வசீகரன்
28-02-2009, 03:36 AM
மலர்தேசம் ஒன்று
வரவேற்க்கிறது
வெகு ஆசையுடன் ஆவலுடன்
உள் நுழைகிறேன்.....
திகட்ட திகட்ட திகழ்கிறது
அழகு அங்கே...
திரும்பிய திசையெங்கும்
வனப்பும்
சுகந்தமும் சுவைக்கிறேன்....
எண்ணிலடங்கா மலர்களின்
வண்ணங்களில் என்
எண்ணங்களை இழக்கிறேன்...
அதன் மணம்தனில்
என் நிந்தை மயக்கமுறுகிறேன்....
புதியமலர்கள் உலகமது.....
அள்ள அள்ளக் குறையாமல்
கொள்ளை போகிறேன்
அங்கே நான்....
என் ரசனைக்கு வெகுரசனை
வந்துவிட்டதாக
எண்ணிய போது...
இல்லையென
புதியமலர் ஒன்றை கண்டு
விழிகளை விரிகிறேன்....
அம்மலர் அந்த மலர்வனத்தின்
மொத்த அழகைவிட இப்பொழுது
அழகாக தெரிகிறது எனக்கு
அது அவளின் புன்னகை என்பதை
பின்பு உணர்ந்தேன்....
அந்த புன்னகையில் சிக்கி
சுற்றியுள்ள பூக்களை
மறந்து விட்டேன்...
வைத்த கண் வாங்காமல் ரசிக்கிறேன்...
அந்த புன்னகை இப்போது
சிறியதாகிறது...
அவள் புன்னகைமுகம் முறைக்கவும்
செய்கிறது....
என் சுயம் தப்புகிறது....
குற்ற உணர்வில் என் தலை
வேறு பக்கம் பார்க்கிறது.....
அந்த மலர் என்னை ஓரக்கண்களில்
முறைத்தபடி கடந்து செல்கிறது....
அந்த புன்னகைப்பூ என்னைக்கடந்து
சென்று விடுகிறது
வெகுதூரம்....
மனம் கொள்ளாமல் திரும்பி பார்க்கிறேன்......
அகன்று சென்ற அந்தமலர்
வனத்தை கடந்த தறுவாயில்
இப்போது திரும்பியது
என்னை பார்த்து மெல்லிய
புன்னகைக்கிறது....
நான் மீண்டும் என்னை
மலர்களோடு மலர்களாக
மலர்ந்து போகிறேன்........!!!
வரவேற்க்கிறது
வெகு ஆசையுடன் ஆவலுடன்
உள் நுழைகிறேன்.....
திகட்ட திகட்ட திகழ்கிறது
அழகு அங்கே...
திரும்பிய திசையெங்கும்
வனப்பும்
சுகந்தமும் சுவைக்கிறேன்....
எண்ணிலடங்கா மலர்களின்
வண்ணங்களில் என்
எண்ணங்களை இழக்கிறேன்...
அதன் மணம்தனில்
என் நிந்தை மயக்கமுறுகிறேன்....
புதியமலர்கள் உலகமது.....
அள்ள அள்ளக் குறையாமல்
கொள்ளை போகிறேன்
அங்கே நான்....
என் ரசனைக்கு வெகுரசனை
வந்துவிட்டதாக
எண்ணிய போது...
இல்லையென
புதியமலர் ஒன்றை கண்டு
விழிகளை விரிகிறேன்....
அம்மலர் அந்த மலர்வனத்தின்
மொத்த அழகைவிட இப்பொழுது
அழகாக தெரிகிறது எனக்கு
அது அவளின் புன்னகை என்பதை
பின்பு உணர்ந்தேன்....
அந்த புன்னகையில் சிக்கி
சுற்றியுள்ள பூக்களை
மறந்து விட்டேன்...
வைத்த கண் வாங்காமல் ரசிக்கிறேன்...
அந்த புன்னகை இப்போது
சிறியதாகிறது...
அவள் புன்னகைமுகம் முறைக்கவும்
செய்கிறது....
என் சுயம் தப்புகிறது....
குற்ற உணர்வில் என் தலை
வேறு பக்கம் பார்க்கிறது.....
அந்த மலர் என்னை ஓரக்கண்களில்
முறைத்தபடி கடந்து செல்கிறது....
அந்த புன்னகைப்பூ என்னைக்கடந்து
சென்று விடுகிறது
வெகுதூரம்....
மனம் கொள்ளாமல் திரும்பி பார்க்கிறேன்......
அகன்று சென்ற அந்தமலர்
வனத்தை கடந்த தறுவாயில்
இப்போது திரும்பியது
என்னை பார்த்து மெல்லிய
புன்னகைக்கிறது....
நான் மீண்டும் என்னை
மலர்களோடு மலர்களாக
மலர்ந்து போகிறேன்........!!!