு வணக்கங்கள்
பழைய நண்பர்கள் யார் யார் இருக்கீங்க மக்கா.
பாரதி
12-12-2015, 03:55 PM
புதிய நண்பர்களுக்கு வணக்கங்கள்
பழைய நண்பர்கள் யார் யார் இருக்கீங்க மக்கா.
வணக்கம் பரஞ்சோதி. நலமா?
உங்கள் மீள்வரவைக் காணத்தான் நான் இன்று வந்தேனோ?
புதிய நண்பர்களுக்கு வணக்கங்கள்
பழைய நண்பர்கள் யார் யார் இருக்கீங்க மக்கா.
ஆஹா! நானும் கேட்க வேண்டும் என இருந்தேன்.
கீதம் அக்கா, அமரன், ஜனகன், ஆதன், கலையரசிஅக்கா, அக்னி, மதி, சிவாஜி அண்ணா, செல்வா,ஜானகிஅம்மா எல்லோரும் நலமா?
எங்கே இருக்கீங்கப்பா?
புதிய நண்பர்களுக்கு வணக்கங்கள்
பழைய நண்பர்கள் யார் யார் இருக்கீங்க மக்கா.
ஆஹா! நானும் கேட்க வேண்டும் என இருந்தேன்.
கீதம் அக்கா, அமரன், ஜனகன், ஆதன், கலையரசிஅக்கா, அக்னி, மதி, சிவாஜி அண்ணா, செல்வா,ஜானகிஅம்மா எல்லோரும் நலமா?
எங்கே இருக்கீங்கப்பா?
அமரன்
08-04-2016, 09:33 PM
உள்ளோம்
ஓவியன்
04-06-2016, 06:17 PM
அமரனைத் தொடர்ந்து கோரஸ் பாடும் பொருட்டு, நானும்...
உள்ளோம்!