சசிதரன்
17-02-2009, 06:39 AM
உறங்க முடியாத கனவுகள் தந்தாய்...
தாயென தாலாட்டி உறக்கமும் தந்தாய்...
வாழ்வு சுமையென்றேன்... பகிர்ந்து கொள் என்றாய்...
வானவில் வண்ணமாய் மாற்றியும் சென்றாய்.
இரவு விழித்ததில்லை... விழிக்க வைத்தாய்...
கவிதை படித்ததில்லை... எழுத வைத்தாய்...
இத்தனை அன்பை மொத்தமாய் உணர்ந்ததில்லை...
என்னுள் நுழைந்து.... நீயே உணர்த்தினாய்...
கனவிலும் காணாத உலகம் தந்தாய்...
நினைத்தும் பார்க்காத நினைவுகள் தந்தாய்...
மழைக்கு ஒதுங்கினேன்... கைப்பிடித்து அழைத்தாய்...
துளித்துளியாய் கரைய வைத்து... உயிர் வரை நனைத்தாய்...
சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
இசையென பரவியே என் நெஞ்சம் நிரப்பினாய்...
பகிர்தல் மூலம் எனை முழுமையாக்கினாய்...
பார்வைகள் கொண்டே கோபம் விலக்கினாய்...
புன்னகை மூலமே பூக்கள் பரப்பினாய்...
உலகம் என்பதே எனக்காய் மாற்றினாய்...
இத்தனை செய்து பின் என்னிடம் கேட்கிறாய்...
உன்னை எதற்காக பிடிக்குமென்று.
தாயென தாலாட்டி உறக்கமும் தந்தாய்...
வாழ்வு சுமையென்றேன்... பகிர்ந்து கொள் என்றாய்...
வானவில் வண்ணமாய் மாற்றியும் சென்றாய்.
இரவு விழித்ததில்லை... விழிக்க வைத்தாய்...
கவிதை படித்ததில்லை... எழுத வைத்தாய்...
இத்தனை அன்பை மொத்தமாய் உணர்ந்ததில்லை...
என்னுள் நுழைந்து.... நீயே உணர்த்தினாய்...
கனவிலும் காணாத உலகம் தந்தாய்...
நினைத்தும் பார்க்காத நினைவுகள் தந்தாய்...
மழைக்கு ஒதுங்கினேன்... கைப்பிடித்து அழைத்தாய்...
துளித்துளியாய் கரைய வைத்து... உயிர் வரை நனைத்தாய்...
சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
இசையென பரவியே என் நெஞ்சம் நிரப்பினாய்...
பகிர்தல் மூலம் எனை முழுமையாக்கினாய்...
பார்வைகள் கொண்டே கோபம் விலக்கினாய்...
புன்னகை மூலமே பூக்கள் பரப்பினாய்...
உலகம் என்பதே எனக்காய் மாற்றினாய்...
இத்தனை செய்து பின் என்னிடம் கேட்கிறாய்...
உன்னை எதற்காக பிடிக்குமென்று.