PDA

View Full Version : கருவுடன் வேரறுப்பது என்பது இதுதானோ.



அமரன்
15-02-2009, 09:48 AM
ஈழ விவகாரம் தொடர்பாக மன்றில் கதைக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், ஈழம் என்பதைத் தாண்டியும் எந்த ஒரு மனிதனையும் (வ)தைக்கும் வகையில் அமைந்த செய்தி. ஈழமைந்தனாக, தமிழனாக அல்லாமல் ஒரு மனிதனாக உயிரை உலுக்கிய செய்தி.

வன்னியிலிருந்து வவுனியா வந்த மக்களில் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்படுகிறதாம். எப்படிச் செய்யப்படுகிறது என்பதை அறியஇங்கே (http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e) செல்லுங்கள்.

அன்புரசிகன்
15-02-2009, 10:05 AM
இதற்கேன் கவலை.. இருக்கவே இருக்கு அகிம்சா வழிப்போராட்டம். நாம் அதை மட்டும் செய்வோம்....

:sauer028:

நிரன்
15-02-2009, 10:15 AM
உலகத்தைப் பார்க்கு முன்பே கருக்கலைப்புக்கு கொடுமைப்படுத்தும் இவ் அவலம் இலங்கையில் மட்டுந்தான் நடக்கிறது... இதை விட வேதனை தரும் சம்பவம் வேறு எது அண்ணா!
:sauer028::sauer028:

பாரதி
15-02-2009, 10:54 AM
இன்றைய மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் இச்செய்தியைப் பார்த்தேன். என்னவென்று சொல்ல..? பல நாடுகளின் வேண்டுகோள், செஞ்சிலுவைச்சங்கம் என எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு, திட்டமிட்டு செயலாற்றுவது என்பதை கடைபிடிக்கிறார்கள் போலும். மக்கள் தொலைக்காட்சியை அங்கே ஒளிபரப்பக்கூடாது என்றும் ஆணை இடப்பட்டிருக்கிறதாம். இப்படியே போனால்.......???

ஓவியன்
15-02-2009, 12:17 PM
எல்லை மீறுகின்றன எல்லாமே....!!

தூயவன்
15-02-2009, 01:26 PM
நானும் படித்தேன்.. என்ன செய்வது... வேதனைப் படுவதை விட.... நிம்மதியாய் தூங்கி பல நாட்கள் ஆகி விட்டது.