சசிதரன்
09-03-2009, 01:28 PM
உறக்கம் கலைக்க யாருமில்லை என்றாலும்
ஒவ்வொரு நாளும் இரவுகள் விடியும்.
எப்படியும் ஏற்பட்டுவிடும்,
தேநீர் தயாரிக்கையில் ஒன்றிரண்டு தீக்காயங்கள்.
வழக்கம் போலவே
எனக்கான கடிதங்கள் ஏதுமின்றி
வாசல் தாண்டி போவான் தபால்காரன்.
எடுத்து பரிமாற யாருமின்றி
அவசரமாய் அள்ளி உண்ணும்போது
அம்மாவின் ஞாபகம் ஏனோ தோன்றும்.
அலுவல் நேரங்களில் நண்பர்களிடம்
எத்தனை சிரித்து பேசினாலும்...
அத்தனையும் பொய்யென்றே
உள்மனம் உரைக்கும்.
சூரியன் மெல்லமாய் மறைய தொடங்கும்.
வரவேற்க யாரும் இருப்பதில்லை என்றாலும்
பூட்டிய வீடு நோக்கி கால்கள் போகும்.
இருள் பரவிய அடர்ந்த இரவில்...
நிலவின் வெளிச்சத்தில்
வாழ்க்கை என்பதே புதிராய் விளங்கும்.
நினைத்து பார்க்க நினைவுகளில்லை...
உறங்கி போனால் கனவுகளுமில்லை
எனும்போது...
ஒரு பெருமழைக்கான ஆரம்பமாய்
விழத் தொடங்கும் தூறல் போல்...
அடிமனதில் ஓர் விசும்பல் தொடங்கும்.
நான் பணிபுரியும் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பற்றி யோசிக்கும்போது கிடைத்த கரு இது. பெரும்பாலானவர்கள் சென்னையை சேராதவர்கள். வாழ்க்கை ஓட்டத்தில் உறவுகளை பிரிந்து தனிமையில் வாழ்பவர்கள். ஒவ்வொரு முறை தன் ஊரை பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ பேசும்போது, ஒரு நொடி... அவர்கள் முகத்தில் பிரகாசம் கூடிப் போகும். அடுத்த நொடியிலேயே யதார்த்தம் உணர்ந்து ஒரு விரக்தியான புன்னகையுடன் நகர்ந்து செல்வார்கள். சில புன்னகைகளும் மனம் கனக்க செய்யும் என நான் உணர்ந்த தருணங்கள் அவை. அவர்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று எழுதிய வரிகள் இவை.
ஒவ்வொரு நாளும் இரவுகள் விடியும்.
எப்படியும் ஏற்பட்டுவிடும்,
தேநீர் தயாரிக்கையில் ஒன்றிரண்டு தீக்காயங்கள்.
வழக்கம் போலவே
எனக்கான கடிதங்கள் ஏதுமின்றி
வாசல் தாண்டி போவான் தபால்காரன்.
எடுத்து பரிமாற யாருமின்றி
அவசரமாய் அள்ளி உண்ணும்போது
அம்மாவின் ஞாபகம் ஏனோ தோன்றும்.
அலுவல் நேரங்களில் நண்பர்களிடம்
எத்தனை சிரித்து பேசினாலும்...
அத்தனையும் பொய்யென்றே
உள்மனம் உரைக்கும்.
சூரியன் மெல்லமாய் மறைய தொடங்கும்.
வரவேற்க யாரும் இருப்பதில்லை என்றாலும்
பூட்டிய வீடு நோக்கி கால்கள் போகும்.
இருள் பரவிய அடர்ந்த இரவில்...
நிலவின் வெளிச்சத்தில்
வாழ்க்கை என்பதே புதிராய் விளங்கும்.
நினைத்து பார்க்க நினைவுகளில்லை...
உறங்கி போனால் கனவுகளுமில்லை
எனும்போது...
ஒரு பெருமழைக்கான ஆரம்பமாய்
விழத் தொடங்கும் தூறல் போல்...
அடிமனதில் ஓர் விசும்பல் தொடங்கும்.
நான் பணிபுரியும் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பற்றி யோசிக்கும்போது கிடைத்த கரு இது. பெரும்பாலானவர்கள் சென்னையை சேராதவர்கள். வாழ்க்கை ஓட்டத்தில் உறவுகளை பிரிந்து தனிமையில் வாழ்பவர்கள். ஒவ்வொரு முறை தன் ஊரை பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ பேசும்போது, ஒரு நொடி... அவர்கள் முகத்தில் பிரகாசம் கூடிப் போகும். அடுத்த நொடியிலேயே யதார்த்தம் உணர்ந்து ஒரு விரக்தியான புன்னகையுடன் நகர்ந்து செல்வார்கள். சில புன்னகைகளும் மனம் கனக்க செய்யும் என நான் உணர்ந்த தருணங்கள் அவை. அவர்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று எழுதிய வரிகள் இவை.