View Full Version : கலியுகம்
இன்பக்கவி
09-03-2009, 01:06 PM
கலியுகம்
அன்று
ஜனகரின் வில்லை
ராமன் முறித்தார்
இன்றும்
ராமர்கள்
முறிக்கிறார்கள்
மாமனாரின்
முதுகெலும்பை!
வரதட்சணை!
கவிதா123
மடலேறுதல், காளை அடக்குதல், இளவட்டக்கல் தூக்குதல் போல
சுயம்வரத் தேர்வுகள் இன்றிருந்தால்....???
பலருக்கு மணம் மனக்கனவாகவே...
முறிக்க முடிந்தது இன்று நம்மால் இவ்வளவுதானே!!!!
எள்ளல் கவிதைக்கு பாராட்டுகள் கவிதா123 அவர்களே!
ஓர் புன்னகை..... இதழோரம்..
வரன் தட்சணையை காவியத்தில் இணைத்து கொடுத்திருக்கிறீர்கள்
பாராட்டுக்கள்.
அமரன்
11-03-2009, 07:59 AM
பெண்ணைப் பெத்தவன் முதுகு வளைத்தவன் என்ற உண்மையைக் கவிதையில் புதைத்துள்ளீர்கள். அன்று தொட்டு இன்று தொடரும் இப்படியான கேவலங்களை உடைக்கவும் கவிதைகள் பிறக்கட்டும். வாழ்த்துகள் கவிதா.
samuthraselvam
11-03-2009, 08:05 AM
வாழ்த்துக்கள் கவி..