ஆதவா
10-03-2009, 08:05 AM
யாழினி ஒரு தீர்க்கமான முடிவோடு அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கோபங்களும் ஏமாற்றங்களும் நிறைந்திருந்தன. தன் தந்தை ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று மாறி மாறி யோசித்தாள். தன் தோழிகள் எல்லோரும் பெற்றோர்கள் பேச்சை மதிப்பதில்லை ; தான் மதித்து நடந்தும் தன் வழியில் குறுக்கிடுகிறாரே என்று அழுதாள்.. அவளது அறையில் உடைகள் கலைந்து சிதறிக் கிடந்தன. பொருட்கள் நொறுக்கப்பட்டிருந்தன. சற்று முன் அவளது கோபத்தின் தாண்டவத்தை நினைத்து தன்னைத் தானே நொந்தவாறு அமர்ந்திருந்தாள்.
யாழினி C-MC சாக்லேட் நிறுவனத்தில் மேலதிகாரியாக பணிபுரிகிறாள். நல்ல அழகுவாய்ந்த முகம், திறமைகள் கொட்டிக்கிடக்கும் அவளது இளமை, எல்லாவற்றையும் விட, அவளது பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் அந்நிறுவனத்திற்கு பெருமையும், அந்நிறுவனத்திற்குத் தூணாக விளங்கும் தன்மையும் சேர்த்தது. அவளுடன் பணிபுரியும் அருள்மொழியுடன் உண்டான காதல் தான் இப்பொழுது பிரச்சனையே.. யாழினியின் தந்தை இந்த காதலுக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. யாழினியின் காதல், அவளது கண்களை மறைத்து இருந்தது.
தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. மருத்துவரைச் சந்திக்க இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தவாறே அலங்காரம் செய்யவிருக்கும் எந்திரனை அழைக்க, தன் கைக்கடிகாரத்தின் இடது மூலையில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினாள். அவளது அறையின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த எந்திரம் அவள் இருக்குமிடத்திற்கு வந்து அவளது அலங்கார வேலைகளை எப்பொழுதும் போல செய்யத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, அறையை விட்டு நீங்க தயாரானாள். அறைக்கதவின் தாழில் பொதிக்கப்பட்டிருந்த எண்களில் சிலவற்றை அழுத்தி தன் கட்டை விரலால் முத்திரை வைத்துவிட்டு லிஃப்டை நோக்கிச் சென்றாள்.
அருள்.... நம் காதலின் ஒவ்வொரு மூலையிலும் தெய்வீகம் அடங்கியிருக்கிறது. நம்மைப் பிரிக்க எவராலும் முடியாது. அருள்... மிசிசிபியில் நாமும் நம் குழந்தையும் மணல் வீடுகட்டி ஆடுகிறோம் பார்த்தாயா.. ஏனடா... அந்த வீட்டை கலைத்துவிட்டாய்? ... பார்..... அதோ தெரிகிறதா.. என் முதுமையிலும் உன் காதலை எப்படியெல்லாம் கொட்டுகிறாய்... நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம் பிள்ளைகள் கேலி செய்வதைப் பார்த்தாயா?? ஒரு அந்நியோன்யமான குடும்பமாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேனடா.. அருள்.... அருள்.....
அவளது நினைவுகள் எல்லாம் கண்முன்னே திரைகட்டி ஓடுவதைப் போன்று காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. லிஃப்ட் நின்றது. வாசலை நோக்கி வேகமாக நடந்தாள். செல்லும் பொழுது வாசலோரத்தில் பூத்திருந்த ரோஜாவைத் தொட்டு ரசித்துவிட்டு ஏதேதோ எண்ணியவாறு மீண்டும் நடந்தாள். யாழினிக்கு நடப்பது மிகவும் பிடித்த விஷயம். அவள் மற்ற பாதசாரிகளைப் போன்று நகரும் தளங்களில் (Moving Platform) செல்லமாட்டாள். சாவகாசமாக, ஏதாவது ஒரு மின் காகிதத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டு மூவிங் ப்ளாட்ஃபாரங்களில் செல்லும் மனிதர்களை அவளுக்குப் பிடிக்காது... நடப்பது தேக ஆரோக்கியம் என்பதால் அவள் அதை எப்போதும் விரும்புவாள்.
