நிரன்
26-02-2009, 04:05 PM
செத்துப்பிழைத்து, சொந்தவூர் தாண்டி வந்தவிடம் வேறு.
சொத்துக்களும் விட்டு, சொந்தங்களும் பிரிந்து,
வந்தவெம்மை அகதியென அடுக்கிவிட்டார்கள்.
மறு தலைமுறை தழைக்க மறுப்புமிங்கே-விதித்தார்கள்,
நம்மவரை வதைத்தார்கள்.
மறுப்புத் தெரிவித்தவர் பலர் - மறைந்தவர்,
பட்டியலில் மறைத்து விட்டார்கள்.
மாறுமா! இவ் அவலங்கள்.
தீருமா! நம் பிரச்சினைகள்.
மாறலாம்! காலங்கள் ஒரு நாள் மாற்றலாம்,
தீரலாம்! அவை தீர்கப்படலாம்!.
அதுவரை ஆண்டவன் அருள் புரியட்டும்
காலங்கள் வேகமாகச் செல்லட்டும்
புரிந்தும் புரியாத சில
மாந்தர் மனதைப் புரியவைக்கட்டும்,
நம்மில் பூரிப்புண்டாக்கட்டும்.
காத்திருப்போம், என்றும் விழிகள் பூத்திருப்போம்,
நம்மில் வலிகள் மறையட்டும்,
வலிமைகள் மட்டும் வளரட்டும்.
இனி.....
நம்முள் வாழ்வோம் சாவோம் வேண்டாம்,
வாழ்வோம் வெல்வோம் மட்டும் போதும்!
வலி(மை)களுடன்
°°நிரன்.
சொத்துக்களும் விட்டு, சொந்தங்களும் பிரிந்து,
வந்தவெம்மை அகதியென அடுக்கிவிட்டார்கள்.
மறு தலைமுறை தழைக்க மறுப்புமிங்கே-விதித்தார்கள்,
நம்மவரை வதைத்தார்கள்.
மறுப்புத் தெரிவித்தவர் பலர் - மறைந்தவர்,
பட்டியலில் மறைத்து விட்டார்கள்.
மாறுமா! இவ் அவலங்கள்.
தீருமா! நம் பிரச்சினைகள்.
மாறலாம்! காலங்கள் ஒரு நாள் மாற்றலாம்,
தீரலாம்! அவை தீர்கப்படலாம்!.
அதுவரை ஆண்டவன் அருள் புரியட்டும்
காலங்கள் வேகமாகச் செல்லட்டும்
புரிந்தும் புரியாத சில
மாந்தர் மனதைப் புரியவைக்கட்டும்,
நம்மில் பூரிப்புண்டாக்கட்டும்.
காத்திருப்போம், என்றும் விழிகள் பூத்திருப்போம்,
நம்மில் வலிகள் மறையட்டும்,
வலிமைகள் மட்டும் வளரட்டும்.
இனி.....
நம்முள் வாழ்வோம் சாவோம் வேண்டாம்,
வாழ்வோம் வெல்வோம் மட்டும் போதும்!
வலி(மை)களுடன்
°°நிரன்.