PDA

View Full Version : கலியுகம்



இன்பக்கவி
09-03-2009, 01:06 PM
கலியுகம்

அன்று
ஜனகரின் வில்லை
ராமன் முறித்தார்
இன்றும்
ராமர்கள்
முறிக்கிறார்கள்
மாமனாரின்
முதுகெலும்பை!
வரதட்சணை!

கவிதா123

இளசு
09-03-2009, 09:12 PM
மடலேறுதல், காளை அடக்குதல், இளவட்டக்கல் தூக்குதல் போல
சுயம்வரத் தேர்வுகள் இன்றிருந்தால்....???

பலருக்கு மணம் மனக்கனவாகவே...

முறிக்க முடிந்தது இன்று நம்மால் இவ்வளவுதானே!!!!

எள்ளல் கவிதைக்கு பாராட்டுகள் கவிதா123 அவர்களே!

ஆதவா
11-03-2009, 07:38 AM
ஓர் புன்னகை..... இதழோரம்..

வரன் தட்சணையை காவியத்தில் இணைத்து கொடுத்திருக்கிறீர்கள்

பாராட்டுக்கள்.

அமரன்
11-03-2009, 07:59 AM
பெண்ணைப் பெத்தவன் முதுகு வளைத்தவன் என்ற உண்மையைக் கவிதையில் புதைத்துள்ளீர்கள். அன்று தொட்டு இன்று தொடரும் இப்படியான கேவலங்களை உடைக்கவும் கவிதைகள் பிறக்கட்டும். வாழ்த்துகள் கவிதா.

samuthraselvam
11-03-2009, 08:05 AM
வாழ்த்துக்கள் கவி..