அருள்மொழியைப் பற்றி சொல்லவில்லையே... யாழினியின் திறமைக்கு ஈடானவன் என்றே சொல்லலாம். ஆண்களுக்குரிய வசீகரம், வலிமை, சிலசமயம் கோபம் ஆகிய எல்லாமும் அடங்கியிருந்தது அவனிடம். யாழினியுடன் பணிபுரிந்தாலும் பணி நேரங்களில் அவன் யாழினியை தன் காதலியாக எண்ணமாட்டான்... ஒரு சக கொலிக்.. அவ்வளவுதான்.. இந்த அணுகுமுறையும் யாழினிக்குப் பிடித்திருந்தது. அருள் முதலில் VC (வீடியோ கான்ஃப்ரன்ஸ்)யில்தான் பணிசெய்து கொண்டிருந்தான்... ஆனால் அவனது திறமையை நன்கு அடையாளம் கண்டுகொண்ட நிறுவனம், அவனை நிறுவனத்திற்கு வந்து பணிபுரியும்படி சொல்லியிருந்தது... இவர்கள் இருவருக்கும் காதல் எப்படி வந்தது என்பது இருவருக்குமே தெரியாத விசயம்... அதை அவர்கள் பேக்வர்ட் மெஷின் மூலமாக தெரிந்து கொள்ள என்றும் ஆசைப்பட்டதில்லை.... இருந்தாலும்....... ஏதோ ஒன்று...... யாழினியின் தந்தை அருளை வேண்டாமென்று சொல்லக் காரணமாக இருந்தது...
யாழினி தன் பின்னங்கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். ஃபாலோயர் சிப் பதிக்கப்பட்டிருந்தது... முந்தைய தினம் தான் அவளது தந்தையின் ஐடியை தன் சிப்பிலிருந்து அழித்தாள். இனி அவள் எங்கே செல்கிறாள் எனும் விபரங்கள் அவளது தந்தைக்குச் செல்ல வாய்ப்பில்லை... நடை ப்ளாட்பாரத்தில் வேகமாக நடந்தாள். தன் வாழ்வின் முக்கிய தினமும், மிகமுக்கிய முடிவும் எடுக்கப் போகும் நாள்... தன் பரம்பரையில் யாருமே செய்யாத காரியத்தை அவள் செய்யப்போகிறாள்.. தனது அலைபேசியில் மருத்துவமனைக்கான பாதையை சரிபார்த்துக் கொண்டாள். இதோ... மருத்துவமனையை அடைந்தும் விட்டாள்.
கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பலமாடிகளை அடுக்கியிருந்தது அந்தக் கட்டிடம்... 325 C ப்ளாக்கிற்குச் செல்லவேண்டும் என்று ரிஷப்ஷனில் அமர்ந்திருக்கும் ஒரு எந்திர பொம்மையிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் நேரம் என்ன சிகிச்சை ஆகிய அத்தனை விபரங்களும் அடங்கியிருந்தது. அந்த பொம்மை ஒரு ஸ்க்ராச்சிங் கார்டை அவளிடம் கொடுத்தது. யாழினி நேராக கட்டிடத்தின் பின்புறம் சென்றாள். அங்கே ஃப்ளையர்கள் இருந்தன. பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடங்கள் இந்தமாதிரி ஃப்ளையர்களை வைத்திருந்தன. உடனடியாக எந்த மாடிக்குச் செல்லவேண்டுமோ அங்கே சென்றுவிடலாம்.. நிறைய மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். யாழினி நேராக அந்த ஸ்க்ராச் கார்டை ஒரு ப்ளையருக்கு முன் அமர்ந்திருந்த பொம்மையிடம் நீட்டினாள். அது யாழினியைப் பார்த்து, " நீங்கள் மூச்சை இழுத்தும், இரத்த அழுத்தம் அதிகமாகவும் வந்திர்க்கிறீர்கள். உங்களை ஓய்வுக்குப் பின்னரே அனுமதிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு, அடுத்த மனிதரைப் பார்த்தது... யாழினி ஓய்வறைக்குச் சென்றாள்...
