ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-02-2009, 07:24 AM
தரகர் சொன்ன வீட்டில் பெண் பார்த்துவிட்டு சொல்லி அனுப்பறோம் என்ற வழக்கமான பதிலைச் சொல்லிவிட்டு வெளியேறினார்கள் ஸ்ரீதரும் அவன் தாயாரும். மனதிற்க்குள் தரகரை திட்டித்தீர்த்தார்கள். மறுநாள் காலை தரகர் வந்து சேர்ந்தார்.
`` யோவ், ஒரு லட்சம் ரொக்கம், பத்து பவன் நகை போடுற குடும்பம் இருந்தா சொல்லு, பொண்ணு பார்த்துட்டு வர்றோமுன்னு சொன்னோம், நேத்து நீ அனுப்பி வெச்ச வீட்டுல அவங்களால அதுல பாதி கூட போட முடியாதாம், எதுக்கு அந்த மாதிரி வீட்டுக்கு எங்கள அனுப்பி வெச்சு எங்க நேரத்த வேஸ்ட் பண்ணின ?’’ தரகரது முகத்தில் அறைந்தார்போல கேட்டாள் ஸ்ரீதரின் தாயார். தரகரின் முகத்தில் சோகம் நிழலாடியது.
`` என்ன மன்னிச்சிடுங்க, அந்த வீட்டுல அவங்களால அவ்வளவு தான் போட முடியும், இத எல்லா மாப்பிள்ளை வீட்டுலயும் சொல்றேன், ஆனா யாரும் அந்த வீட்டுல பொண்ணு பார்க்க போகல, வரதட்சணை குறைவுன்னு தன்ன எந்த ஒரு மாப்பிள்ளையும் வந்து பொண்ணு பார்த்துட்டு போகலியேன்னு அந்த பொண்ணு வருந்தக்கூடாதுன்னுதான் உங்கள அனுப்பி வெச்சேன். சொல்லிவிட்டு திரும்பி நடந்த தரகரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் ஸ்ரீதரும் அவன் தாயாரும்.
`` யோவ், ஒரு லட்சம் ரொக்கம், பத்து பவன் நகை போடுற குடும்பம் இருந்தா சொல்லு, பொண்ணு பார்த்துட்டு வர்றோமுன்னு சொன்னோம், நேத்து நீ அனுப்பி வெச்ச வீட்டுல அவங்களால அதுல பாதி கூட போட முடியாதாம், எதுக்கு அந்த மாதிரி வீட்டுக்கு எங்கள அனுப்பி வெச்சு எங்க நேரத்த வேஸ்ட் பண்ணின ?’’ தரகரது முகத்தில் அறைந்தார்போல கேட்டாள் ஸ்ரீதரின் தாயார். தரகரின் முகத்தில் சோகம் நிழலாடியது.
`` என்ன மன்னிச்சிடுங்க, அந்த வீட்டுல அவங்களால அவ்வளவு தான் போட முடியும், இத எல்லா மாப்பிள்ளை வீட்டுலயும் சொல்றேன், ஆனா யாரும் அந்த வீட்டுல பொண்ணு பார்க்க போகல, வரதட்சணை குறைவுன்னு தன்ன எந்த ஒரு மாப்பிள்ளையும் வந்து பொண்ணு பார்த்துட்டு போகலியேன்னு அந்த பொண்ணு வருந்தக்கூடாதுன்னுதான் உங்கள அனுப்பி வெச்சேன். சொல்லிவிட்டு திரும்பி நடந்த தரகரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் ஸ்ரீதரும் அவன் தாயாரும்.