யாழினியின் எண்ணங்கள் மீண்டும் கண்ணைக் கட்டின... அப்பா.... அருள்மொழியோடு உண்டான காதலை மறுப்பது மிகவும் தவறு.. நான் மற்றவர்களைப் போல் பாசமின்றி வளர்ந்திருந்தால் உங்களைக் கேட்கவேண்டிய எண்ணமே இல்லை.. ஆனால் என்னால் பாசத்தையும் காதலையும் மறக்கமுடியவில்லை... வேறு வழியுமில்லை அப்பா... என்னை நீங்கள் குழாயிலிருந்து எடுத்தது முதல் இந்த இருபத்தி ஐந்து வருடங்கள் பாசமாக வளர்த்தீர்கள்.. ஆனால் அடுத்து வரும் தொண்ணூறு வருடங்கள் அருள்மொழிதான் எனக்குத் துணையாக இருப்பான்.. ஆமாம் அப்பா.... நான் அவனைத் திருமணம் செய்யப் போகிறேன்.... உங்களது பிரச்சனை அருள்மொழி ஒரு அந்நிய கிரகத்தவன் என்பதுதானே!! இதோ.... அக்கிரகத்திய முறைப்படி நான் உருமாறப் போகிறேன்.. அக்கிரகத்து பிரஜை ஆகப்போகிறேன்.. மன்னித்துவிடுங்கள் அப்பா... ஒரு மனிதனாக இருந்தால் எம் காதலை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்.. நான் ஒரு ஏலியனாக இருந்தால்???
யாழினிக்கு ஃப்ளையர் தயாராகிவிட்டது... அவளை அண்டியிருக்கும் சோகங்களோடு அவளும் பறக்கவிருக்கிறாள்.. 325 C ப்ளாக்கில் இருக்கும் மனிதர்களை ஏலியன்களாக்கும் மருத்துவமனைக்கு.................
அன்புடன்
ஆதவா...
(தமிழ்மன்றம் ரொம்ப ஸ்லோவா லோட் ஆவுது! மத்த தளங்கள் சீக்கிரமா வருது!! என்னகொடுமை இது... கதை எழுதி ஒன்றரை மணிநேரம் போராடியிருக்கிறேன்.. இப்பொழுதும் கதை பதிக்கப்பட்டிருக்கா என்பது தெரியாது..)
யாழினி C-MC சாக்லேட் நிறுவனத்தில் மேலதிகாரியாக பணிபுரிகிறாள். நல்ல அழகுவாய்ந்த முகம், திறமைகள் கொட்டிக்கிடக்கும் அவளது இளமை, எல்லாவற்றையும் விட, அவளது பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் அந்நிறுவனத்திற்கு பெருமையும், அந்நிறுவனத்திற்குத் தூணாக விளங்கும் தன்மையும் சேர்த்தது. அவளுடன் பணிபுரியும் அருள்மொழியுடன் உண்டான காதல் தான் இப்பொழுது பிரச்சனையே.. யாழினியின் தந்தை இந்த காதலுக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. யாழினியின் காதல், அவளது கண்களை மறைத்து இருந்தது.
தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள் யாழினி. அவளது கோபத்தின் சதவிகிதம் 67 % மாக இருப்பதை அது சுட்டியது.. மருத்துவரைச் சந்திக்க இன்னும் இரண்டு மணிநேரங்கள் இருக்கிறது. இப்பொழுது கிளம்பினால் சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தவாறே அலங்காரம் செய்யவிருக்கும் எந்திரனை அழைக்க, தன் கைக்கடிகாரத்தின் இடது மூலையில் இருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினாள். அவளது அறையின் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த எந்திரம் அவள் இருக்குமிடத்திற்கு வந்து அவளது அலங்கார வேலைகளை எப்பொழுதும் போல செய்யத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, அறையை விட்டு நீங்க தயாரானாள். அறைக்கதவின் தாழில் பொதிக்கப்பட்டிருந்த எண்களில் சிலவற்றை அழுத்தி தன் கட்டை விரலால் முத்திரை வைத்துவிட்டு லிஃப்டை நோக்கிச் சென்றாள்.
அருள்.... நம் காதலின் ஒவ்வொரு மூலையிலும் தெய்வீகம் அடங்கியிருக்கிறது. நம்மைப் பிரிக்க எவராலும் முடியாது. அருள்... மிசிசிபியில் நாமும் நம் குழந்தையும் மணல் வீடுகட்டி ஆடுகிறோம் பார்த்தாயா.. ஏனடா... அந்த வீட்டை கலைத்துவிட்டாய்? ... பார்..... அதோ தெரிகிறதா.. என் முதுமையிலும் உன் காதலை எப்படியெல்லாம் கொட்டுகிறாய்... நமக்குப் பின்னால் இருந்து கொண்டு நம் பிள்ளைகள் கேலி செய்வதைப் பார்த்தாயா?? ஒரு அந்நியோன்யமான குடும்பமாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேனடா.. அருள்.... அருள்.....
அவளது நினைவுகள் எல்லாம் கண்முன்னே திரைகட்டி ஓடுவதைப் போன்று காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. லிஃப்ட் நின்றது. வாசலை நோக்கி வேகமாக நடந்தாள். செல்லும் பொழுது வாசலோரத்தில் பூத்திருந்த ரோஜாவைத் தொட்டு ரசித்துவிட்டு ஏதேதோ எண்ணியவாறு மீண்டும் நடந்தாள். யாழினிக்கு நடப்பது மிகவும் பிடித்த விஷயம். அவள் மற்ற பாதசாரிகளைப் போன்று நகரும் தளங்களில் (Moving Platform) செல்லமாட்டாள். சாவகாசமாக, ஏதாவது ஒரு மின் காகிதத்தைச் சுருட்டி வைத்துக் கொண்டு மூவிங் ப்ளாட்ஃபாரங்களில் செல்லும் மனிதர்களை அவளுக்குப் பிடிக்காது... நடப்பது தேக ஆரோக்கியம் என்பதால் அவள் அதை எப்போதும் விரும்புவாள்.
அருள்மொழியைப் பற்றி சொல்லவில்லையே... யாழினியின் திறமைக்கு ஈடானவன் என்றே சொல்லலாம். ஆண்களுக்குரிய வசீகரம், வலிமை, சிலசமயம் கோபம் ஆகிய எல்லாமும் அடங்கியிருந்தது அவனிடம். யாழினியுடன் பணிபுரிந்தாலும் பணி நேரங்களில் அவன் யாழினியை தன் காதலியாக எண்ணமாட்டான்... ஒரு சக கொலிக்.. அவ்வளவுதான்.. இந்த அணுகுமுறையும் யாழினிக்குப் பிடித்திருந்தது. அருள் முதலில் VC (வீடியோ கான்ஃப்ரன்ஸ்)யில்தான் பணிசெய்து கொண்டிருந்தான்... ஆனால் அவனது திறமையை நன்கு அடையாளம் கண்டுகொண்ட நிறுவனம், அவனை நிறுவனத்திற்கு வந்து பணிபுரியும்படி சொல்லியிருந்தது... இவர்கள் இருவருக்கும் காதல் எப்படி வந்தது என்பது இருவருக்குமே தெரியாத விசயம்... அதை அவர்கள் பேக்வர்ட் மெஷின் மூலமாக தெரிந்து கொள்ள என்றும் ஆசைப்பட்டதில்லை.... இருந்தாலும்....... ஏதோ ஒன்று...... யாழினியின் தந்தை அருளை வேண்டாமென்று சொல்லக் காரணமாக இருந்தது...
யாழினி தன் பின்னங்கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். ஃபாலோயர் சிப் பதிக்கப்பட்டிருந்தது... முந்தைய தினம் தான் அவளது தந்தையின் ஐடியை தன் சிப்பிலிருந்து அழித்தாள். இனி அவள் எங்கே செல்கிறாள் எனும் விபரங்கள் அவளது தந்தைக்குச் செல்ல வாய்ப்பில்லை... நடை ப்ளாட்பாரத்தில் வேகமாக நடந்தாள். தன் வாழ்வின் முக்கிய தினமும், மிகமுக்கிய முடிவும் எடுக்கப் போகும் நாள்... தன் பரம்பரையில் யாருமே செய்யாத காரியத்தை அவள் செய்யப்போகிறாள்.. தனது அலைபேசியில் மருத்துவமனைக்கான பாதையை சரிபார்த்துக் கொண்டாள். இதோ... மருத்துவமனையை அடைந்தும் விட்டாள்.
கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பலமாடிகளை அடுக்கியிருந்தது அந்தக் கட்டிடம்... 325 C ப்ளாக்கிற்குச் செல்லவேண்டும் என்று ரிஷப்ஷனில் அமர்ந்திருக்கும் ஒரு எந்திர பொம்மையிடம் ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில் மருத்துவரின் அப்பாயிண்ட்மெண்ட் நேரம் என்ன சிகிச்சை ஆகிய அத்தனை விபரங்களும் அடங்கியிருந்தது. அந்த பொம்மை ஒரு ஸ்க்ராச்சிங் கார்டை அவளிடம் கொடுத்தது. யாழினி நேராக கட்டிடத்தின் பின்புறம் சென்றாள். அங்கே ஃப்ளையர்கள் இருந்தன. பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடங்கள் இந்தமாதிரி ஃப்ளையர்களை வைத்திருந்தன. உடனடியாக எந்த மாடிக்குச் செல்லவேண்டுமோ அங்கே சென்றுவிடலாம்.. நிறைய மனிதர்கள் பறந்து கொண்டிருந்தார்கள். யாழினி நேராக அந்த ஸ்க்ராச் கார்டை ஒரு ப்ளையருக்கு முன் அமர்ந்திருந்த பொம்மையிடம் நீட்டினாள். அது யாழினியைப் பார்த்து, " நீங்கள் மூச்சை இழுத்தும், இரத்த அழுத்தம் அதிகமாகவும் வந்திர்க்கிறீர்கள். உங்களை ஓய்வுக்குப் பின்னரே அனுமதிக்க முடியும்" என்று சொல்லிவிட்டு, அடுத்த மனிதரைப் பார்த்தது... யாழினி ஓய்வறைக்குச் சென்றாள்...
யாழினியின் எண்ணங்கள் மீண்டும் கண்ணைக் கட்டின... அப்பா.... அருள்மொழியோடு உண்டான காதலை மறுப்பது மிகவும் தவறு.. நான் மற்றவர்களைப் போல் பாசமின்றி வளர்ந்திருந்தால் உங்களைக் கேட்கவேண்டிய எண்ணமே இல்லை.. ஆனால் என்னால் பாசத்தையும் காதலையும் மறக்கமுடியவில்லை... வேறு வழியுமில்லை அப்பா... என்னை நீங்கள் குழாயிலிருந்து எடுத்தது முதல் இந்த இருபத்தி ஐந்து வருடங்கள் பாசமாக வளர்த்தீர்கள்.. ஆனால் அடுத்து வரும் தொண்ணூறு வருடங்கள் அருள்மொழிதான் எனக்குத் துணையாக இருப்பான்.. ஆமாம் அப்பா.... நான் அவனைத் திருமணம் செய்யப் போகிறேன்.... உங்களது பிரச்சனை அருள்மொழி ஒரு அந்நிய கிரகத்தவன் என்பதுதானே!! இதோ.... அக்கிரகத்திய முறைப்படி நான் உருமாறப் போகிறேன்.. அக்கிரகத்து பிரஜை ஆகப்போகிறேன்.. மன்னித்துவிடுங்கள் அப்பா... ஒரு மனிதனாக இருந்தால் எம் காதலை நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள்.. நான் ஒரு ஏலியனாக இருந்தால்???
யாழினிக்கு ஃப்ளையர் தயாராகிவிட்டது... அவளை அண்டியிருக்கும் சோகங்களோடு அவளும் பறக்கவிருக்கிறாள்.. 325 C ப்ளாக்கில் இருக்கும் மனிதர்களை ஏலியன்களாக்கும் மருத்துவமனைக்கு.................
அன்புடன்
ஆதவா...
(தமிழ்மன்றம் ரொம்ப ஸ்லோவா லோட் ஆவுது! மத்த தளங்கள் சீக்கிரமா வருது!! என்னகொடுமை இது... கதை எழுதி ஒன்றரை மணிநேரம் போராடியிருக்கிறேன்.. இப்பொழுதும் கதை பதிக்கப்பட்டிருக்கா என்பது தெரியாது..)